உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இலவச மின்சாரத்துக்காக ரூ.16,274 கோடி மின்வாரியத்திற்கு வழங்க அரசுக்கு உத்தரவு

இலவச மின்சாரத்துக்காக ரூ.16,274 கோடி மின்வாரியத்திற்கு வழங்க அரசுக்கு உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை,:இலவச மற்றும் மானிய விலை மின்சாரத்துக்கு, வரும் நிதியாண்டிற்கு மின் வாரியத்திற்கு, 16,274 கோடி ரூபாய் வழங்க, தமிழக அரசுக்கு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் வீடுகளுக்கு, 100 யூனிட் வரை இலவசமாகவும், 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்படுகிறது.குடிசை வீடுகள், விவசாயத்திற்கு முழுதும் இலவச மின்சாரமும், விசைத்தறி உள்ளிட்ட பிரிவுகளுக்கும் மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்படுகிறது.இதற்காக, மின் வாரியத்திற்கு ஏற்படும் செலவை, தமிழக அரசு மானியமாக வழங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு மானிய தொகை வழங்க வேண்டும் என்பதை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மதிப்பீடு செய்து அரசுக்கு உத்தரவிடுகிறது. அதற்கு ஏற்ப, அந்த தொகை மின் வாரியத்திற்கு, ஒவ்வொரு காலாண்டிற்கும் வழங்கப்படுகிறது. அதன்படி வரும், 2025 -- 2026ம் நிதியாண்டிற்கு, 16,274 கோடி ரூபாய் வழங்க, மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. இதில், வீடுகளுக்கான மானியம், 7752 கோடி ரூபாய்; விவசாயத்திற்கு, 7047 கோடி; குடிசை வீடுகளுக்கு, 360 கோடி; வழிபாட்டு தலங்களுக்கு 20 கோடி; விசைத்தறிக்கு 560 கோடி; கைத்தறிகளுக்கு 15 கோடி; தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு 398 கோடி; அடுக்குமாடி குடியிருப்புகளின் பொது மின் இணைப்பு களுக்கு, 49 கோடி ரூபாய் அடங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

S. Neelakanta Pillai
மார் 30, 2025 07:24

மின்சாரத்திற்கு இவ்வளவு பெரிய தொகையை மானியமாக வழங்குவதற்கு மாநில அரசுக்கு விருப்பம் இருக்கிறது ஆனால் மிக சொற்பமான தொகை தான் குடிநீருக்காக வசூலிக்கிறது. அந்தத் தொகையை தள்ளுபடி செய்வதில் அரசுக்கு என்ன சிக்கல் ஆனால் பாருங்கள் வீட்டு வரி மற்றும் குடிநீர் வரியை கடப்பாரையுடன் போய் வசூலிப்பதாக செய்தி. இதில் ஏன் இவ்வளவு முரண்பாடு. ஏனென்றால், இது மின்சார வாரியம் இல்லை கொள்ளை வாரியம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை