உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெள்ள பாதிப்பு எதிரொலி; 5 தென் மாவட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து; இதோ முழு விபரம்!

வெள்ள பாதிப்பு எதிரொலி; 5 தென் மாவட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து; இதோ முழு விபரம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை- தென் மாவட்டங்களுக்கு இடையிலான 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.பெஞ்சல் புயல் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. விக்கிரவாண்டி- முண்டியம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே பாலத்தில் அபாய அளவை தாண்டி தண்ணீர் செல்கிறது. பயணிகளின் பாதுகாப்பு கருதி, 5 தென் மாவட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:* வைகை எக்ஸ்பிரஸ் ரயில்,* காரைக்குடி - சென்னை, எழும்பூர் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்* மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்,* சென்னை- நாகர்கோவில் வந்தே பாரத் ரயில்,* சென்னை- மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்அதேபோல், சென்னை- திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ், விழுப்புரம்- தாம்பரம் ரயில், புதுச்சேரி- சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