உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முன்னாள் துணை வேந்தர் மீது ரூ.2.50 கோடி மோசடி வழக்கு

முன்னாள் துணை வேந்தர் மீது ரூ.2.50 கோடி மோசடி வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அரசு வேலை வாங்கி தருவதாக 2.50 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக, சென்னை அண்ணா பல்கலை முன்னாள் துணை வேந்தர் கலாநிதி மற்றும் அவரின் மனைவி ராஜலட்சுமி மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கடந்த 2001ல், சென்னை அண்ணா பல்கலை துணை வேந்தராக இருந்தவர் கலாநிதி.இவர், செங்கல்பட்டு மாவட்டம் பையனுாரைச் சேர்ந்த தனசேகரனிடம், அவரின் குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக, 2.50 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில், கலாநிதி மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த அவரின் குடும்ப உறுப்பினர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க, போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தனசேகரன் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த நீதிமன்றம், கலாநிதி மற்றும் அவரின் மனைவி ராஜலட்சுமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து, சென்னை மயிலாப்பூர் காவல் நிலைய போலீசார், கலாநிதி, ராஜலட்சுமி ஆகியோர் மீது, இரண்டு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

அப்பாவி
நவ 18, 2025 06:16

இவரே பல லட்சம் குடுத்து பதவிக்கு வந்திருப்பார் போல.


spr
நவ 17, 2025 21:02

நிதி என்று பெயரில் இருந்தாலே இது போல குற்றம் செய்வது இயல்பு போல இருக்கிறது


.Dr.A.Joseph
நவ 17, 2025 15:32

. நாம் என்ன தகுதி வைத்திருந்தாலும் நம்மிடம் எவ்வளவு திறமை இருந்தாலும் இட ஒதுக்கீடாக இருந்தாலும் அரசு உதவி பெரும் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் பணம் கொடுக்காமல் வேலை பெற முடியாது.


Natchimuthu Chithiraisamy
நவ 17, 2025 14:32

தனசேகரனிடம், அவரின் குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக, 2.50 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது. கலாநிதி மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த அவரின் குடும்ப உறுப்பினர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க, போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தனசேகரன் வழக்கு தொடர்ந்தார். இரண்டு பேரும் உறவினர்கள் சம்பந்த பட்டிருக்கிறார்கள் இவர்கள் சட்டத்திற்கு புறமாக நடந்தது தெளிவாக தெரிகிறது மக்கள் வழக்கு தொடர்ந்தால் நீதி மன்றம் புகாரை ஏற்றுக்கொள்ளும், குற்றவாளிகளே நேரில் வந்தால் நீதி மன்றம் தண்டிக்காது. குற்றம் குறையுமா ? துபாய் செல்லுங்கள் காரின் முன்பு கட்டி தங்கம் வைத்திருப்பார்கள்.


Marai Nayagan
நவ 17, 2025 14:09

திராவிட மாடல் என்றெல்லாம் உருட்டி கல்வியை வியாபாரம் ஆக்கி துணை வேந்தர் பதவிக்கு கோடிகளில் பணம் வசூலிக்க வழி செய்தது நம் திராவிட திமுக தலீவர் கருணா நிதி அவர்கள் ஆட்சியில் தான்...அதிமுக அதை தொடர்ந்தது ..அவ்வளவே


அப்பாவி
நவ 17, 2025 10:45

இரண்டரைக் கோடிக்கு என்னா வேலை கேட்டிருப்பாங்க? வருஷக் கணக்கில் சம்பளம் வாங்கினாலும் திரும்ப வசூலாகாதே?


MP.K
நவ 17, 2025 10:17

ஊழலும் லஞ்சமும் தமிழகத்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களும் என்ற தலைப்பில் பட்டிமன்றமே நடத்தலாம் அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்பது போல இருக்கும்


திகழ்ஓவியன்
நவ 17, 2025 12:11

இவரை நியமித்தது


சின்ன சுடலை ஈர வெங்காயம் ராமசாமி நாயக்கர்
நவ 17, 2025 09:35

வேலை கிடைக்காததால் புகார். கிடைத்திருந்தால் இந்த 24 வருடம் கொடுத்த பணத்தை விட அதிகமாக சூறையாடிருப்பான்.இன்னும் இது போல் எத்தனை நண்பர்களோ? இந்த லட்சணத்தில் தான் திராவிட கட்சிகள்.


Suppan
நவ 18, 2025 16:41

திகழு சந்தேகமே வேண்டாம். கருணா அரசு தான் நியமித்தது. அதனால்தான் முதல்வரே துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் வேண்டும் என்று குதிக்கிறார்கள் . காசு பணம் துட்டு படுத்தும் பாடு


R SRINIVASAN
நவ 17, 2025 09:32

பிஹாரில் லல்லு பிரசாத் பெயரைக்கேட்டாலே மக்கள்,குறிப்பாக, பெண்கள் இன்றும் குலை நடுங்குகிறார்கள். பிரசாந்த் கிஷோர் தான் ஆட்சிக்கு வந்தால் மது விலக்கை எடுத்து விடுவேன் என்று சொன்னார்.மக்கள் விஷித்துக்கொண்டார்கள் .இந்தப்பைத்தியக்கார கும்பலுக்கு ஓட்டளித்தால் நம்மை சீரஷித்து விடுவார்கள் என்று கண்டு கொண்டார்கள். அதனால் இவர்களை மக்கள் தலை முழுகி விட்டார்கள். விஜய்க்கு தில்லு இருந்தால் தேர்தல் கமிசன் மீது கோர்ட்டில் புகார் தெரிவிக்க வேண்டியதுதானே?


SANKAR
நவ 17, 2025 09:27

அண்ணாமலை பல்கலை மதுரை காமராசர் ,பெரியார் பல்களை திருவள்ளூர் பல்கலை இவர்கள் மீதும் வழகு உள்ளது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை