நிர்வாகிகள் தேர்வு
சென்னை: தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின், மாநில தலைவராக அமிர்த குமார், போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாநில துணை தலைவர்களாக, அ.வெங்கடேசன், நா. செந்தில், கோ. சசீந்தரன், டி.கே. சிவக்குமார், ஆர்.சி.எஸ். குமார், மு.சரவணக்குமரன், க.வாசுகி, ஜெ. கல்பனாத்ராய் ஆகியோரும், மாநில அமைப்பு செயலராக, செ.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளராக, வே. திரவியத்தம்மாள் உள்ளிட்டோர் போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டனர்.