உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரு வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,400 உயர்வு

ஒரு வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,400 உயர்வு

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 1,280 ரூபாய் அதிகரித்து, 92,000 ரூபாய்க்கு விற்பனையானது. சர்வதேச நிலவரங்களால், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 11,340 ரூபாய்க்கும், சவரன், 90,720 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வெள்ளி கிராம், 184 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று காலை தங்கம் விலை கிராமுக்கு, 85 ரூபாய் உயர்ந்து, 11,425 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 680 ரூபாய் அதிகரித்து, 91,400 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு, 3 ரூபாய் உயர்ந்து, 187 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று மதியம் தங்கம் விலை மீண்டும் கிராமுக்கு, 75 ரூபாய் உயர்ந்து, 11,500 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 600 ரூபாய் அதிகரித்து, 92,000 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. வெள்ளி கிராமுக்கு, 3 ரூபாய் உயர்ந்து, 190 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு, 1,280 ரூபாயும் அதிகரித்துள்ளது. கடந்த சனிக்கிழமை சவரன், 87,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சவரனுக்கு, 4,400 ரூபாய் உயர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