உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதிதாக கட்சி தொடங்குபவர்கள் கூட தி.மு.க.,வை எதிர்க்கின்றனர்: முதல்வர் ஸ்டாலின்

புதிதாக கட்சி தொடங்குபவர்கள் கூட தி.மு.க.,வை எதிர்க்கின்றனர்: முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'புதிதாக கட்சி தொடங்குபவர்கள் கூட தி.மு.க., அழிய வேண்டும் என பேசுகின்றனர். தி.மு.க., வளர்வது சிலருக்கு பிடிக்கவில்லை என்பதால் அவர்கள் எதிர்க்கின்றனர்' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.சென்னை, கொளத்தூரில் ரூ.2.85 கோடி மதிப்பில் முதல்வர் பதிப்பகத்தைத் திறந்து வைத்து, பணியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார். பின்னர் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:எல்லா வகையிலும் தமிழக மாணவர்களை உயர்த்துவோம். இதுதான் திராவிட மாடல் அரசின் நோக்கம். நீட் தேர்வு அனிதாவின் கனவை சிதைத்துவிட்டது. அவரது உயிரை பறித்துவிட்டது. நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டம் ஒருபுறம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pzrn2qg6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

வாக்குறுதிகள்

நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம். நீட் தேர்வுக்கு எதிரான தமிழகத்தின் குரலுக்கு மத்திய அரசு நிச்சயம் பணிய தான் போகிறது. தொழில் வளர்ச்சியில் முன்னணி மாநிலமாக தமிழகம் உள்ளது. ஆட்சியில் ஏதுவும் நடக்க வில்லை என சிலர் குறை சொல்கின்றனர். தேர்தலின் போது, அளித்த வாக்குறுதிகளை பெரும்பாலும் நிறைவேற்றி விட்டோம். தமிழக மாணவர்களுக்காக ஒவ்வொரு திட்டமாக அரசு பார்த்து பார்த்து செய்து வருகிறது.

விஜய்-ஐ சாடிய ஸ்டாலின்

திட்டங்களை எளிதில் அறிவிக்கலாம். நிதியைக் கூட ஒதுக்கிவிடலாம். ஆனால் கண்காணிக்க வேண்டும். திட்டங்களை முறையாக, கண்காணித்து நிறைவேற்றுகிறோம் என்பது நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறோம். திராவிட மாடல் அரசின் செயலால் தொழில்முனைவோர் தமிழகத்தை நோக்கி ஆர்வமுடன் வருகிறார்கள். புதிதாக கட்சி தொடங்குபவர்கள் கூட தி.மு.க., அழிய வேண்டும் என பேசுகின்றனர்.

அவசியமில்லை

தி.மு.க., வளர்வது சிலருக்கு பிடிக்கவில்லை என்பதால் அவர்கள் எதிர்க்கின்றனர். வாழ்க வசவாளர்கள் என அண்ணாதுரை கூறியதை நினைவில் வைத்து செயல்படுகிறோம். வசவாளர்களுக்கு பதிலளித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. எங்கள் பணி மக்களுக்கானது. தேவையில்லாமல் எல்லோருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. மூன்றரை ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 52 )

Matt P
நவ 05, 2024 23:33

தி.மு.க., வளர்வது சிலருக்கு பிடிக்கவில்லை என்பதால்.....திமுக இன்னும் வளரலையா?


Mani . V
நவ 05, 2024 12:53

உங்களை எதிர்க்ககூடாத அளவுக்கு உங்கள் கட்சி யோக்கியமான, நேர்மையான கட்சி இல்லையே சார்.


Mani . V
நவ 05, 2024 06:20

விஷச் செடியை அழிக்க நினைப்பது தவறா முதல்வர் ஐயா?


தமிழ்வேள்
நவ 04, 2024 20:55

ஐயா விடியலு, நமக்கு தெரிஞ்ச சினிமா நடிகைகள் ரெண்டு பேரை சோசப்பு கட்சிக்குள் இறக்கி விட்டால் சோலி முடிந்தது...நம்ம கட்சிக்கு தெரியாத பப்பரக்கா டிரிக்கா? கட்டுமரம் உனக்கு கொடுத்த டிரெயினிங் போதாது போல...தெரியலைன்னா வாழும் கலைஙர் டொரை கிட்ட கேளேன் ஜூப்பர் ஐடியா எல்லாம் அள்ளி தெளிக்கும்..


