உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடலம்மா மாநாடு: மீன் பிடித்து சீமான் ஆய்வு

கடலம்மா மாநாடு: மீன் பிடித்து சீமான் ஆய்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துாத்துக்குடி: ஏற்கனவே ஆடு மாடுகளுக்கும், மரங்களுக்கும் மாநாடு நடத்திய நாம் தமிழர் கட்சி சீமான், அடுத்ததாக கடல் மாநாடு நடத்தப்படும் என அறிவித்திருந்தார். இதையடுத்து, நேற்று திருச்செந்துார் பகுதியில், படகு வாயிலாக கடலுக்குச் சென்று ஆய்வு செய்தார். பின், மீன் பிடித்தார். நா.த.க., சார்பில் மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்து பேசுவதற்காக, அடுத்தமாதம் 15ல் துாத்துக்குடியில் கடல் மாநாடு நடத்தப்படுகிறது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்காக, நேற்று திருச்செந்துாருக்கு வந்த சீமான், அமலிநகர் கடற்கரைக்கு சென்றார். மீனவர்கள் மற்றும் நா.த.க. நிர்வாகிகளுடன் மீன்பிடிக்கும் படகில் கடலுக்கு சென்றார். கடற்கரையில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவுக்கு கடலில் சென்ற சீமான், அங்கு மீனவர்களுடன் சேர்ந்து, மீன்பிடிக்கும் துாண்டில் வாயிலாக மீன் பிடித்தார். தொடர்ந்து, தன் கட்சி சார்பில் நடத்தப்படும் 'கடலம்மா' மாநாட்டிற்காக, மீனவர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினருடன் ஆலோசனை மேற்கொண்டார். 'கடலம்மா' மாநாடு வாயிலாக, மீனவர்களையும், மீன் வளத்தையும், மீன் பிடி தொழிலையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சீமான் தெரிவித்தார். பின் அவர் அளித்த பேட்டி: பா.ஜ., தான் கொள்கை எதிரி என விஜய் சொல்கிறார். ஆனால், கரூர் சம்பவத்தில் நடிகர் விஜய்க்கு ஆதரவாக பா.ஜ.,வினர் செயல்படுகின்றனர். கரூருக்கு வந்த பா.ஜ., குழுவும், நடிகர் விஜய்க்கு ஆதரவாக செயல்பட்டுஉள்ளது. பிரசார பயணம் என்ற பெயரில், நடு ஊருக்குள் பிரசார வேனில் விஜய் சென்றதுதான், மொத்த பிரச்னைக்கும் காரணம். அதனால், நடந்த சம்பவத்துக்கு விஜய்தான் முழு பொறுப்பேற்க வேண்டும். அரசைக் குற்றஞ்சாட்டுவது பிரச்னையை திசை திருப்பும் முயற்சி. விஜயை எப்படியாவது தங்கள் கூட்டணிக்கு அழைத்து வந்துவிட வேண்டும் என, பா.ஜ.,வினர் தலையால் தண்ணீர் குடிக்கின்றனர். தமிழர் ஒருவருக்கு பிரதமர் பதவி கொடுக்காத பா.ஜ.,வினர், துணை ஜனாதிபதி பதவியை கொடுக்கின்றனர். எதிர்காலத்திலாவது, சுழற்சி முறையில் ஜனாதிபதி பதவியை மாநிலங்கள் வாரியாக கொடுக்க வேண்டும். இது என்னுடைய கோரிக்கை. நிறைவேறுமா என தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Ravi
அக் 05, 2025 19:15

பாட்டுக்கு ,பாட்டெடுத்து நான் பாடுவதை கேட்டாயோ? சாட்சி சொல்லும் சந்திரனே நீ போய் தூது சொல்ல மாட்டாயோ? என்ற படகோட்டி திரைப்படத்தின் பாடலைப் பாடிக் கொண்டே பெங்களூருவில் இருந்து விஜயலெட்சுமி கிளம்பி கடலுக்கு வந்து விடப் போகிறார்?


கூத்தாடி வாக்கியம்
அக் 05, 2025 13:07

அடுத்தது நாட்டு நாய் மாநாடா. பொசுக்குன்னு அத் மறந்துடாதீய்ங்க


V Venkatachalam
அக் 05, 2025 12:21

அடியேன் விண்ணப்பம். செய்தியில் சீமான் ஆய்வு ன்னு இருக்கு. சீமான் ஷோ ன்னு இருந்தாதானே செய்தி சரியா இருக்கும். நன்றி.


