உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்கம், வெள்ளி நிலவரம் போல கொலை நிலவரம்: திமுக மீது இபிஎஸ் பாய்ச்சல்

தங்கம், வெள்ளி நிலவரம் போல கொலை நிலவரம்: திமுக மீது இபிஎஸ் பாய்ச்சல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிவகங்கை: ''தங்கம், வெள்ளி நிலவரம் போல, கொலை நிலவரம் என்று செய்திகள் வரும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. திமுக ஆட்சியல் 20 ஆவணப் படுகொலைகள் நடந்துள்ளன'' என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் குற்றம் சாட்டி உள்ளார்.சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்தினரை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் சந்தித்து பேசினார். அஜித்குமாரின் படத்திற்கு அஞ்சலி செலுத்திய இ.பி.எஸ்., அவரது தாய், சகோதரர் நவீன்குமாருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் நிருபர்கள் சந்திப்பில் இபிஎஸ் கூறியதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=o5asjl0t&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அஜித்குமார் கொலையில், தாக்குதல் நடத்திய போலீசாருக்கு மேலிடத்தில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முழு பொறுப்பை அரசு ஏற்க வேண்டும்.தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு நடக்காத நாளே இல்லை. தங்கம், வெள்ளி நிலவரம் போல, கொலை நிலவரம் என்று செய்திகள் வரும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.5 லட்சம் வழங்கப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்த பின் அஜித்குமாரின் சகோதரருக்கு விரும்பிய இடத்தில் அரசு வேலை வழங்கப்படும். அதிமுக தலையிட்டதால் தான் அஜித் குமார் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. அஜித் குமாரின் குடும்பத்திற்கு அதிமுக துணை நிற்கும்.அதிமுக போராடியதால் தான் திமுக அரசு வேறு வழியின்றி அஜித்குமார் கொலை வழக்கில் நடவடிக்கை எடுத்துள்ளது. மக்களை பாதுகாக்க வேண்டிய போலீசாரால் உயிர் பறிபோயுள்ளது. போலீசாருக்கு அழுத்தம் கொடுத்தது யார்? திமுக ஆட்சியில் 20 ஆணவப்படுகொலைகள் நடந்துள்ளன. இவ்வாறு இபிஎஸ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

rama adhavan
ஜூலை 30, 2025 21:12

தங்கம், வெள்ளி, பங்குகளில் இறக்கமும் சாத்தியம். ஆனால் நமது மாநில கொலை எண்ணிக்கையில் எப்போவும் ஏற்றம் ஒன்றுதான்.


முருகன்
ஜூலை 30, 2025 17:25

இவர் ஆட்சியிலும் இது போல் நடந்தது இதனை தடுக்க தனிமனிதன் தான் திருந்த வேண்டும் அதற்கு சட்டம் கடுமையான வகையில் இருக்க திருத்தப்பட வேண்டும்


vivek
ஜூலை 31, 2025 07:44

முருகா இப்போ இருப்பது திருட்டு திமுக ஆட்சி....அதனுடைய சொம்பு நீ....வேற எப்படி


Ramesh Sargam
ஜூலை 30, 2025 12:08

அதான் தினமும் இன்றைய போக்ஸோ கைதானவர்கள் செய்தி வருகிறதே. அதுபோல தினமும் நடக்கும் கொலை செய்திகள் விரைவில் வரும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை