உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.5000 லஞ்சம் லஞ்சம்; கையும், களவுமாக சிக்கினார் மின்வாரிய அதிகாரி

ரூ.5000 லஞ்சம் லஞ்சம்; கையும், களவுமாக சிக்கினார் மின்வாரிய அதிகாரி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரை கோவில் பாப்பாக்குடியில் ரூ.5000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய போர்மேன் கணேசன் கைது செய்யப்பட்டார்.மதுரை கோவில் பாப்பாக்குடியை சேர்ந்தவர் சாமுவேல் மனோகரன். இவர் டெக்ஸ்டைல் ஏஜென்ட் ஆக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மனைவியின் பெயரில் வீடு கட்டி வருகிறார். இவர் தனது இடத்திற்கு முன்னாடி உள்ள மின்சார இணைப்பினை மாற்ற கோரி, மின்வாரியத்தில் அப்ளே செய்து 10 மாதங்களை கடந்துவிட்டது. இவரிடம் மின்வாரிய போர்மேன் கணேசன் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். பின்னர் லஞ்சம் கொடுக்க விரும்பாத சாமுவேல் மனோகரன் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். பின்னர் அவர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுத்தலின் படி, ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரம் நோட்டை கணேசனிடம் வழங்கினார். அப்போது மறைந்து இருந்த லஞ்சம் ஒழிப்புத்துறை போலீசார் கணேசனை கையும் களவுமாக கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Sathya Gold
செப் 20, 2025 09:03

இவர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் மேலும் லஞ்சம் வாங்க பயப்படும் படி சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும்


VRam
செப் 18, 2025 22:46

லஞ்சம் வாங்கும் திருட்டு அதிகாரி மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பர். மறைந்திருந்த லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள்? எங்கு மறைந்திருப்பார்கள். .?


Natarajan Ramanathan
செப் 18, 2025 21:49

இந்தவாரம் வாரமலர் அன்புடன் அந்தரங்கம் பகுதியை படியுங்கள். மனைவியே கணவன் லஞ்சம் வாங்கவில்லை என்று வருந்தி இருக்கிறாள். என்ன ஒரு அநியாயம்?


K.n. Dhasarathan
செப் 18, 2025 21:48

பிறகு என்ன ராஜா வாழ்க்கைதான் வேலைக்கு போகாமலே சம்பளம் வரும், எவ்வளவு காலம் லஞ்சம் வாங்கினாரோ எவ்வளவு சொத்துக்கள் சேர்த்தாரோ என்ன செய்வார்கள், மாக்ஸிமம் பக்கத்து ஊருக்கு இட மாறுதல் பண்னுவார்கள், அங்கெ போயி இன்னும் தீவிரமாக லஞ்சம் வாங்குவார் காவல் துறையும் நீதி துறையும் சேர்ந்து லஞ்சம் வாக்கியவராய் தூக்கில் போட்டிருக்கா? பிறகு எப்படி பயம் வரும் ? லஞ்சம் வாங்கினால் மொத்த சொத்தையும் பறிமுதல் செய்து கோர்ட்டில் வைத்ததுண்டா? அந்த திமிர் எப்படி குறையும் ? பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்ததுண்டா? அவ்வளவு இறக்க குணம், பிறகு நாடு எப்படி உருப்படும். ? குறைந்த பட்சம் ஜைளுக்காவது போயிருக்காரா அதனால் மற்றவர்களும் துணிந்து செய்கிறார்கள்.


