உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழ்த்தாய் வாழ்த்து பாடலையே தூக்குவேன்: சீமான் அதிரடி

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலையே தூக்குவேன்: சீமான் அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஈரோடு:''நான் ஆட்சிக்கு வந்தால், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலையே தூக்குவேன்,'' என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.ஈரோட்டில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஈழத் தமிழர்களை கொன்று குவித்தபோது வராத கோபம், தமிழ் மொழியை கொன்று குவித்த போது வராத கோபம் இரண்டு வரியை தூக்கியதற்கு வருகிறதா? தமிழ்த்தாய் வாழ்த்தில் இரு வார்த்தைகளை தூக்கியதற்கு இவ்வளவு கொந்தளிக்கிறீர்கள். ஆனால் அந்த பாடலில் ஆரியம் வழக்கொழிந்து உள்ளிட்ட வார்த்தைகளை தூக்கியது யார்?. நாம் தமிழர் கட்சி அதிகாரத்திற்கு வந்தால் தமிழ்த்தாய் பாட்டு எடுக்கப்படும். அதற்கு என்ன செய்வார்கள்.திராவிடம் என்ற வார்த்தை எதை குறிக்கிறது. திடீரென்று இவ்வளவு கோபப்படுகிறீர்களே? திராவிடம் என்றால் என்ன என்பதற்கான விளக்கத்தை தருவார்கள்? 3 தலைமுறையாக தமிழ் எழுத படிக்க முடியாத தலைமுறையை உருவாக்கியதை தவிர, தெருவிற்கு இரண்டு மதுபானக் கடைகளை திறந்ததை தவிர திராவிடர்களின் சாதனையை சொல்ல முடியுமா? அனைத்து உரிமைகளையும் பறி கொடுத்துவிட்டு மாநில உரிமைகளை பற்றிபேசுகிறார்கள்.கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட நாகரிகம் தமிழகத்தின் நாகரிகம். ஆனால், ஆட்சியில் உள்ளவர்கள் திராவிட நாகரிகம் என்று சொல்கின்றனர்.சென்னையில் மழை நீரை வடிக்க முடியவில்லை. மக்கள் கொந்தளிக்கின்றனர். இதை திசைதிருப்ப திராவிடம் பிரச்னையை கிளப்புகின்றனர்.ஹிந்தியை எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் திணித்தது திராவிட ஆட்சி. முதலில் ஹிந்தியை திணித்தார்கள். பிறகு ஹிந்திக்காரர்களை திணித்தார்கள். ஆட்சியில் உள்ளவர்கள் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் எந்த உடன்பாடும் இல்லை. திராவிடம் என்ற சொல் தமிழ் கிடையாது. மாடல் என்ற சொல்லும் தமிழ் கிடையாது. பிறகு திராவிட மாடலில் எப்படி தமிழ் வாழும். திராவிடம் என்ற சொல்லே சமஸ்கிருதம்.இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

Sivasankaran Kannan
நவ 02, 2024 15:20

.. எல்லாத்தையும் தூக்கிடுவ.. ஆட்சிக்கு வந்தா தானே, ஏன் - சீனாவை தூக்கிடுவேன், ஸ்ரீ லங்காவை தூக்கிடுவேன்னு அடிச்சி விட வேண்டியது தானே..


V S Narayanan
அக் 21, 2024 11:01

Well said SEEMAN


R.Varadarajan
அக் 21, 2024 05:06

தமிழ் தாய் பாடல் சினிமா எடிடிங் போன்றவற்றிற்கு ஆளாகாமல் முழுமையாக அசல் வடிவில் பாடப்படவேண்டும். அதுவும் தமிழக அரசு விழாக்களில் மட்டுமே பாடப்படவேண்டும். தனியார் விழாக்களில் பாடப்படுவது கட்டாயபாக்கப்படக்கூடாது.


Selvam S
அக் 21, 2024 01:17

சீமான் மலையாளி சைமன் எப்படி பேசுவார் ?


பச்சை தமிழன்
அக் 20, 2024 23:08

சமஸ்கிருதத்தில் திராவிடர் என்றால் தெலுங்கர் என்று அர்த்தம். தமிழர்களை அந்த காலத்திலேயே ஏமாற்றியது ராமசாமி நாயுடு என்னும் தெலுங்கர் தான். அவர்தான் முதன்முதலில் திராவிடர் கழகம் தி.க என்னும் தமிழர்களுக்கு எதிரான கட்சியையே துவக்கினார். இதெல்லாம் நமது அண்ணண் சீமானுக்கு தெரிந்தும் தெரியாதது போலவே நடிக்கிறார். ஒருவேளை நாம் தமிழர் கட்சி என்றைக்குமே ஆட்சிக்கு வர முடியாது என்று தெரிந்ததால் இப்படி தமிழ் தேசியம் பேசியே காலத்தை ஓட்டி விடலாம் என்று நினைக்கிறாரோ...


Selvam S
அக் 21, 2024 01:12

சீமான் தமிழன் இல்லை மலையாளி கிறிஸ்டியன் சீமான் எப்படி பேசுவார் ?


Ramesh Sargam
அக் 20, 2024 20:51

சீமானுக்கு நன்றாகவே தெரியும் அவர் கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை என்று. அந்த தைரியத்தில்தான் அவர் அப்படி பேசுகிறார்.


Bala
அக் 20, 2024 18:29

மிகவும் அருமை


Ashanmugam
அக் 20, 2024 13:33

அருமையான பேச்சு. அற்புதமான விளக்கம். தைரியமாக துணிச்சலாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கொடுத்த விளக்கம் வரவேற்கத்தக்கது. இந்த விளக்கம் திமுகவுக்கும் திராவிட மாடல் பெயருக்கும் கொடுத்த அடி போல உள்ளது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிப்பாரா? அல்லது அவருக்கு ஜால்ரா போடும் சீடர்கள் விளக்கம் அளிப்பார்களா என்பதை தமிழக மக்கள் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்?இன்று திமுகவின் குறைபாடுகளை தைரியமாக எடுத்துரைக்கும் வல்லமை பெற்றவர் இருவர். ஒன்று நா.த.க தலைவர் சீமான். மற்றொருவர் சசிகலா ஆவர்.


Selvam S
அக் 21, 2024 01:16

சீமான் தமிழர் இல்லை சைமன் மலையாளி


சகுரா
அக் 20, 2024 11:26

சுடாலின் தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர். அதனால் அவரால் தன்னை தமிழன் என்று கூறிக்கொள்ள முடியாது. அதனால் இந்த திராவிட நாடகம். அது சரி அந்த 4000 கோடி என்ன ஆச்சு? அதுக்குத்தான இந்த திராவிட நாடகம். டேக் டைவர்சன் எல்லாம் பழைய டெக்னிக். இப்போ மக்கள் அறிவாளிகள்.


Rajamani Ksheeravarneswaran
அக் 20, 2024 11:17

செந்தமிழ் நாடெனும்போதினிலே செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே செந்தமிழ் வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர் வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல காதல் புரியும் அரம்பையர் போல் - இளங் கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு செந்தமிழ் காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ் கண்டதோர் வையை பொருனை நதி - என மேவிய யாறு பலவோடத் - திரு மேனி செழித்த தமிழ்நாடு செந்தமிழ் முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு - செல்வம் எத்தனையுண்டு புவிமீதே - அவை யாவும் படைத்த தமிழ்நாடு செந்தமிழ் நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ் மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு செந்தமிழ் கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல பல்விதமாயின சாத்திரத்தின் - மணம் பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு செந்தமிழ் வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி யாரம் படைத்த தமிழ்நாடு செந்தமிழ் சிங்களம் புட்பகம் சாவக - மாதிய தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று சால்புறக் கண்டவர் தாய்நாடு செந்தமிழ் விண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும் வெற்பை யடிக்கும் திறனுடையார் - சமர் பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் - தமிழ்ப் பார்த்திவர் நின்ற தமிழ்நாடு செந்தமிழ் சீன மிசிரம் யவனரகம் - இன்னும் தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை ஞானம் படைத் தொழில் வாணிபமும் - மிக நன்று வளர்த்த தமிழ்நாடு செந்தமிழ் இந்த பாடலை தமிழ் தாய் பாடலாக வைக்கலாமே


புதிய வீடியோ