உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்டாசு விபத்து: இருவர் கைது

பட்டாசு விபத்து: இருவர் கைது

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ராமுதேவன்பட்டியில் 10 பேர் பலியான பட்டாசு விபத்தில் வின்னர் பட்டாசு ஆலை போர்மேன் சுரேஷ்குமார், மேலாளர் ஜெயபால் கைது செய்யப்பட்டனர்.ராமுதேவன் பட்டியில் சிவகாசியை சேர்ந்த விக்னேஷ் குமாருக்கு சொந்தமான வின்னர் பட்டாசு ஆலை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 5 பெண்கள் உள்ளிட்ட 10 பேர் பலியாயினர். மேலும் நான்கு பேர் காயமுற்றனர். விபத்து தொடர்பாக ஆலங்குளம் போலீசார் விசாரித்தனர். இந்நிலையில் ஆலையின் போர்மேன் சுரேஷ்குமார், மேலாளர் ஜெயபாலை போலீசார் கைது செய்தனர். ஆலை உரிமையாளர் விக்னேஷ் குமாரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி