உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீலகிரியில் கொட்டித்தீர்க்கும் கனமழை: அவலாஞ்சியில் 256 மி.மீ., பதிவு

நீலகிரியில் கொட்டித்தீர்க்கும் கனமழை: அவலாஞ்சியில் 256 மி.மீ., பதிவு

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் 3வது நாளாக பரவலாக மழை பெய்து வருகிறது. அவலாஞ்சியில் அதிகபட்சமாக 256 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் 3வது நாளாக பரவலாக மழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் மழை தொடர்வதால் ஊட்டி-மஞ்சூர், இத்தலார், எடக்காடு, ஊட்டி- கூடலுார் சாலை மற்றும் பந்தலுார் பகுதிகளில் நுாறாண்டு பழமை வாய்ந்த ஏராளமான மரங்கள் விழும் நிலையில் அபாயகரமாக உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருவாய் துறையினர் இது போன்ற மரங்களை அடையாளம் கண்டு அகற்ற வேண்டும். என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=31321wj5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நிரம்பியது குந்தா அணைகுந்தா அணை முழு கொள்ளளவான 89 அடியை எட்டியது. வினாடிக்கு, 400 கன அடி வீதம் தண்ணீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. நேற்றிரவு இரண்டு மதகுகளில் தலா , 200 கன அடி வீதம் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இரண்டு நாட்களாக பெரும்பாலான கிராமங்களில் மின் தடை தொடர்வதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தேயிலை, காய்கறி விவசாயம் செய்யும் 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறு விவசாயிகள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக மழை தொடர்வதால் தோட்ட வேலைக்கு செல்ல முடியவில்லை. சில இடங்களில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. சுற்றுலா தலங்கள் அனைத்து தற்காலிகமாக மூடப்பட்டதால் வெறிச்சோடிய நிலையில் அப்பகுதிகளில் வியாபாரம் செய்து வந்தவர்கள் வருவாய் இன்றி தவிக்கின்றனர். கடும் குளிர் வாட்டுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை விவரம் மல்லி மீட்டர் பின்வருமாறு:

நீலகிரி மாவட்டம்

அவலாஞ்சி- 256எமரால்ட் -132 குந்தா-110 அப்பர் பவானி 123 குந்தா பாலம் 109வென்ட்ஒர்த் 100 சேர்முள்ளி 80பந்தலூர் 77 சாம்ராஜ் எஸ்டேட் 76 நடுவட்டம் 71 பார்வுட் 59 அப்பர் கூடலூர் 58 தேவாலா 55 கூடலூர் பஜார் 54 கிளன்மார்கன் 46

கன்னியாகுமரி மாவட்டம்

அடையாமடை 78.2 சுருளக்கோடு 71.4பாலமோர் 69.4 பெருஞ்சாணி 58.8 மாம்பழத்துறையாறு 58.2 புத்தன் அணை 57.8 ஆணைக்கிடங்கு 57.2 கோழிப்போர்விளை 55.4 சித்தார் 53.4 திற்பரப்பு 50பேச்சிப்பாறை 45.4 முள்ளங்கினாவிளை 42.6 முக்கடல் அணை 41 மைலாடி 40.2 தக்கலை-37குளச்சல் -37குருந்தன்கோடு 36.4 குழித்துறை 35.4 நாகர்கோவில் 34.2

கோவை மாவட்டம்

சின்னக்கல்லாறு 116சிறுவாணி அடிவாரம் 86 சின்கோனா 70சோலையார் 61வால்பாறை பிஏபி -58வால்பாறை தாலுகா ஆபீஸ் 55மாக்கினாம்பட்டி 44.6 ஆனைமலை 39 பொள்ளாச்சி 28.4 கிணத்துக்கடவு- 26

தேனி மாவட்டம்

சோத்துப்பாறை 16 கூடலூர் 15.6 உத்தமபாளையம் 13.2 பெரியார் 10.1 போடிநாயக்கனூர் 7.4அரண்மனைபுதூர் 7.2 மஞ்சளாறு 6 ஆண்டிபட்டி 6 வைகை அணை 5.6 வீரபாண்டி 3.6


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
மே 27, 2025 11:50

நாட்டில் உள்ள நதிகளை இணைப்பதின் மூலம் இதுபோன்ற மழைக்கால பிரச்சினைகளுக்கு ஒரு முடிவு காணலாம். மழைக்காலங்களில் அதிக நீர்வரத்து உள்ள நதிகளை, வருடம் முழுவதும் வறண்டு கிடக்கும் ஆறுகளுடன் இணைப்பதின் மூலம், வறண்ட மாநிலங்களில் உள்ள தண்ணீர் பிரச்சினை முடிவுக்கு வரும். அதிக நீர் வரத்து உள்ள நதிகளின் அருகில் இருக்கும் கிராமங்களில் வெள்ள ஆபத்து தடுக்கப்படும். யோசிக்கவேண்டியது மத்திய மற்றும் மாநில அரசுகள்.


deva
மே 27, 2025 10:25

டேக் கேர் நீலகிரி மக்களே...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை