உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காகத்திற்கு உணவிடுங்கள் : இன்று (செப்.21) - மகாளய அமாவாசை

காகத்திற்கு உணவிடுங்கள் : இன்று (செப்.21) - மகாளய அமாவாசை

எத்தனையோ பறவைகள் இருக்க, மகாளயபட்ச அமாவாசை அன்று காகத்திற்கு மட்டும் ஏன் உணவளிக்க வேண்டும் என மஹாபெரியவரிடம் கேட்டார் ஒருவர். ''தன் குரலையே பெயராகக் கொண்டது காகம். 'மியாவ்' என கத்தும் பூனையையும், 'கிக்கி' எனக் கத்தும் கிளியையும் நாம் அப்படி அழைப்பதில்லை. ஆனால் 'கா' எனக் கத்தும் இதை மட்டும் 'காகம்' என்றே அழைப்பது ஏன் தெரியுமா... 'கா' என்றால் 'காப்பாற்று'. அதற்கு உணவிடும் போது, 'கா... கா...' என சத்தமிடுகிறோம். அதாவது முன்னோரை அழைத்து எங்களைக் காப்பாற்றுங்கள் என வேண்டுகிறோம். எங்கும் இருக்கும் பறவையான காகத்தை தேட வேண்டியதில்லை. அறிவும், அழகும் கொண்ட அப்பறவை அதிகாலையில் விழிப்பதோடு, நம்மையும் எழுப்புகிறது. அது ஒருபோதும் தனியாக உண்ணாது. உணவு கிடைத்தவுடன் மற்ற காகத்துடன் பகிர்ந்துண்ணும். சூரியன் மறைந்ததும் இருப்பிடத்திற்கு சென்று ஓய்வெடுக்கும். இரவில் (இரவு 7:00 மணிக்குப் பின்) உண்ணக் கூடாது என வேதம் அறிவுறுத்துகிறது. இதை நாம் கடைபிடிக்கிறோமா... இல்லையே... முன்னோரின் அறிவுரையை நமக்கு எடுத்துச் சொல்கிறது காகம். நாம் உணவிடும் போது காகம் மகிழ்கிறது. அது உண்பதைக் கண்டு நாமும் மகிழ்கிறோம். இந்நிலையில் 'இருவருமே கடவுள்' என்கிறது அத்வைதம். இப்படி தத்துவத்தையும் காகம் நமக்கு உணர்த்துகிறது. அதற்கு உணவிடச் சொன்ன நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல. அதற்கு காரணம் இருக்கிறது. ஆலமரம், அரச மரம் ஆகிய இரண்டும் சிறப்பானவை. பரம்பரையை அடையாளம் காட்டுவது ஆலமரம்.அதனால் தான் ஆல் போல தழைத்து வாழ வேண்டும் என மணமக்களை வாழ்த்துகின்றனர். மரங்களின் அரசனான அரசமரம் மும்மூர்த்திகளின் அடையாளம். இந்த இரண்டையும் யாராவது விதைத்து பார்த்திருக்கிறீர்களா... காகம் இடும் எச்சத்தின் மூலம் இந்த விதைகள் வளர்கின்றன. இந்த மரங்களுக்காகவே காகம் உயிர் வாழ்வது அவசியம். அதனால்தான் காகத்திற்கு உணவளிக்கிறோம். இந்த மரங்களை பார்க்கும் போது முன்னோரின் ஞாபகம் உங்களுக்கு வர வேண்டும்'' என்றார் காஞ்சி மஹாபெரியவர். காலை 9:00, மதியம் 1:00, இரவு 7:00 மணிக்குள் உணவு அருந்துங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Loganathan Kuttuva
செப் 21, 2025 14:10

பொதுவாக காகம் காலையில் வரும். ராமேஸ்வரம் பகுதியில் காகம் அதிகமாக இருக்கும் .


