உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டவிரோத பிளக்ஸ் போர்டுகள்; கடமை தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை: ஐகோர்ட் எச்சரிக்கை

சட்டவிரோத பிளக்ஸ் போர்டுகள்; கடமை தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை: ஐகோர்ட் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சட்டவிரோதமாக அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகளை உடனடியாக அகற்ற வேண்டும். கடமையை தவறும் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நேரிடும் என ஐகோர்ட் மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகள், அலங்கார வளைவுகளை அகற்ற உத்தரவிட கோரி ஐகோர்ட் மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 12 ) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: சட்டவிரோதமாக அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகளை அகற்றுவது வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் போலீசாரின் கடமை.* சட்டவிரோத பேனர்கள், அலங்கார வளைவுகளை அகற்ற வேண்டும். * அகற்ற தவறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அபராதம் விதித்து அவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய உத்தரவிடலாம் என கருதினோம். இருந்தபோதிலும் அதை தவிர்க்கிறோம். * இந்த விவகாரத்தில் கடமை தவறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை மற்றும் கிரிமினல் நடவடிக்கையை உயரதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, சட்டவிரோதமாக அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகளை அகற்றிவிட்டு ஆகஸ்ட் 20ல் அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

rama adhavan
ஆக 12, 2025 19:35

கோர்ட் நடடிக்கை எடுக்க யாராவது கேஸ் போட வேண்டும். 5 வருடங்களுக்கு அப்புறம் கேஸ் வரும். 10 வருடம் விசாரணை. அப்புறம் தீர்ப்பு தள்ளி வைப்பு. அதற்குள் எல்லாரும் ஓய்வு. மனுதாரருக்கு வீண் செலவு. எதற்கு இந்த போஸ்ட் மார்ட விச்சாரணை, வழக்கு. அதற்குள் போஸ்டர் கலாச்சாரமும் மடிந்து விடும். நல்ல நீதி.


Padmasridharan
ஆக 12, 2025 16:02

இப்பதான் பேருந்து நிறுத்தங்களில் இடத்தின் பெயர், நிற்கும் பேருந்து எண்களை தவிர கட்சியின் விளம்பர போர்டுகள் காணப்படுகின்றனவே சாமி. .


Raj
ஆக 12, 2025 15:20

ஐகோர்ட் எச்சரிக்கை மட்டும் தான் செய்யும் நடவடிக்கை ஒன்றும் எடுக்காது.


ASIATIC RAMESH
ஆக 12, 2025 14:44

கடமையை தவறும் _____ மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நேரிடும் .... ஹா... ஹா.. அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ரசிகர் மன்றத்தினரும் பயந்து ஒழிஞ்சுக்குவாங்க போலயே...


V Venkatachalam
ஆக 12, 2025 14:33

கோர்ட்டில் ஒப்புக்கு சப்பாணி அறிக்கை கோடுத்துடலாம். அது ஒன்றும் பெரிய வேலை இல்லை. ஆனா கட்சிக்கு கப்பம் கட்டிட்டு தானே நாங்க பிளக்ஸ் எல்லாம் வைக்கிறோம். ஜட்ஜ் ஐயா நீங்க கட்சிக்கு ஃபைன் போடுங்க. எல்லா பிளக்ஸும் இரவோடு இரவாக காணாமல் போயிடும். அதிகாரிங்க என்ன செய்வாங்க.‌ பாவம்..அதிகாரிங்க எப்பவோ அண்ணா அறிவாலயம் போயிட்டாங்க.


புதிய வீடியோ