உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண்கள் பாதுகாப்பு துளியும் இல்லாத ஆட்சி: இ.பி.எஸ் கண்டனம்

பெண்கள் பாதுகாப்பு துளியும் இல்லாத ஆட்சி: இ.பி.எஸ் கண்டனம்

சென்னை: 'திமுக ஆட்சி என்பது குறிப்பாக குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு துளியும் இல்லாத ஆட்சி' என்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.பழனிசாமி அறிக்கை:கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள்:-செங்கல்பட்டில் ஓடும் பேருந்தில் பச்சிளம் குழந்தையான 5 வயது சிறுமிக்கு கூட பாலியல் தொல்லை-பவானி அருகே சிறுமிக்கு பட்டறை உரிமையாளரால் பாலியல் வன்கொடுமை-பரமக்குடியில் பட்டப்பகலில், நடுரோட்டில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை-மயிலாடுதுறையில் ஆசிரியைக்கு 25 இடத்தில் கொடூரமான முறையில் கத்திக்குத்துஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி என்பது யாருக்கும், குறிப்பாக குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு துளியும் இல்லாத ஆட்சி என்பதே நாள்தோறும் வரும் செய்திகள் சொல்லும் உண்மை.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது என்பதை தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். முதல்வர் சட்டம் ஒழுங்கை காப்பதில் எவ்வித கவனமும் செலுத்தாமல் அலட்சியமாக இருப்பதால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கின்றது.நாள்தோறும் அரங்கேறும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எந்த பதிலும் சொல்லாமல் ஸ்டாலின்,, மக்களுக்கு துளியும் சம்மந்தமில்லாத விஷயங்களை முன்னிலை படுத்தி, இதுபோன்ற சம்பவங்களை கடந்துவிட முனைவது, தமிழ்நாட்டின் மகளிருக்கு இழைக்கின்ற மன்னிக்கமுடியாத துரோகம்! இது கடும் கண்டனத்திற்குரியது.சட்டம் ஒழுங்கையும், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பையும் உறுதிசெய்ய அந்த இரும்புக்கரத்தின் துருவைத் துடைத்தெறிந்து செயல்படுமாறு 'போலி போட்டோஷூட் அப்பா'வை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு பழனிசாமி அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

K.n. Dhasarathan
மார் 06, 2025 21:11

உங்கள் ஆட்சியில் 1. பொள்ளாச்சி பாலியல் கொலை வழக்கு இன்னும் இழுத்துக்கொண்டு இருக்கு , 2. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஆ.தி.மு. க அமைச்சர்களே சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள், இது ஈ.பி.எஸ்.க்கு தெரியும், இருந்தும் மறைக்கிறார், , 3. தூத்துக்குடி துப்பாக்கி சூடு நானே டீ. வி .யில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்கிறார் ஈ.பி.எஸ்., நம்ப முடியுமா போன்ற சிறப்பான, சம்பவங்கள் இன்னும் பல, நடந்தன, அதற்க்கு என்ன பதில் ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை