உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மகளிருக்கு 50 மாத நிலுவை தொகை ரூ.50,000 கொடுங்கள் : அண்ணாமலை

மகளிருக்கு 50 மாத நிலுவை தொகை ரூ.50,000 கொடுங்கள் : அண்ணாமலை

சென்னை: 'தமிழக பெண்கள் தி.மு.க., அரசின் மீது கொண்டிருக்கும் அதிருப்தி குறைய போவதும் இல்லை; தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதும் இல்லை' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: கடந்த, 2021 சட்டசபை தேர்தலின்போது, அனைத்து மகளிருக்கும், 1,000 ரூபாய் வழங்குவோம் என, போலி வாக்குறுதி கொடுத்து, ஆட்சிக்கு தி.மு.க., வந்தது. ஆட்சிக்கு வந்த பின், பலமுறை சுட்டிக் காட்டிய பிறகே, இரு ஆண்டுகள் கழித்து, 2023 செப்டம்பரில் தான் அந்த திட்டத்தை அமல்படுத்தியது. அதிலும், தகுதி வாய்ந்த மகளிருக்கு மட்டுமே, 1,000 ரூபாய் என கூறி, தி.மு.க., அரசு ஏமாற்றியது. இதனால், மகளிர் கடும் அதிருப்தியில் உள்ளனர். தற்போது, அடுத்த தேர்தல் வர இருப்பதை உணர்ந்து, அனைத்து மகளிருக்கும், 1,000 ரூபாய் கொடுக்க உள்ளதாக விளம்பர பணிகளை தி.மு.க., அரசு துவக்கி உள்ளது. முன்பு தகுதியில்லை என நிராகரித்த நிலையில், தற்போது மட்டும் எப்படி தகுதி வந்தது என, சகோதரியர் கேள்வி எழுப்புகின்றனர். உங்கள் மீது, மகளிரின் அதிருப்தி குறையப் போவதும் இல்லை; தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதும் இல்லை. உண்மையிலேயே உதவித்தொகை வழங்க விரும்பினால், ஆட்சிக்கு வந்ததில் இருந்து விடுபட்ட, 50 மாத நிலுவை தொகையான 50,000 ரூபாயை முதலில் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

சுரேஷ் பாபு
ஜூலை 25, 2025 18:01

அடுத்த முறை ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பது நிச்சயம் தெரிந்திருக்கும். அதனால் எல்லா மகளிருக்கும் 1000 ரூபாய் தந்துவிடுவோம் - ஒரு 7 மாதம்தானே . பிறகு அடுத்த முறை ஆட்சியில் அமரும் கட்சி நிதிச் சுமையை அனுபவிக்கட்டும் என்ற எண்ணம் இருக்கலாம். இதற்கு ஆப்பு வைப்பது போல அண்ணாமலை அவர்கள் ரூபாய் 50000 நிலுவைத் தொகை சேர்த்து தரவேண்டும் என்று நியாயத்தை கூறியுள்ளார். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.


sundarsvpr
ஜூலை 25, 2025 17:25

இலவச தொகை ரூபாய் ஆயிரம் பெறுபவர்கள் ஏழை பெண்கள். தமிழ்நாட்டில் கோடிக்கணக்கில் ஏழை பெண்கள் இருக்கிறார்கள் என்பது ஊர்ஜிதம் ஆகிறது. நிச்சியம் கனி மொழி பெற்றுஇருக்கமாட்டார்கள்.


புதிய வீடியோ