Nagarajan S
நவ 04, 2024 20:40

ஆஹா தேர்தலின் போது கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டீர்களா? காஸ் விலை , பெட்ரோல் விலை குறைப்பு, மாதவாரியான மின்சார பில் கணக்கெடுப்பு, மதுக்கடைகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைப்பு, எதையும் செய்யவில்லை. ஆனால் பால் விலை, வருடாவருடம் மின்கட்டணம், வீட்டு வரி ஏற்றம், பதிவுக்கட்டணம் மானாவாரியாக ஏற்றம் இவைகளைத்தான் நடைமுறைப்படுத்தி இருக்கிறீர்கள். இதெற்கெல்லாம் 2026 சட்டசபை தேர்தலில் மக்கள் பதில் சொல்வார்கள்.


Murthy
நவ 04, 2024 17:10

அண்ணா தொடங்கிய திமுக இப்போது இல்லை....கோபாலபுர கூட்டம் நடத்தும் திமுக......மற்றும் கொத்தடிமைகள் .......


என்றும் இந்தியன்
நவ 04, 2024 17:06

இன்று நமக்கு வந்த வாட்ஸாப்ப் நடிகர் விஜயின் கட்சி முழுக்க முழுக்க மிஷரிகளின் ஆதரவுடன் ஆரம்பிக்கப் பட்டுள்ளது என்பதற்கான ஆதாரங்கள் அறிவாலய உளவு துறையால் கண்டறியப் பட்டுள்ளதாக கூறப் படுகிறது. கிருத்துவ பின்னணியில் செயல்படும் காங்கிரசின் பங்களிப்புடன் நடத்தப்படும் ஒரு நாடகம் இது என்று கூறப் படுகிறது. கொஞ்ச நாளாகவே, தமிழக காங்கிரஸ் கட்சி திமுக வை விட்டு விலகி சென்று வந்துள்ளது. கத்தோலிக்க மிஷனரிகளுக்கு ஆட்சியை பிடிக்க ஒரு பலமான ஆள் தேவைப்பட்டது. தமிழக காங்கிரசுக்கு திமுகவை விட்டு ஒதுங்கி இருந்து பலம் நிரூபிக்க ஒரு கூட்டனி தேவைப்பட்டது. இருவரும் சேர்ந்து தேர்ந்து எடுத்த பகடை காய் நடிகர் விஜய். இது சோனியா காங்கிரசின் பலமான திட்டமிடல் மற்றும் ஆசீர்வாதத்துடன் அரங்கேறி வருவதாக கூறப்படுகிறது. மாநாட்டில் 70 கோடி பணம் செலவு செய்யப் பட்டதாகவும், பணம் முழுக்க இறைத்ததும் காங்கிரஸ்தான் என்றும் கூறப் படுகிறது. ஒரு இறக்குமதி காருக்கு கட்ட வேண்டிய சில லட்சம் வரியை கூட கட்ட மறுத்து, நீதிமன்றம் சென்ற நடிகர் விஜய், 70 கோடி மாநாட்டுக்கு செலவு செய்து விடுவாரா என்ன? முதலில் டச்சுகாரர்கள், பின்னர் பிரஞ்சுகாரர்கள், அதன் பின்னர் வெள்ளைகாரர்கள் ஆதிக்கம் செலுத்திய இந்த மண்ணின் சாபக்கேடு இன்னமும் விட்டு விலக வில்லை. இப்போது, சினிமாதுறை மிஷனரிகளை களம் இறக்கி, கிருத்துவ ஆட்சியை நிலைநிறுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு உடந்தை திருமாவளவன். சிறிது காலமாகவே, ஆட்சியில் பங்கு வேண்டும் என்று திருமாவளவன் கட்சி கேட்டு வந்து உள்ளது. அதை திமுக தர மறுத்தால், 2026 பொது தேர்தலில், விஜய் உடன், காங்கிரஸ், மற்றும் சிறுத்தைகள் கட்சி ஒன்றாக கூட்டணி அமைத்து போட்டி போடுவதை தடுக்க முடியாது. விஜய் ஒரு கிருத்துவர். அவர் ஒரு மதம் சார்ந்த கட்சியாகத்தான் த வெ க வை ஆரம்பித்துள்ளனர். இந்த கட்சியின் வண்ணமும் நட்சத்திரங்களும் ரொம்ப ஜாக்கிரதையாக கிருத்துவ பின்னணியில் வடிவமைக்கபட்டுள்ளது. சிவப்பும் தங்க நிறமும். சிவப்பு லெப்டிஸ்ட்..தங்க மஞ்சள் நிறம் சர்ச்சின் நிறம். 28 நட்சத்திரங்கள் பைபிளில் குறிப்பிடபட்டுள்ளது. இரண்டு யானைகள் கிருத்தவத்தை பற்றி ஜான் பாடிகோம்ப் என்பவர் எழுதிய, அறையில் யானைகள் என்ற புத்தகத்தில் உள்ள குறியீடு. ஆனால் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று இந்து மத மக்களை மு.....ஆக்குகிறார்கள். விஜய் மாநாட்டு பந்தலில் வைக்கப்பட்டிருந்த சேர, சோழ பாண்டியர்கள், வேலு நாச்சியார் கட்டவுட்களில் இந்து அடையாளம் அழித்து இருந்தது இதற்கு அத்தாட்சி. இதற்குமுன் வள்ளுவருக்கு காவி, உத்ராட்சம், பூணூல் மறுத்து, வெள்ளை உடுத்தி கிருத்துவர் ஆக்கும் முயற்சி நடைபெற்றது என்பது அனைவரும் அறிந்தது தான். காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க போட்ட திட்டத்தில், விஜய்க்கும் உதயநிதிக்குமான போட்டி காரணமாக, விஜய் வீழ்ந்து விட்டார். நடிகனை வைத்து மக்களை எளிதாக மு... ஆக்க முடியும் என்பதை அரசியல் கட்சிகள் புரிந்து வைத்து உள்ளார்கள். தமிழன் குறிப்பாக சினிமாவுக்கு அடிமை ஆன கூட்டம் இளிச்சவாயனாகவே என்றென்றும் இருந்து வருகிறான்.


Sainathan Veeraraghavan
நவ 04, 2024 16:52

திமுகவை மக்கள் விரும்புகிறார்கள் என்று ஸ்டாலின் சொல்லி தன மனதை ஆறுதல் படுத்தி கொள்ள வேண்டியது தான். திமுகவினர் ஒரு தில்லு முல்லு கூட்டம். தமிழகத்தை மொட்டை அடிக்காமல் திமுக ஓயாது. எங்கு பார்த்தாலும் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர் குலைவு. லஞ்சம், கனிமவள கொள்ளை, நில அபகரிப்பு, இவைகள் திமுக ஆட்சியில் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளன. இந்த லட்சணத்தில் இருக்கும் ஆட்சியை பற்றி திரு. ஸ்டாலினும் அவர் மந்திரிகளும் மட்டுமே மகிழ்ச்சி அடையமுடியும். தமிழர்களின் தலை எழுத்து. பணம் வாங்கி வோட்டு போட்டதற்கு அனுபவிக்கிறார்கள்


Rajarajan
நவ 04, 2024 16:32

திராவிடத்தை எதிர்க்கவில்லை. திராவிடயிசத்தை தான் எதிர்க்கிறோம். இது எப்படி இருக்கு ? நீங்க ஊழல் செய்யாமல் இருந்தால், உங்கள் வாரிசுகளை அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் சேர்த்தால், பாதி எதிர்ப்பு குறையும். செய்வீர்களா ?? இல்லனா, வாங்கி கட்டிக்கோங்க.


V RAMASWAMY
நவ 04, 2024 16:31

பதில் சொல்ல தேவையில்லை என்றால் பதில் தெரியவில்லை, அல்லது அச்சம். உண்மையில் தி மு கவின் மீது வெறுப்பு அதிகரிக்கிறது என்று இவரே சொல்லும்பொழுது பய ஜுரம் வந்துவிட்டது என்று தெரிகிறது, வங்கக்கடல் புயல் போல் சின்னம் ஆரம்பம், சூறாவளி எப்பொழுது வேண்டுமானாலும் தாக்கலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை