வாசகர்கள் கருத்துகள் ( 4 )
நகை விலை கூடுவதால் பெண்கள் வெளியேறி செல்ல முடியாது கொள்ளையர்கள் அதிகரிக்கும்
தங்கத்தின் மீது தேவையில்லாத விலை உயர்வு. இதில் ஒரு சாரார் மட்டுமே பணத்தில் கொழிக்கின்றனர். மற்றவர்கள் தண்டம் அழ வேண்டியுள்ளது. இந்தியாவில் மட்டுமே உலகத்தில் இல்லாத சேதாரம். இதை பெரும் கொள்ளை என்றே சொல்ல வேண்டும். சர் அப்படியாவது சுத்தமான தங்கம் கொடுக்கிறார்களா என்றால் அதுவும் கிடையாது. இந்தியாவின் தங்கத்தின் தூய்மையை மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவு. இதில் 22 கேரட் தங்கம் என்று நாடகம் வேறு. தங்கக் கடைகள் எல்லாம் நாடகக் கம்பெனிகள். யாரும் கேட்பார் இல்லாமல் இருக்கிறது. எல்லாவற்றிலும் தானாகவே வழக்கை எடுத்து விசாரணை செய்து நீதியை வழங்கும் நீதிமன்றம் கூட இந்த விஷயத்தில் மவுனமாக இருப்பது மிகவும் கொடிது. தங்கம் வாங்குபவர்களின் சேமிப்பை சூறையாடுகின்றன இந்த தங்ககக் கடைகள்.
இந்தியாவில் மட்டுமே உலகத்தில் இல்லாத சேதாரம் - சேதாரம் தங்க ஆபரணங்கள் மேல் சகட்டு மேனிக்கு 15 - 20% வரை விதிக்கப்படுகிறது. மொத்த மதிப்பில் 20 - 25% செய்கூலி சேதாரம் என விலை நிர்ணயிக்கப்படுகிறது. தங்கம் வாங்குபவர் அந்த நிமிடமே வாங்கும் தங்கத்தின் மதிப்பின் மேல் சுமார் மூன்று வருட லாப வருவாய் இழக்கிறார். நீங்கள் ஒரு பொருளை உற்பத்தி செய்யும் போது 15 - 20% அளவு மூலப்பொருள் இழப்பை எதிர்கொள்வது என்பது பொருளாதாரத்தில் எங்கும் கேள்வி படாத ஒரு விஷயம். அறிவியலில் "Law of conservation of mass" அடிப்படையில் சிதறும் தங்க துகள்கள் கவனமாக சேகரிப்பு செய்யப்படுகிறது. ஆனால் அதன் விலை மதிப்பு வாங்குபவர் தலையில் சுமத்தப்படுகிறது. மற்றுமொரு விஷயம் தரம் அதாவது "காரட் சுத்தம்". ஆபரண தங்கம் "22 காரட்" என்பது 22 கிராம் சுத்த தங்கம் உடன் 2 கிராம் செம்பு கலந்த மொத்தமான 24 கிராம் உருக்கு. இதில் சுத்தமான தங்கத்தின் அளவு குறைக்கப்பட்டு செம்பு அளவு அதிகரிக்கப்பட்டால் அது சுத்தமான தங்கத்தின் அளவு மட்டுமே கொண்டு 21 காரட், 20 காரட், 18 காரட் என குறிப்பிடப்படுகிறது. மேலும் சில்லறை தங்க வர்த்தகத்தில் பழைய தங்க நகைகள் விற்பனை இல்லாமல் பரிமாற்ற முறை மட்டுமே பெரும்பாலான வணிகர்களால் பின்பற்றப்படுகிறது. இதனால் மக்கள் அவசரத்துக்கு பணம் பெற பெரும்பாலான கடைகளில் தங்க நகைகளை விற்க முடியாது. "எக்ஸ்சேஞ்ச்" என்ற சுழலுக்குள் மட்டுமே இருக்க முடியும்.
Intha news ah podatheenga