உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஜாமின் பெறும் வரை தலைமறைவாக இருக்கலாம்

 ஜாமின் பெறும் வரை தலைமறைவாக இருக்கலாம்

கவர்ச்சி அரசியல், பொய் பேசுதல், பாட்டு பாடுதல், அரசியல் நாகரிகமற்ற பேச்சு எங்களுக்கு தெரியாது. அநாகரிகமான ஒருவர் ஆட்சி கட்டிலில் இருக்கிறார்.'முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஓடுகிறார்' என முதல்வர் விஜய் சொல்கிறார். ஒரு வழக்கு போடும்போது, அதில், ஜாமின் பெறும் வரை தலைமறைவாக இருக்கலாம். முன்னாள் அமைச்சர் வேலு, சிகிச்சைக்கு சிங்கப்பூர் செல்லும் நாளில், சோதனை நடத்தினீர்கள். அதனால் அவர், இரண்டு நாட்கள் கழித்து சிங்கப்பூர் சென்றார். இது தெரியாமல் ஒரு முதல்வர் பேசுகிறார். காமராஜர், அண்ணாதுரை, ராஜாஜி இருந்த இடத்தில் ஒரு பொய்யர் முதல்வராக இருக்கிறார். 'பார்ட்டி பண்டு' என சொல்லிவிட்டு, எந்த பார்ட்டி என்று சொல்ல முதுகெலும்பு இல்லாதவர், முதல்வர் விஜய். பொய், பொய்யாக பேசும் நாகரிகம் இல்லாதவர்களின் அநாகரிக ஆட்சியை அப்புறப்படுத்துவோம். - ராஜா, துணை பொதுச்செயலர், தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Dum
ஜூலை 14, 2026 10:57

ஒரு திருடனின் மனநிலை எப்போதும் இப்டி தான் இருக்கும்


V RAMASWAMY
ஜூலை 14, 2026 09:03

யார் பொய்யர், எந்த கட்சி தேச, மாநில, மக்கள், ஹிந்து விரோத குற்றமுள்ள குற்றவாளிகளைக் கொண்டுள்ள, ஊழல் மிக்க கட்சி என்று மக்கள் உணர்ந்ததால் தான் உங்கள் கட்சி புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்று புரியவில்லையா அறிவு ஜீவி என்று நினைத்துக்கொண்டிருக்கும் அறிவற்ற உளறல் குற்றவாளிக்கு?


sankaranarayanan
ஜூலை 13, 2026 19:55

2-ஜி மன்னா நீயா இப்படி பேசுவது உங்கள் கட்சியில் யார் எதை வேண்டுமானாலும் பேசலாமா நீ செய்த ஊழல் நாடே சிரித்தது நாடே பண வீக்கத்தால் புறந்தள்ளப்பட்டது அந்த துறைக்கே கெட்ட பெயர் உண்டாயியற்று நீங்கள் செய்த அக்கிரமங்கள் ஒன்றா இரண்டா சொல்ல இனி அவைகள் எல்லாமே நடைபெற வாய்ப்பில்லை


DUBAI- Kovai Kalyana Raman
ஜூலை 13, 2026 19:42

ஒரு கூந்தலும் புடுங்க முடியாது ..அதுக்குத்தானே உங்களை உங்கள் கட்சியை வீட்ல உட்கார வச்சு இருக்கோம்


Modisha
ஜூலை 13, 2026 13:32

அது என்ன ராஜாஜி . உங்களுக்கு அவர் என்னிக்கி நல்லவர் ஆனார் .


முக்கிய வீடியோ