உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்

தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தந்தையின் கட்டுப்பாட்டில் உள்ள குழந்தைகளை, சட்டவிரோத காவலில் இருப்பதாக கூற முடியாது' என, தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், குழந்தைகளை ஒப்படைக்க கோரிய தாயின் ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கடலுார் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த வைத்தியநாதன் - கிருஷ்ணப்பிரியா தம்பதிக்கு, ஐந்தரை மற்றும் நான்கரை வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக, கணவனும், மனைவியும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில், வைத்தியநாதன் இரண்டு குழந்தைகளையும் வலுக்கட்டாயமாக தன்னுடன் அழைத்துச் சென்று விட்டதாகவும், குழந்தைகள் தற்போது எங்கு இருக்கின்றனர் என்பது தெரியாததால், குழந்தைகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தன்னிடம் ஒப்படைக்க, போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் எனவும், சென்னை உயர் நீதிமன்றத்தில், கிருஷ்ணப்பிரியா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வேல்முருகன் மற்றும் ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, 'சட்டவிரோத காவலில் இருந்தால் மட்டுமே ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்ய முடியும். 'இந்த வழக்கில், தந்தையிடம் குழந்தைகள் இருப்பதை சட்ட விரோத காவல் என்று கூற முடியாது. அதேநேரம், உரிய நிவாரணம் கோரி மனுதாரரான கிருஷ்ணப்பிரியா சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகலாம்' எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Rathna
அக் 05, 2025 10:38

நவீன காலம். இரண்டு தரப்பும் குழந்தைகளின் வாழ்வை மன நிலையை கெடுக்காமல் நடக்க வேண்டும்.


GMM
அக் 05, 2025 10:14

சிறு வயது குழந்தைகள் இருவரை தந்தை பராமரிப்பது கடினம். தாய் தான் பராமரிக்க முடியும். தந்தை பொருள் உதவி செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரி சேர்க்கை, மருத்துவ சிகிச்சை, ஆதார் போன்ற பதிவில், தந்தை ஒப்புதல் கட்டாயம் ஆக்க வேண்டும். சமூக, சமரச தீர்வு பிரிவினை உணர்வை குறைக்கும். குடும்ப விவகாரங்களில் நீதிமன்ற விசாரணை அதிகம் இருக்க கூடாது. குடும்ப வாழ்க்கையை முறித்து விடும். சகோதரர் இருவருக்கு பெரும் பகை. தந்தை இல்லை. அண்ணனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க தம்பி ஒப்புதல் கட்டாயம் என்றார் தனியார் டாக்டர். தாய் மூலம் தம்பியை அணுக வேண்டிய கட்டாயம். பகை குறைந்தது.


Yasar Arafat Yasar Arafat
அக் 05, 2025 09:54

பெண்களிடம் குழந்தைகள் இருப்பதால் தான் பெரும் ஆபத்து.


duruvasar
அக் 05, 2025 08:28

"சட்டவிரோத காவலில் இருந்தால் மட்டுமே ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்ய முடியும்." ஐயா இந்த கருத்து ஒவ்வொரு வழக்கிற்கும் மாறுபடுமா? இதே மாதிரி செந்தில் பாலாஜி மனைவி தொடுத்த வழக்கில் இந்த ஆட்கொணர்வு மனுவை வைத்து ஒரு 6 மாதம் பிலிம் காட்டியதும் இதே சென்னை நீதிமன்றங்கள் thaan உயர்நீதி மன்றம் உட்பட. மக்களுக்கு சட்டம் பற்றிய புரியும் சக்தி சுத்தமாக இல்லை.


Krishna
அக் 05, 2025 06:36

Good Judgement Enforcing Gender-Equality by Smashing UnConstitutional Prowomen Bias


புதிய வீடியோ