Yasararafath
அக் 05, 2025 12:09

சீமான் இப்போது கடல் எல்லாம் ஆய்வு செய்ய ஆரம்பித்திட்டாரா?


vbs manian
அக் 05, 2025 10:34

சமீபத்தில் இவர் கழக தலைமையை சந்தித்ததாக செய்தி. விஜய் பற்றிய விமர்சனம் புரிந்து கொள்ளலாம். இவர் நடத்தும் கூட்டங்களில் எல்லோருக்கும் தண்ணீர் biscut சிற்றுண்டி எல்லாம் ஏற்பாடு செயகிறாரா.


sundar
அக் 05, 2025 10:06

இப்படியாக மரம் மாநாடு ஆடு மாடு மாநாடு கடல் மாநாடு என்று நடத்துவதால் கூடுதலாக ஓட்டுக் கிடைக்கும் (ஓட்டுப் பிரிப்பு வேலைகள் செய்ய முடியும்) என்று மக்களை நம்புகிறார் இவர். பிழைப்பு ஓடட்டும். வயிறு படிக்குமே??


ராமகிருஷ்ணன்
அக் 05, 2025 09:32

கடலம்மா மாநாடு என்றால் தும்பிகளை நடுகடலுக்கு கூட்டிட்டு போயி நல்ல ஆழமாக போயி நடத்த வேண்டும். ஒரு மீனை புடிச்சு கிட்டு போஸ் கொடுத்தா போதுமா. யாரை ஏமாத்துறே.


வாய்மையே வெல்லும்
அக் 05, 2025 09:31

வாழ மீனு இருக்கு ங்குறான் நெத்திலிமீனும் உண்டாம் ஆனா இந்த வோட்டுமீனு மட்டும் சீமானுக்கு கிடைக்கவே இல்லயாம்? ஏன்னா.. இவர் பேசும்போது .. இல்ல இல்ல பேச்சு என்கிற போர்வையில் கர்ஜிக்கும் போது.. எல்லா வோட்டு மீனும் கூச்சல் சத்தத்தினால் எஸ்கேப் ஆயிருச்சாம்.


ராமகிருஷ்ணன்
அக் 05, 2025 06:22

திமுக தனது ஆட்சிகளில் பழைய இடங்களை, திட்டங்களை புதிய புதிய பெயர்களை மட்டுமே வைத்து சாதனை செய்து விட்டதாக பீத்திக் கொள்ளும். அதை வைத்து முடிந்த வரை சுருட்டியும் விடுவார்கள் அதனால மக்களுக்கு எந்த வித பிரோசனம் இருக்காது. அதே பாணியில் சீமாண்டி இந்த மாதிரியான வெத்துவேட்டு டூபாகூர் ஐடியாகளை செய்து மக்களை மடையர்கள் ஆக்குகிறான்


Oviya Vijay
அக் 05, 2025 05:09

அனைத்து மாநாடுகளும் முடிந்த கையோடு நேராகக் கீழ்பாக்கம் மனநல மருத்துவமனைக்குச் சென்று உள்நோயாளியாகத் தன் பெயரைப் பதிவு செய்து கொள்வார் என எதிர்பார்க்கலாம்... ஊரில் உள்ளவர்கள் அத்துனை பேரையும் பைத்தியக்காரப் பயலுங்க பைத்தியக்காரப் பயலுங்க என்று சொல்லிக்கொண்டிருந்த தானும் ஒரு பைத்தியம் தான் என்று உணரும் நாள் வெகு தொலைவிலில்லை... 2026 தேர்தல் தோல்விக்குப் பின் சீமான் வெளியிடப் போகும் அறிக்கை இவ்வாறாக இருக்கும். வெற்றி பெற்றிருக்கும் திமுகவுக்கு வாழ்த்துக்கள். எனக்காக ஓட்டளித்த மக்களுக்கு நன்றி. இவ்வளவு காலமாக உங்களுக்காக உங்களின் அறியாமையை எடுத்துரைத்த என் கைகளில் ஆட்சி அதிகாரத்தைத் தராதது மக்களின் தோல்வி என்றே கூறுவேன். இதில் எனக்கு சிறிதளவும் கவலையில்லை. வாழ்க ஜனநாயகம். பின் தன் வீட்டு வாசலில் தன்னை அழைத்துச் செல்ல வந்திருக்கும் மனநல மருத்துவமனை வேனில் ஏறி அமர்ந்து கொள்வார்...


முக்கிய வீடியோ