Natchimuthu Chithiraisamy
செப் 18, 2025 18:41

என்ன பிரச்சனை ...இன்று முதல் வேலைக்கு செல்லவேண்டியது இல்லை அரசு சம்பளம் முழுவதும் வரும் ஒரே ஒரு வேலை எனக்கு எந்த வசதியும் இல்லை நான் எங்கும் வேலை செய்வது இல்லை என்கிற லெட்டர் மாதா மாதம் தர வேண்டும். கேஸ் முடிய பல ஆண்டுகள் ஆகும் பிறகு தனக்கு வர வேண்டிய வைப்பு 40 லட்சம் குற்றம் உறுதியாகும் பட்சத்தில் கிடைக்காது. அதை தான் விதி என்கிறார்கள். 5000 க்கு 40 லட்சமா ? இந்த பல ஆண்டுகால ஓய்வு நேரத்தில் 40 லட்சம் சம்பாதிக்கிறவன் புத்திசாலி. மக்கள் நினைப்பார்கள் அவன் காலி என. அரசு தன் வேலை ஆட்களை கைவிடாது. பிறகு சோறும் போடும்


சிட்டுக்குருவி
செப் 18, 2025 18:23

கையும்களவுமாக சிக்கினார் என்ற எத்தனையோ செய்திகளை பார்க்கின்றோம் ஆனால் ஒருசெய்தியாவது லஞ்சம் வாங்கியதற்காக ஜெயிலில் அடைக்கப்பட்டார் என்ற செய்தியை பார்த்ததுண்டா .சிறிதுகாலம் சஸ்பென்ஷனில் இருந்துவிட்டு மறுபடியும் வேறு இடத்தில பணியில் சேருவார்கள் .இதான் திராவிடத்தின் சமூக நீதி .என்று தணியும் இந்த லஞ்சத்தின் தாகம் ?


Kamaraj TA
செப் 18, 2025 17:00

கன்னித்தீவு கதை முடிவதற்குள் அந்த வேலையை முடித்துத் தருவார்கள்.


Indhuindian
செப் 18, 2025 16:29

ஏன் சார் இந்த மாதிரி ஒரு ஐநூறுக்கும் ஆயிரத்துக்கும் மாட்டிக்கிறீங்க ஒரு பத்து கோடி நூறு கோடி ஆயிரம் கோடி பத்தாயிரம் கோடிண்ணு அடிக்ககூடாதா அடிச்சிட்டு அரசியலுக்கு வந்துட்டா பெரிய வக்கீலா வெச்சி கேஸை ஜவ்வு மாதிரி இஷுத்து வாஷ்கயை சுகமா வூட்ட கூடாத மத்தவங்களை பாத்து கத்துக்கோங்கப்பா


P.Sekaran
செப் 18, 2025 16:21

கோடி கணக்கில் லஞ்சம் வாங்கும் அரசியல் வாதியை எல்லா இடத்திலும் லஞ்சம் கொடுத்து ஜெயித்து விடுகிறார்கள். நம் நாட்டில் சட்டம் சரியில்லை. லஞ்சம் வாங்கியது நிரூபிக்கப்பட்டால், அவனிடம் உள்ள சொத்துக்களை அரசு கைவசப்படுத்தவேண்டும். பிளாக் மார்க் கொடுக்கவேண்டும். அவன் பணத்திற்கு திண்டாட வேண்டும். அப்படி சட்டம் இயற்றினால், ஒருவனும் லஞ்சம் வாங்க மாட்டான். நூற்றுக்கு தொன்ணூறு பேர் லஞ்சம் வாங்குகிறார்கள். எப்படி லஞ்சத்தை ஒழிக்க முடியும் பாராளுமன்றத்தில் இதற்கு தனி சட்டம் இயற்றினால் ஒழிய லஞ்சம் ஒழியாது.


Raghavan
செப் 18, 2025 20:47

நூற்றுக்கு தொண்ணுற்றுஒன்பது பேர் லஞ்சம் வாங்குகிறார்கள். லஞ்சம் இல்லமால் ஒருக்காலும் வேலை முடியாது.


c.mohanraj raj
செப் 18, 2025 16:04

இவர்கள் இந்திய சட்டத்தை மிகவும் ஆதரிப்பார்கள் ஏனென்றால் எப்படி இருந்தாலும் தப்ப விட்டு விடும் அவ்வளவு நேர்மையான சட்டம் நம்மளது


முக்கிய வீடியோ