வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இது MEMU ரயிலாக இருப்பின் ....சென்னையிலிருந்து புதுச்சேரி அல்லது திருச்சி வரை இயக்கலாம் .... EMU எனில் செங்கல்பட்டு முதல் கும்மிடிப்பூண்டி வரை இயக்குவது நல்லது .... ஜன்னல் உள்ள ரயிலிலேயே குடித்துவிட்டு ஏறி விடுகிறார்கள் ....கிட்டேயே நிற்கமுடிவதில்லை .... ஏ.சி எப்படியோ .... சுகந்த மணத்தில் இன்பமான பயணமாக இருக்கப்போகிறது ....
குளிரூட்ட பட்ட முதல் புற நகர் ரயில் சென்னைக்கு ஒரு மகுடம்
-எல்லா தயாரிப்புகளும் சென்னை மதுரை போன்ற நகரங்களில் மட்டும் உபயோகம் என்று இருக்கக்கூடாது. ஏழை எளிய மக்களும் வரி கொடுக்கிறார்கள் என்பதனை அரசுகள் கருத்தில்கொள்ளவேண்டும். அதே சமயத்தில் கிராமிய தன்மை மறைந்துவிடக்கூடாது
இரண்டு கிராமங்களை உங்களின் தேர்வாக கூறுங்கள். அந்த இரண்டு கிராமங்களுக்கு இடையே இந்த ஏசி ரயில்களை இயக்கலாம் நண்பரே.
SUBURBAN என்பதன் அர்த்தமென்ன? அடுத்து முன்பதிவில்லா ரயில்களில் கூட கட்டணம் அதிகம் என்று கிராமத்தினர் பேருந்துகளை தேர்வு செய்கின்றனர். இதில் குளிரூட்டப்பட்ட ரயில் கட்டணம் அவர்களுக்கு கட்டுப்படியாக வேண்டும். மறுபக்கம் சென்னையிலேயே சுபர்பன் ரயில்களை குறைந்த கட்டணத்தில் இயக்க ரயில்வேக்கு கட்டுப்படியாகவில்லை யென்றுதான் அடிக்கடி என்னன்னவோ சாக்குபோக்கு சொல்லி ரத்து செய்கிறார்கள். வேளச்சேரி பீச் ரயிலை சிந்தாதிரிபேட்டையுடன் நிறுத்தினார்கள். இந்த நிலையில் சென்னையில் AC சுபர்பன் ரயில்கள் போணியாகுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம். முதலில் வேளச்சேரி பீச் லைனில் இயக்கி சோதிக்கலாம்.
கதவுடன் கூடிய மின்சார புறநகர் ரயில் அற்புதம். ஆனால் காற்றோட்டமாக இல்லாமல் இருக்கும் பொழுது சுத்தம் / சுகாதாரமில்லாதவர்கள் உள்ளே இருந்தால் நாற்றம் மற்றும் நோய் தொற்று மோசமாக இருக்கும்.