உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மெட்ரோ சேவை சீரானது; மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

மெட்ரோ சேவை சீரானது; மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்ட நிலையில், கோளாறு சரிசெய்யப்பட்டு மெட்ரோ சேவை சீரானது.வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலைய சிக்னலில் கோளாறு காரணமாக, 18 நிமிடத்திற்கு ஒருமுறை ரயில் இயக்கப்படும். நீல வழித்தடத்தில், சென்னை விமான நிலையம் - விம்கோ நகர் பணிமனை வரை 18 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். 7 நிமிடத்திற்கு ஒருமுறை இயக்கப்படும் மெட்ரோ ரயில் தற்போது 18 நிமிடமாக தற்காலிகமாக மாற்றப்பட்டு உள்ளது. விமான நிலையம் - சென்னை சென்ட்ரல் இடையே 7 நிமிட இடைவெளியிலும், விமான நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை இடையே 6 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் கூறியிருந்தது.இதையடுத்து, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்ட நிலையில், கோளாறு சரிசெய்யப்பட்டு, 8.50 மணிக்கு மெட்ரோ சேவை சீரானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி