வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நீங்கள் ஆட்சிக்கு வந்து வந்து நடவடிகை எடுத்ததால் ..உண்டு EPS
சென்னை: ''மக்களை மிரட்டுவது, வன்முறையை கட்டவிழ்த்து விடுவது , சட்டத்தை மீறி செயல்படுவதை எல்லாம் உடனடியாக கைவிட வேண்டும் என ஸ்டாலின் அரசை எச்சரிக்கிறோம்'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: விருதுநகர் மாவட்டம் சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், நிவாரணம் கோரி போராடிய மக்களைப் பார்த்து 'ஒழுங்கா இருக்கணும், இல்லனா வேற மாதிரி ஆகிடும்' என்று விருதுநகர் எஸ்.பி. மிரட்டியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி? மடப்புரம் அஜித்குமார் மாதிரியா? பட்டாசு ஆலைப் பாதுகாப்பை உறுதி செய்யும் நிர்வாகத் திறன் இல்லை; போராடும் மக்களின் கோரிக்கையைக் கேட்கக் கூட மனமில்லை; மக்களை மிரட்டவும், அச்சுறுத்தவும் மட்டும் முதல்வர் அரசின் குரல்கள் உயர்கின்றனவா?https://x.com/EPSTamilNadu/status/1940630205800108513வரலாற்றுப் பாசிசம் தோற்றுவிடும் ஸ்டாலின் அரசின் கொடுங்கோன்மையிடம்!மக்களை மிரட்டுவது, வன்முறையை கட்டவிழ்த்து விடுவது, சட்டத்தை மீறி செயல்படுவதை எல்லாம் உடனடியாக கைவிட வேண்டும் என ஸ்டாலின் மாடல் அரசை எச்சரிக்கிறோம். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.
நீங்கள் ஆட்சிக்கு வந்து வந்து நடவடிகை எடுத்ததால் ..உண்டு EPS