வாசகர்கள் கருத்துகள் ( 11 )
என்னதான் படித்தவரானாலும் பேசுவதன் பொருள் புரிந்து பேசுவதோ அல்லது என்ன பேசுவேண்டுமென்று அறிந்து பேசுவதோ ஒரு பெரிய கலை. நான் அரசாங்கத்திற்காக வேலை செய்யவில்லை என்பது தவறு. நான் பாஜக கட்சிக்காக வேலை செய்யவில்லை" என்று சொல்லியிருந்தால் அது சரி . மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதுதான் ஒரு அரசாங்கம். இந்திய நாட்டு மக்களால் தேர்வு செய்யப்பட அரசு என்னிடம் உதவி கேட்டதால், என் நாட்டிற்காக இப்பணியைச் செய்கிறேன். இது இஸ்லாமுக்கு எதிரானதல்ல. அனைத்து மனித குலத்தையே அச்சுறுத்தும் பயங்கரவாதத்தை எதிர்த்துக் குரல் கொடுக்கிறேன். ஒரு இந்தியனாக இது என் கடமை என்று சொல்லி இருந்தால் அது சரி. கனிமொழி என்ன சொல்லுவாரென்று பார்ப்போம்
சசிதரூர் இந்த வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா வந்து இறங்கியதும் முதல் வேலையாக காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவார் ஏனென்றால் ராகுல்காந்தி இவரின் மேல் அவ்வளவு வன்மத்தில் உள்ளார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சோனியா மற்றும் ராகுல்காந்தி மல்லிகார்ஜூன கார்கேயை நிறுத்தி அவருக்கு எதிராக யாரும் போட்டியிடாமல் அன்ன போஸ்டில் ஜெயிக்க வைக்க வேண்டும் என்று நினைத்திருந்த வேளையில் அவர்களின் ஆசையில் மண்ணை அள்ளிப் போடும் விதமாக இந்த காங்கிரஸ் எம்.பி சசிதரூர் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்து ராகுல்காந்திக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் ஆனாலும் ராகுல்காந்தி உத்தரவின் பேரில் கார்கேதான் ஜெயித்தார் சசிதரூர் தோல்வியை தழுவினார். அப்போதிருந்தே ராகுல்காந்திக்கு இவர் மீது பயங்கர கோபமும் காழ்ப்புணர்ச்சியும் ஏற்பட்டு விட்டது எனவே இவரை சமயம் பார்த்து கட்சியில் இருந்து ஓரம் கட்ட கங்கணம் கட்டிக் கொண்டு இருந்தார் ஆனால் சசிதரூரை நீக்குவதற்கு சரியான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை அதனால் பொறுமை காத்தார் இதோ இப்போது அதற்கான சரியான நேரம் பிரதமர் மோடியின் மூலம் அமைந்து விட்டது அதனால் காங்கிரஸ் கட்சியில் இருந்து சசிதரூர் நீக்கம் உறுதியாகி விட்டது.
சசி தரூரின் சொல்லும் செயலும் அரசியலுக்கு அப்பாற்பட்டு பாராட்டுக்குரியதே. ஆனால் நம்ம கனி என்ன ஆனார் / செய்தார் என்று எந்த தகவலும் இல்லையே??
சசிதரூர் இந்திய நாட்டின் பொருப்புள்ள மக்கள் பிரதிநிதி என்ன செய்ய வேண்டுமோ அதை செய்துகொண்டிருக்கிறார். ஆனால் சிலர் ஒரு எதிரி நாடு என்ன செய்யுமோ அதை செய்து கொண்டு இருக்கிறார்கள். அவலம்
Sashi sir, you have raised the bar for your fellow congressmen. Good going.
நான் மிக மிக ஆவலாக எதிர்பார்ப்பது தமிழக எம்பி கனிமொழி என்ன பேசி இருப்பார் என்று தெரிந்துகொள்ள.
அண்ணனுக்காக அயலக டீல் எதாவது பேசியிருப்பார் ன்னு நினைக்கிறீர்கள்?
தீவிரவாதம் என்று ஏன் சொல்ல தயக்கம்?. பாகிஸ்தான் நமது தேசத்தில் கட்டவிழ்த்து விடுவது இஸ்லாமிய தீவிரவாதம் தான் என்று அடித்து சொல்லவேண்டும்!
அரசுக்காக வேலை செய்யவில்லை என்றால் என்ன அர்த்தம். மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு பிரதிநிதி தன்னிச்சையாக மக்களுக்கு எப்படி சேவை செய்ய முடியும். இவர்கள் எப்போதும் தங்களை அரசியல் கட்சி பிரதிநிதிகளாகவே நினைத்து செயல் படுகிறார்கள். அரசு மக்களுக்கானது. மக்களுக்காக அரசுடன் சேர்ந்து செயல்படுவதில் என்ன தயக்கம். சொல்வதில் ஏன் கூச்சம்.
மனத்தின் ஆழத்திலிருந்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். நாம் பெருமைப்படுகிறோம்.
உண்மையை பேசி உள்ளார்