உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தனியார் பல்கலை மசோதாவை திரும்ப பெற உயர் கல்வித்துறை முடிவு

தனியார் பல்கலை மசோதாவை திரும்ப பெற உயர் கல்வித்துறை முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட, தனியார் பல்கலை திருத்த சட்ட மசோதா திரும்ப பெறப்பட்டு, மறு ஆய்வு செய்யப்படும்' என, உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:தமிழக சட்டசபையில் கடந்த 15ம் தேதி, தனியார் பல்கலை திருத்த சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் உயர் கல்வி சேரும் மாணவ -- மாணவியரின் சதவீதம் அதிகம். இதனால், அதிகளவிலான உயர் கல்வி நிறுவனங்கள், தமிழகத்தில் துவங்குவதற்கு தேவைகள் உள்ளன.இந்த சூழலில், தற்போது இயங்கி வரும் தனியார் கல்வி நிறுவனங்களை, மாநில தனியார் பல்கலைகளாக தரம் உயர்த்தவும், புதிதாக தனியார் பல்கலைகள் துவங்குவதற்கும், தற்போதுள்ள சில வழிமுறைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும். இந்த நோக்கத்துக்காகவே, இந்த சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது.தற்போதைய தனியார் பல்கலை சட்டத்தின்படி, பல்கலை நிறுவுவதற்கு குறைந்தபட்ச நில அளவு, 100 ஏக்கர் தொடர்ச்சியான நிலம் தேவைப் படுகிறது.ஆனால், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில், அதுபோன்ற மிகப்பெரிய அளவிலான, தொடர்ச்சியான நிலத்தை அடையாளம் காண்பது மிகவும் கடினம்.எனவே, வேகமாக நகரமயமாகி வரும் தமிழகத்தில், நிலங்களின் மதிப்பும் உயர்ந்து வருவதால், பல்கலை துவங்க நிலத்தின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.இருப்பினும், இந்த சட்ட திருத்தம் குறித்து, எம்.எல்.ஏ.,க்கள் சிலர் தெரிவித்த கருத்துகள், சமூக வலைதளம், பொது வெளியில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள் அடிப்படையில், இந்த சட்ட மசோதா குறித்து, கல்வியாளர்கள், துறை சார்ந்த வல்லுநர்கள், கல்வித் துறை அலுவலர்கள் ஆகியோரின் கருத்துகளை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வரின் அறிவுரையின்படி, இந்த சட்ட மசோதா திரும்ப பெறப்பட்டு, உரிய மறு ஆய்வு செய்யப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

spr
அக் 26, 2025 18:42

"தற்போதைய தனியார் பல்கலை சட்டத்தின்படி, பல்கலை நிறுவுவதற்கு குறைந்தபட்ச நில அளவு, 100 ஏக்கர் தொடர்ச்சியான நிலம் தேவைப் படுகிறது." இதுதான் பல்கலைக் கழகம் குறித்த தமிழக அரசின் மனப்போக்கு. கல்விக்கான சூழல் இருக்கிறதா? கற்பிக்கத்த தகுந்த ஆசிரியர், பாடத் திட்டம் இருக்கிறதா என்றெல்லாம் கவலைப்படாத மனநிலை. பெங்களூர் பன்னாட்டுப் பல்கலைக் கழகங்களை ஈர்க்கும் நிலையில் பெரியார் படத்தை வைத்து விளம்பரம் செய்ய உதவிய ஹார்வர்டு பல்கலைக் கழகத்தை இங்கே துவக்க கோரிக்கையாவது வைத்தாரா? 9 இங்கிலாந்து பல்கலைக் கழகங்கள் கொண்டு வந்த மோடி மோடிதான்


V Venkatachalam, Chennai-87
அக் 26, 2025 16:27

நீட் மாதிரி ஏதாவது ஆப்பு ரெடியா இருக்கான்னு தெரியலை. அப்படி இருந்தால் தவக்களை வாயன்கள் வழியா வெளியே தெரிஞ்சிரும். திருடனுங்களுக்கு தேள் கொட்டி இருந்தாலும் தெரிஞ்சிரும்.


c.mohanraj raj
அக் 26, 2025 11:56

தற்குறிகள் சட்டம் இயற்றினால் அப்படித்தான் இருக்கும் வழக்குகள் தேங்கி கிடக்கின்றன இதில் சட்டப் பிரச்சனை ஏதாவது உள்ளதா அதை திருத்த வேண்டுமா என்று கேட்காமல் ஆளாளுக்கு ஒரு சட்டம் என்ன நாடு இது சுடுகாடு ஆக்காமல் விட மாட்டார்கள் போல


பெரிய ராசு
அக் 26, 2025 10:20

கொடுமையான சர்வாதிகார போக்குடன் திமுக மற்றும் அதன் பினாமிக்காக கொண்டுவரப்பட்ட சட்டம், தீயமுக அழித்தொழிக்கப்படவேண்டிய இயக்கம், மேலும் SRM வேல்ஸ் சவிதா ராமச்சந்திர சத்தியபாமா எல்லாம் அரசுடைமைக்கவேண்டும் ... பணமுதலைகளின் வயிறை கிழிக்கவேண்டிய நேரம் இது ..கல்வி மருத்துவம் போக்குவரத்து எல்லாம் தேசியமயமாக்கவேண்டிய நேரம் இது ..