Rathna
செப் 21, 2025 11:46

அதிகம் மூளையை பயன்படுத்தும் விலங்கு மற்றும் பறவை இனங்களில் யானை மற்றும் காகம் முக்கியமானது. இரண்டு உயிரினங்களுக்கும் நினைவு சக்தி அதிகம். நல்லவற்றையும், கெட்ட செயல்களையும் நினைவில் வைத்து கொண்டு உதவும் அல்லது பழி வாங்கும். அதுபோல மனிதனை போலவே இறந்தவர்களுக்கு ஈம சடங்குகள் செய்து இரண்டு உயிரினங்களும் நன்றி மற்றும் பாசத்தை செலுத்தும். சில, பல நாட்கள் உணவு உட்கொள்ளாது. இதே போல தான் பசுவும். இந்திய சனாதன கலாச்சாரம் 15000 வருடங்களுக்கும் முந்தையது. விலங்கு, பறவைகளில் செயல்களை வைத்து ஆறுவகை அறிவாக பிரித்து அவற்றை வளர்க்க சனாதனம் வழிவகுத்து உள்ளது. இதற்கு தான் கடவுளின் வாகனமாக விலங்குகள் மற்றும் பறவைகளை வைத்தனர். இதை புரியாத பல எதிர் மறை கலாச்சாரங்கள் பாலைவனமாக மாறி உள்ளது.


ديفيد رافائيل
செப் 21, 2025 11:36

காகம் என்ற ஒன்றை நான் சிறு வயதில் கூட்டம் கூட்டமாக பார்த்தேன். எனக்கு தெரிந்து தற்காலத்தில் காகம் என்ற ஒரு இனமே அழிந்து விட்டது என்று நினைக்கின்றேன்.


Barakat Ali
செப் 21, 2025 12:37

அழியவில்லை.... மக்களில் பெரும்பாலானோர் உணவிடுவதில்லை..... ஆதலால் அவை வேறிடம் சென்றுள்ளன .....


Svs Yaadum oore
செப் 21, 2025 09:25

இரவில் இரவு 7:00 மணிக்குப் பின் உண்ணக் கூடாது என வேதம் அறிவுறுத்துகிறது. ஆனால் இங்கு நடுராத்திரி அழுக்கு அசுத்த பிரியாணி கடை யை தேடும் படிக்காத ஓசி பிரியாணி விடியல் திராவிட கும்பல்.....


J swaminathan
செப் 21, 2025 12:37

இரவு 7 மணிக்குமேல் சாப்பிடுவது இல்லையா?


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 21, 2025 08:02

அனைத்து உயிரினங்களும் ஓரிறையில் இருந்தே உருவானவை அல்லது படைப்புக்கள் அனைத்தும் இறைவனின் அங்கம், வேறுபாடு என்பது இல்லை.. இதுதான் அத்வைதம் .....


Svs Yaadum oore
செப் 21, 2025 07:51

தீவிர ஜெபம் செய்து ஆட்சிக்கு வந்த கட்சி விடியல் என்று விடியல் மந்திரி சொன்னது ....அதனுடன் எழுப்புதல் கூட்டமும் சேர்ந்து நடத்தினால் அடுத்த தேர்தலில் விடியல் வெற்றி பெற்று மதம் மாற்றும் கும்பலுக்கு உச்சி குளிர்ந்து விடும் ....


VSMani
செப் 22, 2025 11:25

யார் அந்த விடியல் மந்திரி ?


Svs Yaadum oore
செப் 21, 2025 07:46

பேனாவுக்கு சிலை வைத்து பகுத்தறிவை வளர்த்து மேய்ப்பர் உயிர்த்தெழுந்து வந்தார் என்று சொன்னால் இங்குள்ள மதம் மாற்றும் கும்பலுக்கு உடனே உச்சி குளிர்ந்து விடும் ....


Priyan Vadanad
செப் 21, 2025 02:44

ஆன்மீகத்தை வளர்க்கும் அற்புதமான கருத்துக்கள். வாழ்வு மலர முற்போக்கான சிந்தனைகள். ஆன்மிக பணியை சிறப்பாக செய்துவரும் தினமலருக்கு வாழ்த்துக்கள்.


Priyan Vadanad
செப் 21, 2025 02:43

அடடா எப்படிப்பட்ட அற்புதமான சிந்தனை. ஆன்மீகத்தை வளர்க்கும் அற்புதமான கருத்துக்கள். வாழ்வு மலர முற்போக்கான சிந்தனைகள். ஆன்மிக பணியை சிறப்பாக செய்துவரும் தினமலருக்கு வாழ்த்துக்கள்.


SANKAR
செப் 21, 2025 06:21

I face a peculiar issue ...no crow seen in my area.ditto sparrows and squirrel.experts say this is due to pollution and too much harmful waves from cell towers.every amavasai food placed outside remains untouched


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை