உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி

மதுரை: கரூரில் 41 பேரை பலி கொண்டு கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.கடந்த செப்.,27ம் தேதி, கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் என 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக கரூர் தவெக மாவட்ட செயலாளர், பொருளாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6mhhs8ht&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மேலும், தமிழக அரசின் உத்தரவின் பேரில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே, கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கான இழப்பீட்டு தொகையை ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்த அரசியல் கட்சியினரும், அமைப்புகளும் பொதுக்கூட்டங்களை தேசிய, மாநில நெடுஞ்சாலை அருகே நடத்தப்படக்கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஏற்கனவே அனுமதி பெற்ற கட்சி கூட்டங்களை நடத்த தடையில்லை, என்றனர். பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் தொடர்பாக அரசு நிலையான வழிகாட்டுதல் பிறப்பிக்கும் வரை, எந்த அரசியல் கட்சியினரும், அமைப்புகளும், பொதுக்கூட்டம் அல்லது எந்த கூட்டமாயினும், தேசிய, மாநில நெடுஞ்சாலை அருகே வழங்கப்படாது என்று அரசு தரப்பில் நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், சாலைகளில் கூட்டம் நடத்துவதற்கு தடை விதித்தனர். நீதிபதிகள் கூறியதாவது; அனைத்து அரசியல் கட்சி, அமைப்புகளின் பொதுக்கூட்டங்களின் போது குடிநீர், மருத்துவம் ஆம்புன்ஸ் வசதியோடு, கழிப்பறை, வெளியே செல்லும் வழி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துத்தரப்படுவது உறுதிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.தொடர்ந்து, கரூர் கூட்ட சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிடக்கோரிய மனு மீதான விசாரணையின் போது, உயர்நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்காதீர்கள் என்று நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர். மேலும், விசாரணை இன்னும் தொடக்க நிலையில் இருக்கும் போது, எப்படி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதோடு, சிபிஐ விசாரணை கோரிய அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதேவேளையில், பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டை உயர்த்தி வழங்கக்கோரிய மனு தொடர்பாக தவெக தலைவர் விஜய் மற்றும் அரசு தரப்பினரை இரு வாரங்களுக்குள் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. கரூர் சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணை நடந்த அதேவேளையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதும் விசாரணை நடைபெற்றது. தவெகவினரின் அடாவடியால் ரூ.5 லட்சம் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்ஜாமின் மனு தள்ளுபடிமேலும், நாமக்கல்லில் பிரசாரத்தின் போது தனியார் மருத்துவமனை சேதப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நாமக்கல் தவெக மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் மீது மேலும் 8 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, தவெக மாவட்ட செயலாளர் சதீஷ்குமாரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். கட்சியினரை கட்டுப்படுத்த தெரியாதா? பொறுப்புடன் செயல்பட வேண்டாமா? என்றும் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

spr
அக் 03, 2025 18:18

"கரூர் கூட்ட சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிடக்கோரிய மனு மீதான விசாரணையின் போது, உயர்நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்காதீர்கள் என்று நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்." - எதிர்பார்த்த ஒன்றுதான். தமிழகத்தின் அனைத்து நீதிமன்றங்களும் ஆளும்கட்சிக்குச் சாதகமாக நடந்து கொள்ளும் என்பதால்தான் அ இ அ தி மு க ஆட்சியின் போது திமுக கொண்டுவந்த செல்வியின் வழக்கே கர்நாடகாவிற்கு மாற்றப்பட்டது. தீர்ப்பும் நியாயமாக இருந்தது.த வெ க கேட்பது சி பி ஐ விசாரணை தான். இறுதித் தீர்ப்பல்லவே. தமிழகத்தில் ஆளும்கட்சித் தலைவர் செந்திலின் ஆளுமை அறியாத ஒன்றா? சி பி ஐ விசாரணைக்கு உத்தரவிடுவதில் என்ன பிரச்சினை? பொதுவாக, இந்திய நீதிமன்றங்கள் மத்திய அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போது தமிழக நீதிமன்றங்கள் மட்டும் எப்படி ஆளும் கட்சிக்கு ஆதரவாக நடந்து கொள்கின்றன என்ற இந்த யுக்தியை மோடி கண்டுபிடித்தால் மத்திய அரசுக்கு நல்லது


என்னத்த சொல்ல
அக் 03, 2025 18:02

இங்கு கருத்து சொன்னவங்களெல்லாம், 2 வாரத்திற்கு முன் திமுக விற்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு சொன்னபோது, என்னமா நீதிமன்றங்களைம், நீதிபதிகளையும் வெகுவாக புகழ்ந்தது ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறது..


ديفيد رافائيل
அக் 03, 2025 17:34

Supreme court போனா CBI விசாரணை நடக்கும்


கனோஜ் ஆங்ரே
அக் 03, 2025 18:28

அய்யா, அங்குசாமி...? இது “தலைவிரிச்சான்பட்டி“...ங்ற குக்கிராமத்தில் நடந்த நிகழ்வு அல்ல... ஊரே, உலகமே லைவ்..ல பார்த்த நிகழ்வு...? அந்நிகழ்வை நீங்க சொல்ற சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் பார்த்திருப்பாங்க...?


Mariadoss E
அக் 03, 2025 15:56

அப்படி தான். அடாவடி, அட்டகாசம் செய்யும் இவங்களை வச்சி செய்ய அரசியலுக்கு அப்பால்பட்ட மாண்புமிகு நீதிமன்றம் தான் சரி......


Kumar Kumzi
அக் 03, 2025 15:11

போட்ட பிச்சைக்கு விசுவாசமா இருக்காங்க பாவம் அப்பாவி மக்கள்


கடல் நண்டு
அக் 03, 2025 15:08

இரும்புக்கரம் கொண்டவரை எதிர்த்து எப்படி தீர்ப்பு வழங்குவது ??


சத்யநாராயணன்
அக் 03, 2025 15:01

இப்பொழுது நீதிமன்றங்கள் எல்லாம் திமுக நற்பணி மன்றங்களாக மாறிவிட்டது என்பதை நாம் அறியாததா காலம் தாழ்த்தி இவர்கள் சிபிஐக்கு மாற அனுமதி அளித்தாலும் எந்த பிரயோஜனமும் இல்லை அதனால் நீதிபதிகள் அப்படித்தான் செய்வார்கள்


SUBBU,MADURAI
அக் 03, 2025 14:48

ஏற்கனவே அனுமதி பெற்ற கட்சியின் பொதுக்கூட்டங்கள் நடத்த தடையில்லையாம்! இது என்ன தீர்ப்பு? அப்படியென்றால் இதையே சாக்காக வைத்து ஆளுங்கட்சியான திமுக அடுத்த ஆறு மாதங்களுக்கான தாங்கள் பொதுக்கூட்டங்கள் நடத்தும் உத்தரவை முன் கூட்டிய தேதிகளில் வாங்கி வைத்து விடுமே? அதே போல் விசாரனை தொடக்க நிலையில் இருக்கும் போது சிபிஐ விசாரனைக்கு உத்தரவிட மறுத்து அதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் ஏன் திமுக அரசு அரசு அவசர அவசரமாக அமைத்த ஓய்வு பெற்ற பெண் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தை ஏன் கண்டிக்கவில்லை. நான் இதுவரை சென்னை உயர்நீதிமன்றம் போல் இல்லாமல் எங்கள் ஊரின் மதுரை கிளையை திமுக அரசின் உத்தரவுக்கு அடிபணியாது என்று இறுமாப்புடன் கூறி வந்தேன் ஆனால் திமுக காரனுங்க எந்தவொரு நேர்மையான மனிதரையும் தன் பக்கம் இழுப்பதில் வல்லவர்கள் அதைத்தான் இந்த உத்தரவு உறுதி செய்கிறது. ஆக மொத்தம் நீதிபதிகள் ஒன்றும் வானத்தில் இருந்து குதித்து வந்தவர்கள் அல்ல என்று கருணாநிதி அன்று கணித்து சொன்னது இன்று நிரூபணம் ஆகிவிட்டது.


கனோஜ் ஆங்ரே
அக் 03, 2025 17:18

///நான் இதுவரை சென்னை உயர்நீதிமன்றம் போல் இல்லாமல் எங்கள் ஊரின் மதுரை கிளையை திமுக அரசின் உத்தரவுக்கு அடிபணியாது என்று இறுமாப்புடன் கூறி வந்தேன்//// அய்யா சாமி... அடிப்படை அறிவுகூட இல்லாமல், இப்படி பிதற்றுகிறீர்களே...? மதுரக்காரங்க எல்லாரும் அறிவாளிங்க..ன்னு நினைச்சேன்.. இப்படி இருக்குறியே...? மதுரை கிளை...ன்னு சொல்லும்போதே... சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளைதானே அது தெரியலையா... சென்னை இருக்குற நீதியரசர்கள்தான் மதுரைக்கும் வருவார்கள்...னு அடிப்படைகூட அறியாமல் இருக்கிறீர்களே...? மதுரை கிளைக்கு மட்டும் வானத்துலந்தா குதிச்சு வருவாங்க...? என்னய்யா, இப்படிப்பண்றியே அய்யா...?


RAAJ68
அக் 03, 2025 14:42

ஆடி மாத தள்ளுபடி மாதிரி புரட்டாசி மாத தள்ளுபடி.. இறைவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் அவன் உங்களை ஒருநாள் தள்ளுபடி செய்வான்.


திகழ்ஓவியன்
அக் 03, 2025 14:38

தெரிந்த விஷயம் தான் அரசு மீது தவறு இருந்து இருந்தால் இந்நேரம் கோர்ட்டு சுமோட்டோ வா வழக்கு எடுத்து இருப்பார்கள் அப்பவே தெரிகிறது விஜய் க்கு ஆப்பு காத்திருக்கு என்று.. "We are helpless"னு சொன்ன சீனியர் வக்கீல்கள் டெல்லியில் ஆதவ் அர்ஜுனா அப்செட் அடுத்த மூவ் என்ன? அடுத்து இவரும் குட்டுனு போயி கூட்டுனு வரும் ஆனந்த் எல்லாம் சிறையில் தாண்டியோ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை