உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்கம் விலை மீண்டும் உயர்வு; ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்தை தாண்டியது!

தங்கம் விலை மீண்டும் உயர்வு; ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்தை தாண்டியது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இன்று (பிப்.,19) 22 காரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.520 உயர்ந்தது. ஒரு சவரன் ரூ.64,280க்கும், ஒரு கிராம் ரூ.8,035க்கும் விற்பனை செய்யப்படுகிறது.தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 7,890 ரூபாய்க்கும்; சவரன், 63,120 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வெள்ளி கிராம், 108 ரூபாய்க்கு விற்பனையானது.ஞாயிற்றுக்கிழமை, தங்க சந்தைக்கு விடுமுறை. அன்று முந்தைய நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனையாகின. பிப்.,17ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு, 50 ரூபாய் உயர்ந்து, 7,940 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 400 ரூபாய் அதிகரித்து, 63,520 ரூபாய்க்கு விற்பனையானது.நேற்று (பிப்.,18) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,760க்கும், ஒரு கிராம் ரூ.7,970க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.520 உயர்ந்தது. ஒரு சவரன் ரூ.64,280க்கும், ஒரு கிராம் ரூ.8,035க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மூன்று தினங்களில் சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

sundarsvpr
பிப் 19, 2025 13:56

1957 இல் குமாஸ்தாவின் சம்பளம் படி ரூபாய் 74. அப்போது தங்கம் விலை 82 ரூபாய். விலை வாசி எற எற பஞ்சபடி கூடும். அரசு அலுவலக குமாஸ்தாவின் சம்பளம் படி தங்கத்தின் விலை ஏற்றம் குறைவிற்கு தக்கவாறு வழங்குவது சரியாய் இருக்கும்.


ப்ர்ஜேஷ்சாவ்லா
பிப் 19, 2025 13:20

ரூவாயின் மதிப்பை தாறுமாறா இறங்க உட்டதால் தங்கத்தின் விலை எகிறுது. நிதியமைச்சர் உடனே பதவி விலகணும்னு சாட்டையடி அண்ணாமலை சொல்லுவாரா? கும்மிடிப்பூண்டியைத் தாண்டி அரசியல் பண்ணத்தெரியாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை