உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்று 11, நாளை 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை

இன்று 11, நாளை 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் இன்று (மே 05) 11 மாவட்டங்களிலும், நாளை (மே 06) 4 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கரூர், திருச்சி, அரியலுார், பெரம்பலுார், கள்ளக்குறிச்சி, தென்காசி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், நீலகிரி, கோவை ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (மே 06)

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