உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசின் அதீத முன்னெச்சரிக்கை சென்னைவாசிகளிடம் பீதியை கிளப்பியது: மழைக்கு முன்பே நிவாரண முகாம்களுக்கு செல்ல அறிவுரை

அரசின் அதீத முன்னெச்சரிக்கை சென்னைவாசிகளிடம் பீதியை கிளப்பியது: மழைக்கு முன்பே நிவாரண முகாம்களுக்கு செல்ல அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னைக்கு 'ரெட் அலெர்ட்' விடுக்கப்பட்டதை தொடர்ந்து, அரசின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சென்னை வாசிகளிடையே பீதியை கிளப்பியுள்ள தால், வேளச்சேரி மக்கள் தங்களது நான்கு சக்கர வாகனங்களை, வெள்ளத்தில் பாதுகாக்க மேம்பாலங்களில் நிறுத்தினர். மழைக்கு முன்பே, தாழ்வான பகுதிகளில் வசிப்போர், நிவாரண முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.சென்னை மற்றம் புறநகர் மாவட்டங்களில், நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக, 40 செ.மீ., அளவுக்கு கூட மழை பெய்யக்கூடும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.சென்னையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்ட பணியால், கூவம் ஆற்றில் கட்டட கழிவு கொட்டப்பட்டிருந்தது. அவை முழுமையாக அகற்றப்படாத நிலை உள்ளது. அதேபோல், மெட்ரோ ரயில் சுரங்கப்பணியால், பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.சென்னை மாநகராட்சியும் அனைத்து பகுதிகளிலும், மழைநீர் வடிகால் இணைப்பு கொடுக்கவில்லை. மேலும், துார்வாரும் பணியும் முழுமையாக முடிவடையவில்லை. இந்நிலையில், கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருப்பதால், முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையை, மாநகராட்சி தீவிரப்படுத்தி உள்ளது.மழைநீர் வடிகால் பணிகள் முடிவடையாத இடங்கள் மற்றும் பல்வேறு சேவை பணிகளால் தோண்டப்பட்ட பள்ளங்கள் ஆகியவற்றை, இரும்பு தகரம் வாயிலாக, தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் கடந்த காலங்களில் வெள்ள பாதிப்பில் சிக்கியவர்கள், மாநகராட்சியின் நிவாரண முகாம்களில் தங்கிக்கொள்ள மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.பருவமழை காலங்களில், இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை அரசு மேற்கொள்வது உண்டு. ஆனால் இம்முறை 169 நிவாரண முகாம்களை தயார் செய்து, தாழ்வான பகுதி மக்களை, முகாம்களுக்கு அழைத்து உள்ளது. இந்த நடவடிக்கை, கடந்தாண்டுகளில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசித்த மக்களிடையே, பயத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்திய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, ரிப்பன் மாளிகையில், நேற்று அளித்த பேட்டி:

கடந்தகால அனுபவத்தை வைத்து, இம்முறை பணி செய்து வருகிறோம். நிவாரண முகாம்களில், பால், பிஸ்கட் உள்ளிட்டவை தயாராக வைத்து உள்ளோம்.மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன. தண்ணீர் வெளியேற்றும் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, மக்களுக்கு எவ்வித சிரமமும் இல்லாமல் இருக்க, அரசு அனைத்து நடவடிக்கையும் எடுத்து உள்ளது.மொத்தம், 990 இடங்களில் மோட்டார்கள், 57 டிராக்டர் பொருத்தப்பட்ட பம்ப் செட்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மழைக்கால பணியில், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். சுரங்கப்பாதைகள், தாழ்வான பகுதிகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டு உள்ளது.குறுகிய நேரத்தில், 15 செ.மீ., அளவு மழை பெய்தால், பெரிய பாதிப்பு இருக்காது. ஆனால், 40 செ.மீ., வரை மழை பெய்தால் பாதிப்பு இருக்கும் என்பதால், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.மழை வெள்ளத்தில் சென்னை விமான நிலையமும் தப்புவதில்லை. அதன் வளாகத்தில் தேங்கும் வெள்ளத்தால் பல தரப்பினரும் பாதிப்பை சந்திக்கின்றனர்.

மழைக்கு எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:

விமான நிலையத்தில், 'ரன்வே' மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில், மழைநீர் தேங்காதவாறு, தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து உள்ளோம். விமான இயக்கம் குறித்து, விமான நிலையங்களுடன் பேச்சு நடத்தப்பட்டது.அப்போது, கன மழை நேரத்தில், பயணியருக்கு உடனடி அறிவிப்பு வழங்குதல், விமான சேவையில் மாற்றம் இருந்தால், உடனடியாக, எஸ்.ஓ.பி., எனும் நிலையான இயக்க முறைப்படி தகவல் அளிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட, பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கி உள்ளோம்.குறிப்பாக, பயணியர், 'புக்கிங்' செய்த நிறுவனங்களின் இணையதளத்திற்கு சென்று, விமான இயக்கம் குறித்து தெரிந்து கொண்ட பின்னரே, விமான நிலையம் வர வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. விமான சேவைகளில் பெரிய மாற்றம் இருந்தால், சமூக வலைதளம் வழியாக தகவல் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆறு பேரிடர் மீட்பு குழு!

சென்னையில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தலா 25 வீரர்கள் உடைய மூன்று குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. அதேநேரம், பாதிப்பு தீவிரமாக இருக்கும் என்பதால், திருநெல்வேலியில் இருந்து மூன்று குழுக்களும், சென்னைக்கு வர வைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, ஆறு குழுக்கள் என, 150 வீரர்கள் மீட்பு பணிக்கு தயார் நிலையில், தாழ்வான பகுதிகள் மற்றும் கடந்தாண்டு வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிலை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளனர்.வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக தீயணைப்பு துறை தயாராகி உள்ளது. சென்னையில், மொத்தமுள்ள நான்கு மாவட்டங்களில், 43 தீயணைப்பு நிலையங்களும் தயார் நிலையில் உள்ளன.தீயணைப்பு துறை வீரர்கள், அதிகாரிகள் 1,000 பேரும்; கமாண்டோக்கள் 50 பேர் தயாராக உள்ளனர்.தீயணைப்பு துறையின் '112, 101' ஆகிய எண்களில் வரும் புகார்களை பெற்று, பாதுகாப்பு பணியில் உடனடியாக ஈடுபடுவோம் என, தீயணைப்பு துறை வடசென்னை மாவட்ட அலுவலர் லோகநாதன் தெரிவித்தார்.

மேம்பாலங்களில் 'பார்க்கிங்' கார்களுக்கு அபராதம்

பள்ளிக்கரணை, ஜல்லடையன்பேட்டை பகுதியை சேர்ந்த பலர், தங்களது கார்களை மேடவாக்கம் மேம்பாலத்தில் நிறுத்திச் சென்றனர். இதையறிந்த போக்குவரத்து போலீசார், பாலத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்ததாக காரை நிறுத்தியோர் தெரிவித்தனர். இதை, தாம்பரம் காவல்துறையினர் மறுத்துள்ளனர்.வேளச்சேரி ரயில்வே மேம்பாலம் மற்றும் இரண்டடுக்கு மேம்பாலத்தில், நேற்று மதியத்தில் இருந்து ஏராளமானோர் தங்கள் கார்களை நிறுத்தினர். போக்குவரத்து பாதிக்காத வகையில், கார்களை நிறுத்த போலீசார் ஒழுங்குபடுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Muthusubramanian
அக் 16, 2024 15:42

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்....முதலில் விடியல் கட்சி என்று மார்தட்டிக்கொள்ளும் திமுக அரசு அவர்கள் நினைத்தது போல் நடக்கும் என்ற நினைப்பை மாற்ற வேண்டும்.


K P BALAJI K P BALAJI
அக் 15, 2024 15:21

வெரி குட் அபிடேர்நூன் போர் நியூஸ்


தமிழ்வேள்
அக் 15, 2024 11:14

திராவிட அரசின் அறிவிப்புகள், மக்களுக்கு தைரியம் ஊட்டுவது போலவோ, பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மனநிலைக்கு தயார் செய்வது போலவோ இல்லை ..மாறாக பீதியூட்டி மிரள வைப்பது போல இருக்கிறது .. வேலை செய்ய அரசு எதற்கு? தத்திகள் எல்லோரும் ஒரே இடத்தில் குவிந்தது போல இருக்கிறது ..


Suresh
அக் 15, 2024 11:12

This is to show off and panic, then only can demand more money from central and to get voting in next elections. What these governments have done these many years. Instead of buying boats, using boclains and other expenses (great chance for corruption) why not making law strict and restrict illegal constructions and why no permanent solution steps not taken. Basically its like helping people, but in reality this problem will not get solved because yearly once this is a good opportunity for politicians to earn more.


Barakat Ali
அக் 15, 2024 10:07

இந்த லட்சணத்தில் வேணு என்கிற அல்லக்கை தமிழகத்தைக் குஜராத்துடன் ஒப்பிட்டுக் கொள்கிறார் .... அங்கே பெய்யும் பருவ மழை அளவு, பாதாள சாக்கடைத் திட்டங்கள், ரூரல் பகுதிகளில் எடுக்கப்பட்ட முன்னேற்றத்திட்டங்கள் பற்றி ஏதாவது தெரியுமா ??


GMM
அக் 15, 2024 09:45

தமிழக நிர்வாகம் சென்னை, கோவை, திருச்சி, மதுரை.. போன்ற நகர்களை மறு சீர் செய்ய வேண்டும். பல ஆண்டுகளுக்கு மேல் தாழ்வான பகுதி உபயோக மாற்றம் மற்றும் ஆக்கிரமிப்பு மூலம் ஓட்டுக்கு தாழ்வான பகுதியில் குடியிருப்பு கட்டப்பட்டு இருந்தால், அவைகளை நீர் நிலைகளாக மட்டும் மாற்ற வேண்டும். மேடான பகுதியில் நகர் வெளியே குடியிருப்பு. பழைய வீடுகள் விலை பெறாது. நில விலை மாநில நிர்வாகம் நிர்ணயிக்க வேண்டும். இதற்கு மாற்று exchange of land மசோதா. பட்டா யில்லாத நகர் புற வீட்டு வாசிகள் ஓட்டு போட பிறந்த ஊர், பள்ளி கல்வி படித்த ஊர், உறவினர்கள் 10 குடும்பம் மேல் குடியிருக்கும் தொகுதியில் ஓட்டுரிமை. பீதி குறைந்து மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும்.


Sck
அக் 15, 2024 09:32

முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் யாருக்கு என்ன கெடுதல். சும்மா குறை சொல்லனுமேனு செய்தி பரப்ப கூடாது. பாராட்ட மனமில்லை என்றாலும் குறை சொல்ல வேண்டாமே.


raja
அக் 15, 2024 11:28

குறை இருப்பதால் தானே குறை சொல்கிறார்கள் உடன் பிறப்பே...உதாரணமாக சாலை பொடும் கான்றாக்டர்கள் பழைய சாலையை தோண்டி எடுத்து விட்டு பின் புது சாலை போட வேண்டும் .. அப்படியா செய்தார்கள் நின்று கொண்டு இருத காரின் சக்கரம் மூழ்கும் அளவிற்கும் கை பம்ப் மூழ்கும் அளவிற்கு போட்ட செய்திகள் பத்திரிக்கையில் படத்துடன் வந்ததை நீ அறிவாய் தானே. அப்புறம் வீடுகள் ரோடு மட்டத்தை காட்டிலும் கீழே சென்றதால் சாக்கடையுடன் கூடிய மழை நீர் வீட்டின் உள்ளே செல்லும் என்பதை அறியாதவநா நீ உடன் பிறப்பே... ரோடு போடும் கான்றக்டர்களிடம் கமிசன் வாங்கி கொள்ளை அடித்த திராவிட மாடல் அரசு என்பது தானே காரணம். இதுகெல்லாம் திருட்டு திராவிட மாடல் ஆட்சியாளர்கள் அடித்த கொள்ளை தானே காரணம் உடன் பருப்பே... பாதிக்க பட்ட மக்களை வாய் கூசாமல் எப்படி பாராட்ட சொல்கிறாய்...


Pandianpillai Pandi
அக் 15, 2024 09:22

சென்ற முறை ஏரிகள் நிரம்புவது கண்கூடாக பார்க்க முடிந்தது. அதனாலேயே அரசு நீர் வெளியேற்றம் செய்வதற்கு முன் மக்களை உஷார்படுத்தி முகாம்களை அமைத்தது. தற்போது சூழ்நிலை வேறு. மழை மொத்தமாக ஒரு இடத்தில் கொட்ட போகிறது. அந்த வகையிலே அரசு சிறப்பான முன்னெச்சரிக்கை எடுத்திருப்பதாக உணர்கிறேன். இடைவிடாத மிதமான மழை பெய்த போது சென்னையில் தண்ணீர் தேங்கவில்லை. பாதிப்புகள் இல்லை. மீடியாக்களின் எண்ணவோட்டங்கள் மற்றும், அரசின் செயல்பாடுகளை பார்த்து பிரமித்து பித்து பிடித்ததை போல மக்களிடம் வதந்திகளை எதிர்க்கட்சிகள் செய்து வருகின்றன.


raja
அக் 15, 2024 14:39

குடும்ப கொத்தடிமைகளுக்கு கோமாளி இருபத்தி மூடாம் புலிகேசி ஆட்சி பொற்கால ஆட்சியாகத்தான் தெரியும் ருவா 200 வருகிறத


N.Chinnachamy
அக் 15, 2024 09:15

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல் அவசியம்.


முருகன்
அக் 15, 2024 06:57

, அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும் தவறு என்பது ஏன் ? மக்களை காப்பாற்ற முயற்சி செய்வதை தவறு என நினைப்பது மக்களுக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை