உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குடும்ப கட்டுப்பாடு செய்ததால் தமிழகத்திற்கு ஆபத்து: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

குடும்ப கட்டுப்பாடு செய்ததால் தமிழகத்திற்கு ஆபத்து: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தஞ்சாவூர்: ''குடும்ப கட்டுப்பாடு செய்த காரணத்தினால், தமிழகத்திற்கு ஒரு ஆபத்து வந்து இருக்கிறது. பார்லிமென்டில் தமிழக தொகுதிகள் குறையும் நிலை வந்து இருக்கிறது'' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.தஞ்சாவூரில், நடந்த கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நாட்டிலேயே முதன் முறையாக சுயமரியாதை திருமணங்களை அங்கீகரித்து தமிழகம் தான் சட்டமாக்கியது. உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும். நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கோரிக்கை. தமிழுக்கு செம்மொழி என்ற பெருமையை தேடி தந்தவர் கருணாநிதி. பெற்றோர் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்ட வேண்டும். பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்று தற்போது யாரும் வாழ்த்துவது இல்லை. இதற்கு காரணம், தவறாக புரிந்து கொண்டு, 16 குழந்தைகளை பெற்று கொள்ள கூடாது என்பதற்காக சொல்வதற்கு தயங்குகின்றனர். குழந்தைகள் இன்று அதிகம் பெற்று கொள்வதற்கு நல்ல நிலை உருவாகி இருக்கிறது. மக்கள் தொகை அடிப்படையில், பார்லிமென்டை பிரித்து கொடுக்கிறார்கள். குடும்ப கட்டுப்பாடு செய்த காரணத்தினால், தமிழகத்திற்கு ஒரு ஆபத்து வந்து இருக்கிறது. பார்லிமென்டில் தமிழக தொகுதிகள் குறையும் நிலை வந்து இருக்கிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 99 )

VSMani
ஜூலை 09, 2025 10:24

குடும்ப கட்டுப்பாடு செய்தால் தமிழகத்திற்கு ஆபத்தில்லை. ஆனால் அரசியல்வாதிகளுக்குதான் ஆபத்து. ஏனென்றால், அதிக பிள்ளைகள் பிறக்காவிட்டால் பிள்ளைகள் வளர்ந்து டாஸ்மாக் போகமாட்டார்கள், மது ஆலை அரசியல்வாதிகளுக்கு பணம் கிடைக்காது. மது ஆலைகளை மூடவேண்டும். அரசியல்வாதிகள் நடத்தும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல ஆட்கள் இருக்கமாட்டார்கள். எனேவே அரசியல்வாதிகள் நடத்தும் தனியார் பள்ளி, கல்லூரிகளை இழுத்து மூடவேண்டும். அரசியல்வாதிகள் நடத்தும் தனியார் தொலைகாட்சி பார்க்க ஆட்கள் இருக்கமாட்டார்கள். அவைகளை இழுத்து மூடவேண்டும். அரசியல்வாதிகள் நடத்தும் தனியார் மருத்துவமனைகளுக்கு போக ஆட்கள் இருக்கமாட்டார்கள். அதை இழுத்து மூடவேண்டும். இப்படியாக அரசியல்வாதிகளுக்கு பல நஷ்டங்கள் ஏற்படும். அரசியல்வாதிகள் தங்கள் பிள்ளைகள் அரசியல்வாதிகளாகி கொள்ளையடிப்பதற்கு நிறைய ஆட்கள் இருக்கமாட்டார்கள் என்கிற கவலைதான். நமக்கோ அதிக பிள்ளைகளைப்பெற்றால் அவர்களை வளர்க்க படிக்கவைக்க நிறைய பணம் வேண்டும் என்ற கவலை. குடும்பக்கட்டுப்பாடு செய்யவேண்டாம் என்கிறவர் பிறக்கும் அனைத்துப்பிள்ளைகளுக்கும் தரமான உணவு, உடைகள், கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு இலவசமாக அரசு தரும் என்று உறுதி அளித்து அதை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் நம்பலாம். வெறும் வாயினால் குடும்ப கட்டுபாடு செய்யாதீர்கள் என்றால் அர்த்தமற்றது.


S.V.Srinivasan
ஜூலை 04, 2025 07:58

இவரு என்ன சொல்ல வர்ராரு. ஒன்னும் புரியலையே. குடும்ப கட்டுப்பாடு திட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா முழுவதும் கொண்டு வரப்பட்டது. என்னவோ தமிழ் நாட்டுக்கு மட்டும் கொண்டு வந்த சட்டம் மாதிரி புலம்பறாரு.


prabhakar
ஜூன் 23, 2025 17:50

If that is the case, will TN govt. change the policy and sanction maternity leave and other allowance for the third child... chumma adanga patta matum pathathu sir.. ACT ON IT


Natarajan Ramanathan
ஜூன் 18, 2025 04:32

உண்மையில் தீயசக்தி குடும்ப கட்டுப்பாடு செய்யாததால்தான் தமிழகத்திற்கு ஆபத்து வந்தது.


Raj S
ஜூன் 17, 2025 20:33

கட்டுமரம் அத ஒழுங்கா செஞ்சிருந்தா, தமிழகத்துக்கு இவளோ கேடு வந்திருக்காது... தத்தியெல்லாம் அரியணை ஏறி இருக்காது...


Matt P
ஜூன் 17, 2025 12:06

குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்ட வேண்டும்...பேத்திக்கும் மகனுக்கும் பேரு வைச்ச மாதிரியா? உதயநிதி தமிழ் பெயரா? பேத்திக்கு இதுவரைக்கும் கேள்வி படாத வடமொழி பெயர் ...தன்மயா ..கிருத்திகா...துர்கா கருணாநிதி இந்த மாதிரி அழகான தமிழ் பெயரை வையுங்கள். அப்பா சொல்லிட்டாரு. அவங்கவங்க அப்பா அம்மா விருப்பப்படி பெயர் வைக்கட்டும். உங்க வேலையை நீங்க பாருங்க.


S.V.Srinivasan
ஜூலை 04, 2025 08:00

முதல்ல இவரோட பேர் தமிழ் பேரான்னுகேளுங்க .


xyzabc
ஜூன் 17, 2025 08:28

எதுக்கு இந்த புழுகல். வோட் வங்கி குறைந்து விட்டதா ? பணத்தை அல்லி வீசு. சரியா poyidum.


theruvasagan
ஜூன் 16, 2025 22:18

நிறைய பெத்துப் போட்டா வளர்கிறது எப்படி. எல்லாருக்கும் பொது சொத்துக்களைஅடுத்தவன் சொத்துக்களை ஆட்டய போட்டு பத்து தலைமுறைக்கு சொத்து சேர்க்கிற திறமை வருமா


திருட்டு அயோக்கிய திராவிடன்
ஜூன் 16, 2025 21:28

இதைப் போன்ற ஒரு முதல்வர் கிடைக்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.


தாமரை மலர்கிறது
ஜூன் 16, 2025 20:13

தமிழகத்தை விட சின்ன மாநிலங்கள் கோவா, பாண்டிச்சேரி, சண்டிகர், கேரளா என்று பல இருக்கின்றன. இவர் ஏன் அனாவசியமாக புலம்புகிறார்? தமிழகத்திற்கு நூறு சீட்கள் இருந்தாலும் சரி, நாற்பது சீட்கள் இருந்தாலும் சரி, ஒரே மாதிரி ட்ரீட்மெண்ட் தான்.


முக்கிய வீடியோ