ராஜ்நாத்சிங்குடன் கனிமொழி சந்திப்பு
லட்சத்தீவு அருகில், கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட, துாத்துக்குடி தருவைகுளம் பகுதியை சேர்ந்த, 10 மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க வேண்டும். குஜராத், போர்பந்தர் அருகே, மீன் பிடித்து கொண்டிருந்தபோது, கடலில் தவறி விழுந்த, துாத்துக்குடி அயன் பொம்மையாபுரத்தை சேர்ந்த அண்ணாதுரையை, தேடும் பணியை துரிதப்படுத்தி, கண்டு பிடித்து தர வேண்டும் எனக் கோரி, டில்லியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம், தி.மு.க., துணைப் பொதுச்செயலர் கனிமொழி மனு அளித்தார்.