உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்!: முதல்வர் ஸ்டாலின்

கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்!: முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' மக்கள் பிரதிநிதிகளும், ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு மக்களைக் காப்போம், '' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.வடகிழக்கு பருவமழை துவங்கியதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழைபெய்து வருகிறது. சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கனமழை பதிவாகியது. கனமழை மேலும் நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.இச்சூழ்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரண பணிகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.இதனைத் தொடர்ந்து ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையை எதிர்கொள்வது குறித்து, இன்றும் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினேன். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், நெல் கொள்முதல் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ளவும் உத்தரவிட்டு, எடுக்கப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிந்தேன். மக்கள் பிரதிநிதிகளும், ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தென்காசி பயணம் ஒத்திவைப்பு

இதனிடையே, முதல்வர் ஸ்டாலினின் தென்காசி பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க வரும் 24, 25 தேதிகளில் தென்காசிக்கு முதல்வர் ஸ்டாலின் செல்ல இருந்தார். ஆனால், சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் இந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 55 )

Vel1954 Palani
அக் 22, 2025 19:31

முக்கியமான மழைநீர் வடிகால் பகுதியான பள்ளிக்கரணை மார்ஷி லேண்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மக்கள் குரல் அரசுக்கு ஏளனமாக தெரிகிறது. ஒவ்வொரு வருடமும் அரசு எந்திரமும் திருட்டு திராவிட கட்சி அமைச்சர்களும் picnic போறது மாதிரி வந்து வாய் கிழிய பேசி போட்டோ எடுத்துகின்றனர். காரியத்தில் ஒன்றும் புடுங்கவில்லை. ஒவ்வொரு வருடமும் பாடுன பாட்டையே பாடுகிறார்கள். சென்ற வருடம் வேளச்சேரியில் ஒரு ஆசிரியை கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதில் சொல்ல துப்பில்லை. பதில் சொல்லாமல் மூன்று அமைச்சர்கள் அந்த இடத்தில் இருந்து நகர்ந்து விட்டனர். இதை தொலைக்காட்சி மீடியா லைவ் டெலிகாஸ்ட் செய்தனர். இப்போ என்னடா என்ன " கண் துஞ்சா வேலை செய்யப்போறாங்களாம். " இந்த விடியல் நாடகம் எல்லாம் இனி மக்களிடம் எடுபடாது. இதற்கு மாற்றம் ஒன்றே தீர்வு. இரண்டாவது ஆக தலைநகரை சென்னையில் இருந்து மத்திய தமிழ்நாட்டுக்கு மாற்ற வேண்டும். இதனாலும் சென்னைக்கு விடிவு காலம் பிறக்கும். அரசு sindhikkumaa?


Ram
அக் 22, 2025 07:53

காமெடி பண்ணாதீஇங்க


தமிழ் மைந்தன்
அக் 22, 2025 06:28

மக்கள் நிம்மதியாக மகிழ்ச்சியாக திருட்டு பயமின்றி பெண்கள் பயமின்றி நடமாட ஒரே வழி திமுகவினர் ஓய்வு எடுத்தாலே போதும்


surya krishna
அக் 22, 2025 04:11

வாய் சொல்லில் வீரன் செயலில் கொள்ளை


Kasimani Baskaran
அக் 22, 2025 04:05

வெறும் அறிவிப்பு மூலம் வெற்றி.... கள நிலவரம் சுத்த மோசமாக வாய்ப்பு இருக்கிறது.


kannan sundaresan
அக் 22, 2025 02:59

உங்களால் ஒன்றும் செய்ய முடியாது


Ramesh Sargam
அக் 21, 2025 23:51

இப்படி கூடி மீட்டிங் போடுவதை விட்டுவிட்டு, முதல்வர் முதற்கொண்டு எல்லோரும் களத்தில் இறங்கி மக்களுக்கு தேவையானவற்றை செய்யவேண்டும். மீட்டிங் போடுவது, அங்கு டீ குடிப்பது, அந்த டீ செலவு என்று ஒரு பத்து லட்சம் மக்கள் வரிப்பணத்தில் ஆட்டைபோடுவது என்கிற செயல் வேண்டாம்.


Balasubramanian
அக் 21, 2025 22:58

கண்மூடித்தனமான அறிவிப்பு இவர்கள் என்ன இமயவர்களா? இமைக்கும் நேரத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று சொல்லி இன்றுவரை நிறைவேற்றாமல் நிற்பது பல!


Raj S
அக் 21, 2025 21:47

வருஷா வருஷம் வர்ற மழைக்கு, வந்த அப்பறம் ஆலோசனை செய்யறாரு??


Modisha
அக் 21, 2025 21:21

என்னது , ஒழுங்கா படிங்க .


சமீபத்திய செய்தி