உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீண்டும் எகிறும் தங்கம் விலை; 2 நாட்களில் சவரனுக்கு ரூ.560 உயர்வு

மீண்டும் எகிறும் தங்கம் விலை; 2 நாட்களில் சவரனுக்கு ரூ.560 உயர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இன்று (ஜன.02) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.57,440க்கும், ஒரு கிராமுக்கு ரூ.30 அதிகரித்து, ரூ.7,180க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களில் சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது.சர்வதேச அளவில் நிலவில் பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் நிகழ்கிறது. நேற்று (ஜன.,01) ஆண்டின் முதல் நாளில் சவரனுக்கு ரூ.320 உயர்ந்தது. அதன் படி, ஒரு சவரன், ரூ.57,200க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராமுக்கு ரூ.40 அதிகரித்து, ரூ.7,150க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில், இன்று (ஜன.02) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.57,440க்கும், ஒரு கிராமுக்கு ரூ.30 அதிகரித்து, ரூ.7,180க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் ஒரு சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.99க்கு விற்பனை செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை