உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மார்க் குறைந்தால் 5, 8ம் வகுப்பில் பெயில்: சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் அமலுக்கு வந்தது

மார்க் குறைந்தால் 5, 8ம் வகுப்பில் பெயில்: சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் அமலுக்கு வந்தது

சென்னை : ஐந்து மற்றும் 8ம் வகுப்புகளில், குறைவான மதிப்பெண் பெறும் மாணவர்களை பெயிலாக்கும் முறை, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் அமலுக்கு வந்துள்ளது. 'எங்கள் குழந்தை குறைவான மதிப்பெண் எடுத்தால் பெயில் ஆக்க சம்மதிக்கிறேன்' என, பெற்றோரிடம் பள்ளிகள் ஒப்புதல் கடிதம் பெற்று வருகின்றன.கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை, 'பெயில்' ஆக்கக்கூடாது என்ற நடைமுறை, இதுவரை அமலில் இருந்தது. தேசிய கல்விக் கொள்கை 2020ல், அந்த விதி திருத்தப்பட்டது. அதன்படி, மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்புகளில், தேர்ச்சி சதவீதத்தை விட குறைவான மதிப்பெண் பெறும் மாணவர்களை, 'பெயில்' ஆக்கலாம். இந்த நடைமுறை, 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு அமலுக்கு வந்துள்ளது. இவ்விபரத்தை, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோரிடம் தெரிவித்து, அவர்களின் சம்மத கடிதம் பெறப்படுகிறது.

இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: மத்திய கல்வி அமைச்சகம், இந்தாண்டு ஜனவரி, 15ல், பழைய கட்டாய கல்வி சட்டத்தின், 16, 38ம் விதிகளில் இருந்த, 'கட்டாய தேர்ச்சி'யை திருத்தியது.இதுகுறித்த கடிதத்தை, மார்ச் 18ம் தேதி பள்ளிகளுக்கு அனுப்பியது. இந்த ஆண்டு முதல், தேர்ச்சி பெறத் தேவையான மதிப்பெண்கள் பெறாவிட்டால், 'பெயில்' ஆக்க வேண்டும். அதை பெற்றோருக்கு தெரிவித்து, ஒப்புதல் பெற வேண்டும் என, மத்திய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படியே, கடிதத்தில் கையெழுத்து பெற்று வருகிறோம். அதேநேரம், சராசரியை விட குறைவான கற்றல் திறன் உள்ள மாணவர்களுக்கு, தனிப்பயிற்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம். ஆண்டு இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், மீண்டும் தேர்வு நடத்தி, அதில் வாய்ப்பு வழங்க வேண்டும் என, அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது. அதிலும் தேர்ச்சி பெறாத மாணவர்களை மட்டுமே, அதே வகுப்பில் மீண்டும் படிக்க அனுமதிக்க வேண்டும் என, சி.பி.எஸ்.இ., வலியுறுத்தி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.பெற்றோர் கூறுகையில்,''பள்ளி நிர்வாகம் கேட்பதால், அனைத்து பெற்றோரும் சம்மத கடிதம் கொடுக்கின்றனர். தனியார் பள்ளி என்பதால், சம்மதம் இல்லை என்று தெரிவிக்க இயலாத நிலை உள்ளது. இதை பயன்படுத்தி, தனியார் பள்ளிகள், மதிப்பெண் குறைவாக வாங்கும் குழந்தைகளை, வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என கட்டாயப்படுத்தும் நிலை ஏற்பட்டு விடக்கூடாது,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தேசமும் தெய்வீகமும்
மே 02, 2025 12:41

தனியார் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்ப்பதே அவர்களுக்கு நல்ல தரமான கல்வி அறிவு கிடைக்க கிடைக்கும் என்று தான்… அதிலும் அரசாங்க பள்ளிகள் போல ஆல் பாஸ் செய்தால் எப்படி… இதற்க்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கனுமாம் கல்வி அமைச்சர் அறிவு இல்லாத மகேசு சொல்கிறார்..


visu
மே 02, 2025 10:45

நன்கு படிக்க வாய்ப்ப ஏற்படுத்தி கொடுக்கவேண்டும் படிக்காமலே பாஸ் ஆகலாம் என்று சொன்னால் யார் படிப்பார்கள் அதுபோல் பெற்றோர் தான் படிக்க வைக்க வேண்டும் என்றால் ஆசிரியர்கள் எதேர்க்கு படிப்பறிவில்லாத குழந்தைகளை படிக்க முடியாதா. அதேபோல் பள்ளிகளில் அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒழுக்கத்தை சொல்லித்தருகிறார்கள் எப்படி சாலையை கடப்பது மற்றவர்களிடம் எப்படி மரியாதையோடு பழகுவது ட்ராபிக் சிக்னலை மதிப்பதே அவசியம் என்று பலவும் சொல்லித்தருகின்றனர் நாம் பள்ளிகளில் நாத்திக கருத்தையும் பகுத்தறிவு என்ற பெயரில் ஒழுக்க கேட்டையும் கற்பிக்கிறோம்


sugumar s
மே 02, 2025 09:16

தயவு செய்து பெயில் ஆனவங்க யாரும் தற்கொலை பண்ணிக்காதீங்க . அப்புறம் நீட் மாதிரி இதுக்கும் போராடனும்


S BASKAR
மே 02, 2025 08:15

5&8 ம் வகுப்பில் மாணவர்கள் தேர்ச்சி பெறா விட்டால், அந்த அளவிற்கு மோசமாக பாடம் நடத்திய பள்ளியின் லைசென்ஸ் ரத்து செய்ய படும் என்று உத்தரவு பிறப்பிக்கலாம்


VENKATASUBRAMANIAN
மே 02, 2025 07:55

சரியான முடிவு. படிப்பில் சமரசம் கூடாது. கூடுதல் வசதிகள் செய்து கொடுத்து படிக்க வைக்க வேண்டும். அப்போதுதான் எதிர்கால தலைமுறை நல்லவிதமாக உருவாகும்.


Kothandaraman Ramanujam IITM
மே 02, 2025 07:09

சரியான செயல், எழுத படிக்கச் தெரியாம காலேஜ் வரை வந்து கல்வித்துறைக்கு கஷ்டம் கொடுத்த கேசுகளும் உண்டு


முக்கிய வீடியோ