மேலும் செய்திகள்
'கேல் ரத்னா' விருது சர்ச்சை * மனு பாகர் விளக்கம்
24-Dec-2024
புதுடில்லி:'கேல் ரத்னா' விருதுக்கு (2024) குகேஷ், மனு பாகர், ஹர்மன்பிரீத் சிங், பிரவீன் குமார் தேர்வு செய்யப்பட்டனர். 32 பேருக்கு அர்ஜுனா விருது வழங்கப்படுகிறது. சர்வதேச விளையாட்டு அரங்கில் சாதித்த இந்திய நட்சத்திரங்களுக்கு, மத்திய அரசு சார்பில் விருது வழங்கப்படுகிறது. 2024ம் ஆண்டுக்கான பட்டியல் வெளியானது. விளையாட்டின் உயரிய, மேஜர் தயான் சந்த் 'கேல் ரத்னா' விருது, இம்முறை நான்கு நட்சத்திரங்களுக்கு வழங்கப்படுகிறது. சபாஷ் குகேஷ்
சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், இந்தியாவின் குகேஷ் 18, சீனாவின் டிங் லிரெனை 32, வீழ்த்தினார். உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற சாதனை படைத்தார் குகேஷ். தவிர, செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியா தங்கம் வெல்ல கைகொடுத்தார். தமிழகத்தைச் சேர்ந்த இவருக்கு 'கேல் ரத்னா' விருது வழங்கப்படுகிறது. மனுவுக்கு விருது
பாரிஸ் ஒலிம்பிக்கில், இரு வெண்கல பதக்கம் வென்று வரலாறு படைத்தவர் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாகர் 22. முதலில் வெளியான, 'கேல் ரத்னா' பட்டியலில் இவரது பெயர் இடம் பெறாதது சர்ச்சை கிளப்பியது. தற்போது, மனு பாகர் இவ்விருதுக்கு தேர்வாகி உள்ளார்.பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய அணிக்கு வெண்கலம் பெற்றுத்தந்த கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், பாரிஸ் பாராலிம்பிக், உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற பிரவீன் குமாரும், 'கேல் ரத்னா' பெறவுள்ளனர். யாருக்கு 'அர்ஜுனா'
ஜோதி (தடகளம்), சலிமா, ஜர்மன்பிரீத் சிங், சுக்ஜீத் சிங், சஞ்சய் (ஹாக்கி), நவ்தீப் சிங், சிம்ரன், ஹொகாடோ, தரம்பிர், பிரணவ் சூர்மா, சச்சின் கிலாரி, தீப்தி ஜீவன்ஜி, பிரீத்தி பால் (பாரா தடகளம்), நிதேஷ் குமார் (பாரா பாட்மின்டன்). அன்னு ராணி (ஈட்டி எறிதல்), அமன் ஷெராவத் (மல்யுத்தம்), சாஜன் பிரகாஷ் (நீச்சல்), அபே சிங் (ஸ்குவாஷ்), சரப்ஜோத் சிங், ஸ்வப்னில் குசாலே (துப்பாக்கி சுடுதல்), ருபினா, மோனா (பாரா துப்பாக்கி சுடுதல்), கபில் பார்மர் (பாரா ஜூடோ), ராகேஷ் குமார் (பாரா வில்வித்தை), வந்திகா (செஸ்), நித்து காங்கஸ், சவீட்டி (குத்துச்சண்டை) உட்பட 32 பேருக்கு அர்ஜுனா விருது வழங்கப்படுகிறது.தவிர, சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சார்யா விருது சுபாஷ் ராணா (பாரா துப்பாக்கி சுடுதல்), தீப்தி தேஷ்பாண்டே (துப்பாக்கி சுடுதல்), சந்தீப் சங்வானுக்கு (ஹாக்கி) வழங்கப்பட உள்ளது. ஜன. 17, காலையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடக்க உள்ள விழாவில், விருதுகள் வழங்கப்பட உள்ளன.
24-Dec-2024