உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையா? விண்வெளி ஆராய்ச்சி நிலையமா? கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையா? விண்வெளி ஆராய்ச்சி நிலையமா? கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின்

சேலம்: ''10 ஆண்டுகளாக கட்டுவதற்கு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையா? விண்வெளி ஆராய்ச்சி நிலையமா?'' என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.சேலத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500க்கு கொள்முதல் செய்யப்படும். சன்ன ரக நெல்லுக்கு ரூ.2,548 வழங்கப்படும்; இதன் வாயிலாக 10 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள். தி.மு.க., அரசின் செல்வாக்கை பார்த்து வயிறு எரிகிறார்கள். சில நாட்களுக்கு முன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரைக்கு வந்தார். அவர் அரசியல் மட்டும் பேசியிருந்தால், நான் இங்கு பதில் பேசி இருக்க மாட்டேன். ஆட்சியை குறை சொல்லி இருக்கிறார். வெறும் அறிவிப்புகள் மட்டும் வெளியிடுவதாக விமர்சனம் செய்து விட்டு சென்று இருக்கிறார். மத்திய அரசு திட்டத்திற்கு மாநில அரசுதான் நிதி தருகிறது. பிரதமர் மோடி பெயரில் செயல்படும் திட்டத்திற்கு 50 சதவீத நிதியை மாநில அரசு தான் கொடுத்து கொண்டு இருக்கிறது. மத்திய அரசு தான் தமிழகத்திற்கான எந்த சிறப்பு திட்டத்தையும் தராத அரசு. திட்டத்திற்கு ஒதுக்கும் பணம் ஒழுங்காக வந்து சேருவதில்லை. மதுரை வந்த அமித்ஷாவிடம் கேட்கிறேன். 10 ஆண்டுகளுக்கு முன் உங்கள் அரசு அறித்த எய்ம்ஸ் என்ன நிலையில் இருக்கிறது என்று பார்த்தீர்களா? நாங்கள் ஆட்சிக்கு வந்து அதே 4 ஆண்டுகளில் மதுரையில் நூலகம், ஜல்லிக்கட்டு அரங்கம், கீழடி அருங்காட்சியகம் என ஏராளமான பணிகளை முடித்து இருக்கிறோம். இது தான் பா.ஜ.,வுக்கும், தி.மு.க.,வுக்கு இடையே உள்ள வித்தியாசம். 10 ஆண்டுகளாக கட்டுவதற்கு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையா? விண்வெளி ஆராய்ச்சி நிலையமா? தொடர்ந்து 10 ஆண்டுகளாக கட்டி கொண்டு இருக்கிறதுக்கு, ஒழுங்காக நிதி ஒதுக்கி இருந்தால் 2 ஆண்டுகளில் கட்டி முடித்து இருக்கலாம். 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மத்திய அரசு கொண்டு வந்த ஒரு திட்டங்களை சொல்லுங்கள், அதை மட்டும் சொல்ல மறுக்கின்றனர். 2004ம் ஆண்டு காலக்கட்டத்தையும் 2025ம் ஆண்டு காலக்கட்டத்தையும் ஒப்பீட்டு பேசி இருக்கிறீர்கள். அன்றைக்கு ஒரு பவுன் தங்கம் ஐந்தாயிரம் ரூபாய். இன்றைக்கு ஒரு பவுன் தங்கம் விலை ரூ.71 ஆயிரம். தமிழகத்தை புறக்கணிப்பதால், அவர்களின் கூட்டணியை தமிழக மக்கள் புறக்கணித்து கொண்டே இருப்பார்கள். மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். சுயமரியாதை உள்ளவர்கள் தமிழர்கள். டில்லியில் இருந்து தமிழகத்தை ஆள ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். தி.மு.க., அரசுக்கு மக்கள் ஆதரவாக இருக்கிறார்கள். 2026ம் ஆண்டிலும் மக்கள் ஆதரவாக இருப்பார்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

6 புதிய அறிவிப்புகள்!

சேலம் மாவட்டத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் அறிவித்த 6 புதிய அறிவிப்புகள்:* சேலத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பில் சாலையில் சீரமைப்பு, சாக்கடை பாலம் மேற்கொள்ளப்படும்.* சேலம் செவ்வாய்பேட்டை சந்தை 9 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்படும்.* தலைவாசல் வட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இலுப்பநத்தம் கிராமத்தில் 10 கோடி மதிப்பில் தரம் உயர்த்தப்படும். * மேட்டூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சிகளுக்கு புதிய நகராட்சி கட்டடம் கட்டப்படும்.* சங்ககிரி நகராட்சியில் புதிய வணிக வளாகம் அமைக்கப்படும். * எடப்பாடி நகராட்சியில் 9 கோடி மதிப்பிலும், ஆத்தூரில் ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலும் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

தேர்வில் சாதனை

இது குறித்து சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: தமிழக அரசின் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியிலும், நான் முதல்வன் திட்டத்திலும் பயின்ற நம் மாணவர்கள் UPSC முதனிலைத் தேர்வு முடிவுகளில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் சாதனை படைத்துள்ளனர். முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்விலும் அடுத்து நீங்கள் முத்திரை பதிக்க வாழ்த்துகிறேன். உங்கள் வெற்றிமுகங்களை நேரில் காண ஆவலாய் இருக்கிறேன். இந்தச் சாதனைக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகளுக்கும் பயிற்றுநர்களுக்கும் என் பாராட்டுகளை உரித்தாக்குகிறேன்! தமிழ்க்கொடி உயர உயரப் பறக்கட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

panneer selvam
ஜூன் 13, 2025 17:35

Stalin ji , please find time to check the progress of AIMS - Madurai project . More than 60% of construction was completed by Contractor L &T and Medical college and its hostel will start function from this year . By 2026, it shall be fully operational . Please ask your son to return that stolen brick .


புரொடஸ்டர்
ஜூன் 13, 2025 08:52

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் மத்திய அரசு ஆட்சி செய்யும் பாஜக விளம்பரம். ஒதுக்கீடு செய்த நிதி பாஜக குதிரை பேரங்களில் செலவாகிவிட்டது. இருந்த ஒரு செங்கல்லையும் பாஜக தமிழ்நாடு தலைவர் பதவியிலிருந்த அண்ணாமலை திருடிவிட்டார்.


Sundaran
ஜூன் 13, 2025 08:12

கடலூர் மயிலாடுதுறை சிதம்பரம் பேருந்து நிலையங்களை கட்ட முடியவில்லை மயிலாடுதுறை புறவழி சாலைக்கு நிலம் கையக படுத்தி 20 வருடங்கள் ஆகின்றன .இவைகளை முடிக்க துப்பில்லை எய்ம்ஸ் பற்றி பேசுகிறீர் . மத்திய அரசு பற்றி குறை கூறியே காலத்தை ஓட்ட நினைக்கிறீர்கள்


sharthik
ஜூன் 13, 2025 06:46

கூவமா இந்து மகா சமுத்திரமா ?


Kasimani Baskaran
ஜூன் 13, 2025 04:06

தீம்க்காவுக்கு எய்ம்ஸ் வருவதில் ஆர்வம் இல்லை. நிலமெடுப்பதில் இருந்து செங்கல் திருடுவது வரை பலவித தடைகளை ஏற்படுத்தினார்கள்.


Mohanakrishnan
ஜூன் 12, 2025 22:22

stickers


Mohanakrishnan
ஜூன் 12, 2025 22:20

பேச்சில் முட்டாள்தனமும் பயமும் தெரிகிறது


Mecca Shivan
ஜூன் 12, 2025 22:13

வாலு பயன்கிட்ட கொடுத்திருந்தா ஆறே மாதத்தில் கட்டி ஏழாவது மாதத்தில் நொறுங்கி விழுந்திருக்கும்


saravanan
ஜூன் 12, 2025 21:23

கடந்த பத்து ஆண்டுகளில் பிரதமர் மோடி தமிழகத்திற்கு என்ன செய்தார் என்கிறார் முதல்வர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் வாயிலாக சென்னை, மதுரை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு கிட்டத்தட்ட தலா ஆயிரம் கோடி அளவிலான மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தபடவில்லையா இது தவிர அம்ருத் பாரத் திட்டத்தின் மூலமாக பாதாள சாக்கடை, வெள்ள நீர் வடிகால்கள் மற்றும் பூங்காக்கள் போன்ற அடிப்படை வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளபடவில்லையா சென்னை மாநகர வெள்ள தடுப்பு பணிகளுக்கு வழங்கப்பட்ட தொகை என்னவாயிற்று என்பது வெள்ளம் சூழும் போது வழக்கமாக முன்வைக்கப்படும் கேள்வி இதுதவிர பிரதமரின் வீடு கட்டும் திட்டம் வாயிலாக நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு உதவித் தொகை, விவசாயிகளுக்கு கிசான் கார்டு திட்டம் மூலம் பண உதவி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு முத்ரா கடன்கள் இப்படி எண்ணற்ற மக்கள் நல திட்டங்களை பட்டியலிடலாமே இன்னும் எத்தனையோ நல்ல திட்டங்களை தமிழகத்திற்கு வழங்கிய பிரதமர் மோடி அவர்களை பாராட்டாமல் திட்டுவது சரிதானா?


Velayutham rajeswaran
ஜூன் 12, 2025 21:22

அந்த திருவண்ணாமலை ஆற்று பாலம் போல கட்டாமல் உறுதியாக கட்ட கொஞ்சம் சமயம் ஆகும் பொறுத்துக்கொள்ள வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை