உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கல்வெட்டியல் படிப்பு டிச., 30 வரை அவகாசம்

கல்வெட்டியல் படிப்பு டிச., 30 வரை அவகாசம்

சென்னை:உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில், ஓராண்டு கால கல்வெட்டியல் பட்டயப் படிப்புக்கு, டிச., 30க்குள் விண்ணப்பிக்கலாம்.சென்னை தரமணியில் உள்ள உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில், ஓராண்டு கால கல்வெட்டியல் மற்றும் அகழாய்வியல் குறித்த ஓராண்டு பட்டயப் படிப்பு நடத்தப்படுகிறது. இந்த கல்வியாண்டுக்கான சேர்க்கை தற்போது துவங்க உள்ளது. அடுத்தாண்டு ஜனவரியில் வகுப்பு துவங்க உள்ளது. இதில் சேர ஆர்வமுள்ளோர், www.ulakaththamizh.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, உரிய கட்டணத்துடன், டிச., 30க்குள், 'இயக்குனர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மை சாலை, மையத் தொழில்நுட்ப பயிலக வளாகம், தரமணி, சென்னை -- 113' என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் விபரங்களுக்கு, 044 - 2254 2992 என்ற தொலைபேசி எண்ணிலோ, 95000 12272 என்ற மொபைல் போன் எண்ணிலோ அல்லது, gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை