சென்னை: நீலகிரியில் கனமழை கொட்டி தீர்க்கும் நிலையில், பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்க அவசர கால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவு மழை பெய்திருக்கிறது. அக்., 1ம் தேதி முதல் நவ., 3ம் தேதி வரை மழை இயல்பை விட 19% அதிகமாக பெய்திருக்கிறது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் 253.1 மி.மீ மழை பெய்திருக்க வேண்டிய நிலையில், தற்போது 301.1 மி.மீ மழை கொட்டித் தீர்த்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kx2ra5jt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்று மழைக்கு வாய்ப்பு
நீலகிரிகோவை தூத்துக்குடிதிருநெல்வேலிகன்னியாகுமரி தென்காசி திருவாரூர் தஞ்சாவூர் ராமநாதபுரம் கடலூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம்புதுக்கோட்டை சிவகங்கைதிருச்சி நாமக்கல் திருவள்ளூர் சென்னை செங்கல்பட்டு விழுப்புரம் ராணிப்பேட்டைகாஞ்சிபுரம் வேலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (நவ., 04) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில்,கோவை மாவட்டம்
மேட்டுபாளையம்-30சிறுவாணி-300பெரியநாயக்கன் பாளையம்- 22.8தொண்டாமுத்தூர்-22வால்பாறை- 17 அன்னூர்-9.4நீலகிரி மாவட்டம்
குன்னூர்-87கோத்தகிரி- 59கோத்தகிரி எஸ்டேட்- 28அவலாஞ்சி-6 மலை ரயில் ரத்து
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் குன்னூரில் மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உதவி எண்கள் அறிவிப்பு
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழை பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க அவசர கால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.Toll free - 1077,0423-2450034,0423-2450035வாட்ஸ்அப்- +91 9943126000