வாசகர்கள் கருத்துகள் ( 48 )
இங்கு தவறுதலாக பிரச்னை நடந்து விட்டது. இதையே பற்றி பேசிக்கொண்டு இருக்க காரணம் என்ன???. இங்கு நிவாரண கொடுக்க வேண்டும், தேவையான மருத்துவ உதவி செய்ய வேண்டும், பெரிய இழப்பீடு ஆகா விஜய், ஆளும் கட்சி கொடுக்க முன்வந்து உள்ளது. மேலும் மற்ற கட்சிகள் அவர்களால் முடிந்த அளவிற்கு பண செய்து வருகிறார்கள். விஜய் வரும் காலத்தில் இப்படி நடக்காமல் இருக்க தேவையான வழிகளை கடை பிடிப்பார். அதே விஜய் மீதும் தவறு இல்லை. ஆளும் கட்சியின் மீது பல குற்ற சாட்டுகள்.வருகின்ற. ஆனாலும் எல்லாவற்றுக்கும் அவர் பதில் அளித்து விடுவார்கள். இதற்கு மேல் கோர்ட் வில் தான் தீர்வு காணப் முடியும். ஆனால் நீதி மன்றமும் இனிமேல் இப்படி நடக்காமல் இருக்க கூடிய வழிமுறைகளை கடை பிடிக்க சொல்வார்கள்.
2 வயதுக் குழந்தை ‘என்னை விஜய் uncle பார்க்க அழைத்துப்போ’ என்று அழுததா ?’ ஒரு நடிகனுக்கு இத்தனை கூட்டம், அதுவும் தனது ஆட்சிக்குட்பட்ட எல்லையில், என்றால் கவுரவப் பிரசினை இல்லையா? எப்படியாவது அதைத் தோல்வியுறச்செய்ய முன்வருவார் என்றும் விஜய், மற்றும் மக்களும் எதிர்பார்த்திருக்க வேண்டாமா? , அவரை அரசியலிலிருந்து விரட்ட, எதிரிகள் இன்னும் நூறு உயிர்களைக்கூடப் பிரிப்பார்கள் மக்களுக்குத்தான் தெளிவு வர வேண்டும்
ஹும் விஜய் இதை இதை எதிர் பார்த்திருக்க மாட்டார். அரசியல் பயனத்தில் பல மேடு பள்ளங் களை கடந்து தான் ஆக வேண்டும். துவண்டு விட கூடாது. அனுபவம் தான் அவசியம். முன்பு அரசியல்கட்சி தொடங்கி கமல் தீ முக்காவில் கரைந்து போனார். ரஜினி ஒதுங்கினார். இவர்களையும் அணுகி அவர்களின் நிலை களை ஆராய்ந்திருக்கலாம். விஜயின் தந்தை சந்திரசேகரை அணுகி அவர் சொல் படி நடந்திருக்கலாம்.
எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் இல்லாத பிரச்சினை விஜய் கட்சிக்கு இருக்கிறது. விஜய் தனது தொண்டர்களை ஒழுங்கு படுத்துவதா அல்லது ரசிகர்களை ஒழுங்கு படுத்துவதா என்ற பிரச்சனைதான். எல்லாக் கட்சிகளிலும் விஜய் ரசிகர்கள் இருக்கின்றார்கள். நயன்தாராவுக்கும் சில்க் ஸ்மிதாவுக்கும் கோவில் கட்டியவர்கள் இந்த ரசிகர்கள். ஆனால் பெரும்பாலும் எதோ ஒரு கட்சியின் தொண்டர்களாக இருப்பார்கள். ஆகவே தங்கள் கட்சிகளிலிருக்கும் விஜய் ரசிகர்களை அவர்களே நெறிப்படுத்த வேண்டும்.
விஜயின் கூட்டத்திற்கு வருபவர்கள் அனைவரும் தொண்டர்கள் அல்ல ரசிகர்கள் என்று திமுக உட்பட பல கட்சிகள் சொல்கின்றார்கள். அப்படியானால் அந்த ரசிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது யார்?
நிவாரணத் தொகை கூடக் கூட, அதற்கேற்றபடி சாவு எண்ணிக்கை அதிகரிக்கும்.
விடியல் ரொம்ப ஜாக்கிரதையாக பார்த்து வாய் திறக்க வேண்டிய கட்டாயம் ....
முதலில் அங்கு சென்ற மக்கள் தான் குற்றவாளிகள். இன்று அரசியலுக்கு வருபவர்கள் இருப்பவர்கள் அரசியல்வாதிகள் அல்ல. அரசியல் வியாதிகள். சின்ன சின்ன குழந்தைகளை தூக்கி சென்று கூட்டத்தில் பறிகொடுத்த தாய் அல்லது தந்தைக்கு முதலில் தண்டனை வழங்க வேண்டும். எந்த ஒரு கட்சியோ அரசியல் வாதியோ மக்கள் பயன்படுத்தும் எந்த ஒரு தெருவிலும் வந்து கூட்டம் போடுவதோ பேசுவதோ கூடாது. அவர்களுக்கு கூட்டம் போட்டு பேச வேண்டும் எனில் அவர்களே ஊருக்கு வெளிய தனியான ஒதுக்குப்புறத்தில் இடம் பார்த்து பேசிவிட்டு போகட்டும். மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் எந்த செயலையும் அனுமதிக்க கூடாது. கூட்டத்திற்கு எத்தனை காவலர்கள் வேண்டுமோ அதை கேட்டு பெற்று அவர்களுக்குண்டான அல்லது நிர்ணயிக்கும் தொகையை அரசியல் கட்சிகளே ஏற்கவேண்டும். மக்கள் பணிக்காக நியமிக்கப்படும் காவலர்களை கட்சிகள் பயன்படுத்த அனுமதிக்க கூடாது. எங்கு எந்த கட்சி கூட்டம் நடத்தினாலும் அதற்கான செக்யூரிட்டி டெபாசிட், இன்சூரன்ஸ் மற்றும் இதர ஏற்பாடுகளுக்காக ஒரு தொகை வசூல் செய்யவேண்டும். கூட்டத்திற்கு சென்றால் நமக்கு இடையூறு அல்லது ஆபத்து ஏற்படும் என்று தெரிந்தும் அந்த இடையூறுகளுக்கும் ஆபத்துககளுக்கும் உட்பட்டு செல்லும் எந்த ஒரு நபருக்கும் அரசு சார்பில் எந்த ஒரு விதத்திலும் இழப்பீடும் வழங்க கூடாது. நடக்குமா தெரியாது. மக்கள் திருந்த வேண்டும். எல்லா கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். எல்லா அரசியல் வியாதிகளும் மக்களை துன்புறுத்தி அதில் அவர்கள் பலன் அடைகிறார்கள் என்பதை மக்கள் உணரவேண்டும்.
TN police has a lot to answer. They belong to all paid by tax payer's money.
Political intolerance at its peak.No safety even to politicians.TN going through worst times.