உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடு ரோட்டில் நடந்த கருணாநிதி; ஓடிச்சென்று அழைத்த எம்ஜிஆர்!!

நடு ரோட்டில் நடந்த கருணாநிதி; ஓடிச்சென்று அழைத்த எம்ஜிஆர்!!

(இன்று எம்ஜிஆர் பிறந்தநாள்)

முன்னாள் பிரதமர் இந்திராவால் 1969ம் ஆண்டு 3வது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டவர் வி.வி.கிரி. ஓய்வு பெற்ற பிறகு 1980 ஜுன் 23ல் சென்னையில் காலமானார். அவர் வீடு இருந்த தி.நகர் ஜி என் செட்டி சாலையில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. கிரி உடலை தகனம் செய்யும் சுடுகாட்டு மையத்தில் ஏராளமான விவிஐபிக்கள் குழுமி இருந்தனர். முப்படைத் தளபதிகளும் அவர்களில் அடக்கம். அவர்களோடு செய்தியாளர் என்ற வகையில் நானும் இருந்தேன்.கிரியின் இறுதிச் சடங்குகள் தொடர்பான அறிவிப்பு வெளியானதும் அதன் முழு பொறுப்பையும் மத்திய அரசின் விதிமுறைப்படி, ராணுவம் ஏற்றுக் கொண்டது. கிரியின் உடல் இறுதிப் பயணத்திற்குத் தயாரான நிலையில் கிரியின் வீட்டுக்கே சென்று இறுதி அஞ்சலி செலுத்தலாம் என்ற எண்ணத்தோடு தன் காரில் கருணாநிதி கிளம்பிச் சென்றார். அண்ணா மேம்பாலம் அருகே ஏராளமான கூட்டம் இருந்தது. வாகனங்கள் நகர முடியாத அளவுக்கு நெரிசல். இறுதி சடங்குக்கான நேரமோ நெருங்குகிறது. வாகனத்துக்கோ வழி இல்லை.சில நிமிடங்கள் யோசித்த கருணாநிதி, காரை விட்டுச் ரோட்டில் இறங்கினார். கிரி தெருவை நோக்கி நடக்கத் தொடங்கினார். இதே நேரத்தில் அப்போதைய முதல்வர் எம்ஜிஆரின் கார், மேம்பாலம் அருகே வந்தது. குதிரை வீரன் சிலை இருக்குமிடம் வரை வந்த கார், கூட்டம் காரணமாக நகர முடியாமல் நின்றது. ஒருபுறம் எதிர்க் கட்சித் தலைவர் கருணாநிதி காரும், மறுபுறம் முதல்வர் எம்ஜிஆர் காரும் தடுத்து நிறுத்தப்பட்டன.உடனே போலீஸ் அதிகாரிகள் முதல்வரின் கார் செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தனர். காரில் அமர்ந்திருந்த எம்ஜிஆரின் பார்வையில் கருணாநிதி பட்டுவிட்டார். கருணாநிதி ரோட்டில் நடந்து போவதைப் பார்த்த, எம்ஜிஆர், காரை விட்டு இறங்கி வேகமாகச் சென்று, கருணாநிதியைப் பிடித்து விட்டார். அந்த சாலையில், வாகன நடமாட்டம் இல்லாத நிலையில், இருவர் மட்டும் சந்தித்துக் கொண்டு, பழைய விஷயங்களை பேசிக் கொண்டனர். பின்னர் கருணாநிதியை அழைத்துக் கொண்டு, தன் கார் வரை வந்த எம்ஜிஆர், அவரையும் தன் காரில் ஏற்றிக்கொண்டு கிரி தெருவுக்குப் புறப்பட்டு விட்டார்.உடல் தகனம் செய்யப்படும் இடத்தின் அருகே காரில் இருந்து எம்ஜியாரும், கருணாநிதியும் ஒன்றாக இறங்கியதைக் கண்டு அங்கு இருந்தவர்கள் ஆச்சரியப்பட்டனர்.அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தனிப்பட்ட முறையில் பரஸ்பரம் பாசத்துடன் அவர்கள் நடந்துகொண்டதை மக்கள் புரிந்துகொண்டனர். இன்று எம்ஜிஆரின் பிறந்த நாளை ஒட்டி இந்த சம்பவம் என் மனதில் நிழலாடுகிறது.

- நூருல்லா, ஊடகவியலாளர்

9655578786


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 70 )

என்றும் இந்தியன்
ஜன 24, 2025 17:23

கருணாநிதின்னா கருணாநிதி தான் . திருட்டு ரயில் கருணாநிதி???? தனது மனைவி மனநோயாளி என்று சொன்னவர்??? கனிமொழி தனது பெண் அல்ல என்று நீதிமன்றத்தில் சொன்னவர்???நடு ரோட்டில் நடந்த கருணாநிதி????


.Dr.A.Joseph
ஜன 22, 2025 13:28

ஜெயலலிதா மட்டுமே எதிர் கட்சிகளை எதிரிகளாக பார்த்தார். அதற்கு முன்பிருந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் அன்பாகவே இருந்துள்ளனர். ராஜாஜி -தந்தை பெரியார், பேராசான் ஜீவானந்தம்- கர்மவீரர் காமராஜ், அண்ணா -காமராஜர் ........


Jumbho 2
ஜன 18, 2025 16:43

முதல் முறையாக இந்த சம்பவம் பற்றி கேளிவிப்படுகிறேன். பகைவர்களையும் அணைத்து செல்லும் நல்ல பண்பாளர் மக்கள் திலகம் அவர்கள். இல்லையெனில், காலமெல்லாம் தன்னை திட்டி தீர்த்த கண்ணதாசனை அரசரை கவிஞர் ஆkkகியிருப்பாரா? இல்லேயேல் தன்னை திமுகாவிலிருந்து வெளியேற்றி உத்தரவு இட்ட நெடுஞ்செழியனை தனக்கு அடுத்த ஸ்தானத்தில் வைத்திருப்பாரா? .


Vijay D Ratnam
ஜன 18, 2025 15:07

கருணாநிதிக்கு முதலமைச்சர் பதவி எம்ஜிஆர் போட்ட பிச்சை. கருணாநிதிக்கு அண்ணா சமாதிக்குள் சமாதி என்பது எடப்பாடி பழனிசாமி போட்ட பிச்சை.


GoK
ஜன 18, 2025 14:35

திராவிட இயக்கங்கள் பெரும்பாலும் திருடர்களால் ஆரம்பித்து கொள்ளையர்கள் ஆகி நடத்தப்பட்டு முற்றிலும் வழிப்பறி, கள்ளப்பணம், பேனாமிஸ் இப்படிப்பட்டவர்கள் அவர்கள் குடும்பங்கள், கொள்ளைக்கார கூட்டாளிகள், படுபாதகர்கள், இவர்களால் ஓடும் களவாணிகள் சங்கம். இவர்களை அங்கீகரித்து இயங்க விடும் தேர்தல் ஆணையம் உச்ச நீதி மன்றம் இவை மந்த புத்தி தேக்கங்கள்.


angbu ganesh
ஜன 18, 2025 14:12

அப்படியே நாடு ரோட்டுல விட்டிருக்கலாம் கூப்டாண்டு எங்கள் உயிரை எடுக்க வச்சிட்டர்


Bharathi
ஜன 18, 2025 13:59

இந்த மாதிரி எதுவும் இதுவரை கேள்விப்பட்டதேயில்லை.


Ganesh Subbarao
ஜன 18, 2025 13:06

இந்த கட்டுரையை எழுதியவர் ஒரு திமுக அபிமானி


Sivakumar
ஜன 18, 2025 11:52

எம் ஜி ஆர் ஒரு அரசியல் தற்குறி


Keshavan.J
ஜன 18, 2025 09:57

Hello Sir, you are telling MGR was afraid of karuna for 13 years. Karuna couldnt come to power because of MGR for 13 years. Unfortunately he died because of that karuna came again. Please do fact check


புதிய வீடியோ