Ram
அக் 26, 2025 07:16

கல்வியாளர்களை கலந்தோசிக்காமல் இவர்கள் கட்சியின் mla களுக்காகவே கொண்டுவந்த சட்டம் .. இந்தி காமெடி என்னவென்றால் தமிழகத்தில் உயர்கல்வியில் தரமிருக்கிறதாம்


KOVAIKARAN
அக் 26, 2025 07:07

அதெல்லாம் ஒன்றுமில்லை. இந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்குப்போனால் அவர் அதை நிகாரிக்கமாட்டார். அனால் அதை அப்படியே ஜனாதிபதிக்கு அனுப்பி விடுவார். அங்கே அது ஒன்றும் வேலைக்காகாது. அதனால் தான் எதற்கு வம்பு என்று அந்த மசோதாவையே துண்டு சீட்டு முதல்வர் கிடப்பில் போடச் சொல்லிவிட்டார்.


T.Senthilsigamani
அக் 26, 2025 06:51

தனியார் பல்கலை மசோதாவை திரும்ப பெற உயர் கல்வித்துறை முடிவு. சபாஷ் சபாஷ் சபாஷ் இது மிகவும் தவறான முடிவு என நடுநிலை கல்வியாளர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர் . ஏற்கனவே தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், அரசு அனுமதி சுயநிதி தனியார் பல்கலைக்கழகங்கள் என கல்வி தனியார் மயமாகி கொண்டிருக்கும் வேளையில் இந்த மசோதா எரியற நெருப்பில் நெய் ஊற்றுவது போல கல்வி தனியார்மயமாதலை மேலும் மேலும் ஊக்குவிக்கும் .ஆனால் கொடுமை என்னவென்றால் இந்த மசோதா நிறைவேற்றியவுடன் திராவிட ஆதரவு கல்வியாளர்கள் வானளவு அல்ல பிரபஞ்ச அளவிற்கு இந்த விடியா அரசை புகழ்ந்து தள்ளிவிட்டனர் . கர்மவீரர் காமராஜர் காலத்தில் நடந்த கல்வி புரட்சிக்கு பின்பு இப்போது இரண்டாவது கல்வி புரட்சி ,இந்த மசோதா மூலம் நடந்தே தீரும் என அடித்து பேசினர் திராவிட ஆதரவு கல்வியாளர்கள் . உலகத்திலே கல்வி வளர்ச்சி குறியீட்டில் பின்லாந்து நாட்டை பின்னுக்கு தள்ளி விட்டு தமிழகம் முதன்மை இடம் பிடிக்கும் என மற்றோரு திராவிட ஆதரவு கல்வியாளர் பேசினார் . உலகின் கல்வி வல்லரசாக தமிழகத்தை சமூக நீதி திமுக அரசு ,இந்த மசோதா மூலம் உயரச்செய்யும் என்றார் மற்றோரு திராவிட ஆதரவு கல்வியாளர். வெளி நாட்டு மாணவர்கள் அமெரிக்கா ,ஜெர்மனி ,கனடா ,இங்கிலாந்து சென்று படிப்பது போல இனி தமிழகத்தை நோக்கி மிகுந்த எண்ணிக்கையில் வருவார்கள் என ஆனந்தம் கொண்டார் மற்றோரு திராவிட ஆதரவு கல்வியாளர் . ஆனால் இப்போது மசோதாவை விடியா அரசு திரும்ப பெற்றால் அவர்கள் திராவிட கோமாளி என ஏமாளி என மடமையின் உச்சியில் /அறியாமை இருளில் உக்கார்ந்து கொள்ளுவார்கள் .இந்தியாவின் சாபக்கேடு இத்தகைய தீதான கல்வி திராவிட கோமாளிகள்


Sadananthan Ck
அக் 26, 2025 08:11

சார் சரியாக சொன்னீர்கள் திராவிட த்திற்கு வாயை தவிர வேறு என்ன இருக்கிறது


Kasimani Baskaran
அக் 26, 2025 06:32

திரும்ப கவர்னரிடம் மல்லுக்கட்ட முடியாது என்று குறைந்த வருமானம் வரும் என்பதாலும் கைவிடப்பட்டது?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை