உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 10 ஆண்டுகளாக தகுதியானவர்களுக்கு பத்ம விருது: கவர்னர் ரவி பெருமிதம்

10 ஆண்டுகளாக தகுதியானவர்களுக்கு பத்ம விருது: கவர்னர் ரவி பெருமிதம்

சென்னை : ''கடந்த, 10 ஆண்டுகளாக, தகுதியான நபர்களுக்கு பத்ம விருதுகள் கிடைத்து வருகின்றன,'' என கவர்னர் ரவி பெருமையாக கூறினார்.மத்திய அரசு, 2025ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை, சமீபத்தில் அறிவித்தது; அதில், தமிழகத்தை சேர்ந்த, 13 பேருக்கு பத்ம விருதுகள் கிடைத்தன. அவர்களுக்கான பாராட்டு விழா, கிண்டி கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது. விருதுக்கு தேர்வானவர்களுக்கு கவர்னர் ரவி சால்வை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.பத்ம விருதுகள் பெற உள்ள, 'தினமலர்' நாளிதழ் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி, நல்லி குப்புசாமி, ேஷாபனா சந்திரகுமார், குருவாயூர் துரை, தாமோதரன், ஸ்ரீனிவாஸ், புரிசை கண்ணப்ப சம்மந்தன், வேலு ஆசான், ராதாகிருஷ்ணா தேவ சேனாபதி ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நடிகர் அஜித் குமார் பங்கேற்கவில்லை; கிரிக்கெட் வீரர் அஸ்வின் சார்பாக, அவரது பெற்றோர் பங்கேற்றனர்.விழாவில், கவர்னர் ரவி பேசியதாவது:பத்ம விருது பெறுவோரோடு இருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. விருதுக்கு தேர்வாகி உள்ள ஒவ்வொருவரும், தாங்கள் சார்ந்த துறைகளுக்காக, தங்கள் வாழ்வை அர்ப்பணித்து உள்ளனர். அவர்கள் கடினமாக உழைத்ததால், இந்த இடத்திற்கு தகுதி பெற்றுஉள்ளனர். இந்த விருது தொடர்ச்சி கடைசி பக்கம்

'நெறிமுறையை பின்பற்றுபவர்' டாக்டர் ஆர்.லட்சுமிபதிக்கு பாராட்டு

பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள, 'தினமலர்' நாளிதழின் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் லட்சுமிபதி குறித்து, கவர்னர் ரவி கூறியதாவது:நிகழ்காலத்தில், வர்த்தக பொருளாதார உலகில், எப்படியும் அதிகம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற மனோபாவம் மேலோங்கி இருக்கிறது. அதற்காக, சிலர் நெறிமுறைகளையும், மதிப்புகளையும் புறக்கணிக்கின்றனர். ஆனால், 'தினமலர்' நாளிதழ் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர். லட்சுமிபதி அப்படி செய்யவில்லை. மக்கள் உண்மையை பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், எதற்கும் ஒரு போதும், தன் பத்திரிகை நெறிமுறையை துறக்கவில்லை. அதிகாரத்தில் இருப்பவர்களை மகிழ்வித்து, விளம்பரங்கள் பெற வேண்டும் என்று நினைக்காமல், மக்களிடம் உண்மையை முன்வைப்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். இப்படிப்பட்ட நேர்மையான பத்திரிகையை சேர்ந்த, அவரை நாம் பெருமையாக நினைக்க வேண்டும்.இவ்வாறு கவர்னர் ரவி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை