உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு; டிச.,24, 25ல் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு; டிச.,24, 25ல் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: டிசம்பர் 24, 25ம் தேதிகளில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gic9c0ur&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை வலுவிழந்தது. மேற்கு, தென்மேற்கு திசையில் நகர்ந்து டிச.,24ம் தேதி வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதியை நோக்கி நகரும். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று முதல் டிச.,28ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். டிசம்பர் 24, 25ம் தேதிகளில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இன்று முதல் 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 55 கி.மீ. வரை காற்று வீசும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

RAAJ68
டிச 22, 2024 17:39

இப்படித்தான் சொல்லுவாங்க அப்புறம் மழைக்கு வாய்ப்பு இல்லை என்பார்கள் . எதை நம்புவது என்று புரியவில்லை.SUMP CLEANING WORK PENDING. என்ன செய்வது என்று புரியவில்லை.


MARI KUMAR
டிச 22, 2024 17:04

இந்த ஆண்டு முழுவதும் காற்றழுத்த தாழ்வு உருவாகுவதும் வலு இழப்பததும் தான் நடந்து வருகிறது


சமீபத்திய செய்தி