உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., ஆட்சியில் பங்கு வேண்டும்: காங்., கோஷத்திற்கு பெருகும் ஆதரவு

தி.மு.க., ஆட்சியில் பங்கு வேண்டும்: காங்., கோஷத்திற்கு பெருகும் ஆதரவு

சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமாரை தொடர்ந்து, முன்னாள் மாநில தலைவர் அழகிரியும், ஆட்சியில் பங்கு கோரிக்கையை வரவேற்றுள்ளார். 'ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்கு' என்ற கோஷத்தை, தி.மு.க., கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் முதல்முறையாக எழுப்பினார். தமிழக காங்கிரஸ் கட்சியில் அது தொடர்ந்து ஒலித்து வருகிறது. அக்கட்சியின் சட்டசபை குழு தலைவராக உள்ள ராஜேஷ்குமார், 'ஆட்சியில் பங்கு வேண்டும்; அதிக தொகுதிகள் வேண்டும்' என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அவரை தொடர்ந்து, தமிழக காங்., பொதுச்செயலர் ரமேஷ்குமாரும், அதே கருத்தை வலியுறுத்தி வருகிறார். சிவகங்கை தொகுதி எம்.பி., கார்த்தி, 'கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு கிடைத்தால், காங்கிரஸ் கட்சி அதை நிச்சயம் பயன்படுத்திக் கொள்ளும்' என்றார். இந்நிலையில், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் அழகிரி கூறியதாவது: தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், 125 தொகுதிகளில் கவனம் செலுத்த உத்தரவு போட்டு உள்ளார். சட்டசபை காங்., தலைவர் ராஜேஷ்குமாரும், ஆட்சியில் பங்கு, அதிக இடங்களை பெற வேண்டும் என்கிறார். தமிழக காங்கிரசாரின் உணர்வுகளை நடைமுறைப்படுத்த, நானும் டில்லி மேலிடத்தில் எடுத்து சொல்வேன். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, கோவையில் அளித்த பேட்டியில், ''தி.மு.க.,விடம் ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும் என, காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, ராகுல் ஆகியோர் எங்களிடம் எதுவும் கூறவில்லை,'' என்றார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Sampath
செப் 20, 2025 00:18

காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் 234 தொகுதிகளில் தனித்து போட்டி யிட்டு தன் வலிமை காண வேண்டும்


ஜெய்ஹிந்த்புரம்
செப் 20, 2025 09:02

மற்ற கட்சிகள் எதுவும் இல்லாமல் காங்கிரசும், பாஜகவும் மட்டுமே தமிழ்நாட்டில் போட்டியிடட்டும். பாஜகவின் போட்டி கிழிஞ்சிடும் ..டீலுக்கு ரெடியா ?


ப.சாமி
செப் 19, 2025 21:13

ஆட்சியிலும் பங்கு கொள்ளையிலும் பங்கு


Modisha
செப் 19, 2025 18:36

எதிர்க்கட்சி தலைவர் பதவி கூட திமுகவுக்கு கிடைக்காது . இந்த லட்சணத்தில் கொம்புத்தேனுக்கு ஆசை …


Keshavan.J
செப் 19, 2025 14:35

அப்பா ரெண்டு ஏத்து எத்தனால் வாயை முடிக்குவான்


ஆரூர் ரங்
செப் 19, 2025 14:02

நாலு சீட் தரப்படும்.


Gopal Kadni
செப் 19, 2025 13:20

ஆட்சியில் பங்கு கிடைக்கவில்லை என்றால், தனியாக நின்று ஜெயிக்கலாமே. ஏன் அவ்வளவு பயமா


ஜெய்ஹிந்த்புரம்
செப் 20, 2025 09:04

பாஜக தனியா நிக்கட்டும். அதே தொகுதியில் காங்கிரசும் தனியே நிக்கட்டும். பாஜக டெப்பாசிட் காலியாகும்.


Srinivasan Narasimhan
செப் 19, 2025 13:16

ஏன் இந்த நாடகம் போடர


Shivakumar
செப் 19, 2025 12:45

அதெல்லாம் கொடுக்கமுடியாது. திருமாவுக்கு ரெண்டு சீட்டு காங்கிரசுக்கு ஒரு 15 சீட்டு அவ்வளவுதான் .


RAVINDRAN.G
செப் 19, 2025 12:29

காங்கிரஸ் என்ற பெயரில் இயங்கும் திமுக தமிழக கட்சி தலைவர்.


VSMani
செப் 19, 2025 10:26

திமுக அதிமுக மத்தியில் ஆட்சியில் பங்கு கேட்கும் ஆனால் மாநிலத்தில் ஆட்சியில் பங்கு கொடுக்காது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை