உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மகளிரை அவமதிக்கும் தி.மு.க., இனியாவது திருந்தட்டும்; நயினார் நாகேந்திரன் காட்டம்

மகளிரை அவமதிக்கும் தி.மு.க., இனியாவது திருந்தட்டும்; நயினார் நாகேந்திரன் காட்டம்

சென்னை: ''மகளிரை அவமதிக்கும் தி.மு.க., அரசு இனியாவது திருந்தட்டும்'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: கட்டணமின்றி பஸ்களில் பயணம் செய்யும் மகளிரை 'ஓசி' என்று தி.மு.க.,வைச் சார்ந்த ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ., மகாராஜன் விமர்சித்திருப்பது கண்டனத்துக்குரியது. இதற்கு முன், தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடியும் இதே போன்று பஸ்களில் கட்டணமின்றி பயணிப்போரை 'ஓசி' என்று தரம் தாழ்ந்து விமர்சித்ததும், தி.மு.க., எம்.பி., கதிர் ஆனந்த் 'ரூ.1000 வாங்கியதால் தானே பளபளனு இருக்கீங்க' என்று பெண்களைக் கொச்சையாக விமர்சித்ததும், தி.மு.க., மூத்த அமைச்சர் துரை முருகன் 'அம்மாவுக்கும் ரூ.1000, பொண்ணுக்கும் ரூ.1000' என சபை நாகரிகமன்றி விமர்சித்ததும் குறிப்பிடத்தக்கது.மக்கள் நலனை மேம்படுத்தும் போர்வையில் திட்டங்களை அமல்படுத்தி அதன் விளம்பரங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதும், பின் பயனாளிகளை 'ஓசி' என்று கீழ்த்தரமாக விமர்சிப்பதும் தான் திராவிட மாடல் போலும்! ஒவ்வொரு முறையும் பெண் பயனாளிகளை விமர்சிப்பதில் காட்டும் முனைப்பை ஓட்டை உடைசலாக இருக்கும் பஸ்களை சரிபடுத்துவதிலோ அல்லது அனைத்து மகளிருக்கும் 1000 ரூபாய் கிடைப்பதை உறுதி செய்வதிலோ தி.மு.க., தலைவர்கள் காட்டாதது ஏன்? அதிகார மமதையில், எளிய மக்களை எள்ளி நகையாடி ஏளனப்படுத்துவது ஏற்புடையதல்ல! மகளிரை அவமதிக்கும் தி.மு.க., அரசு இனியாவது திருந்தட்டும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

madhesh varan
ஜூன் 12, 2025 12:17

தமிழர்களை திருடர்னு சொன்னவங்கள என்ன பண்ணுவது ?


Nallavan
ஜூன் 12, 2025 08:49

ஓசி என்ற வார்த்தையை அரசியல்வாதிகள் காழ்புணர்ச்சிக்காக கொச்சையாக பயன்படுத்துகிறார்கள் FREE என்பதை பல விதமாக பேச்சுவழக்கில் பேசுகிறோம், ஒரு இடத்தில் நல்லதாகவும் ஒரு இடத்தில் கொச்சையாகவும் பேசுவது அரசியல்வாதிகளின் பேச்சு திறன் என்று நினைக்கிறார்கள், ஒரு இடத்தில் ஒன்று வாங்கினால் ஒன்று ஓசி என்று சொன்னால் அங்கு கூட்டம் குமிகிறது, அந்த பொருளை ஓசியில் வாங்க மக்கள் அலைகிறார்கள் , அப்பொழுது அங்கு ஓசி கௌரமாகிறது , அரசியல்வாதிகளே ஓசி யும் , பிரீ யும் ஒன்று தான்


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 12, 2025 08:45

கழகம் தன் அடிப்படை கொள்கையை ஒருநாளும் மாற்றி கொள்ளாது .. கழகத்தின் அடி நாதமே மகளிரை அவமதிப்பதுதான் ..இந்திரா காந்தியை ..ஜெயலிதாவை பற்றி பேசியப்பேச்சுகளை கேட்டு பாருங்கள் ..


முக்கிய வீடியோ