உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டிரெண்ட் மாறியதால் மக்களை வீடு, வீடாக சென்று சந்திக்க உள்ளோம்: அமைச்சர் துரைமுருகன்

டிரெண்ட் மாறியதால் மக்களை வீடு, வீடாக சென்று சந்திக்க உள்ளோம்: அமைச்சர் துரைமுருகன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: டிரெண்ட் மாறியதால் ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரசாரம் மூலம் மக்களை வீடு, வீடாக சென்று சந்திக்க உள்ளோம் என்று அமைச்சர் துரைமுருகன் கூறி உள்ளார்.தி.மு.க., சார்பில் ஓரணியில் தமிழ்நாடு என்ற 45 நாள் பிரசாரத்தை அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் இன்று (ஜூலை 1) சென்னையில் தொடங்கி வைத்தார். அதற்கான வீடியோவை அவர் வெளியிட்டார்.தொலைக்காட்சி வழியாக வேலூரில் இருந்தபடி பிரசாரம் தொடக்க விழாவை அமைச்சர் துரைமுருகன் பார்த்தார். பின்னர், பிரசாரத்தை தொடங்கி வைத்த அவர், நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது; ஓரணியில் தமிழ்நாடு என்ற புதிய சித்தாந்தத்தை முதல்வர் அறிவித்து இருக்கிறார். இந்த தலைப்பு பல்வேறு கோணங்களை உள்ளடக்கி இருக்கிறது. முதலில், பிரிந்திருக்கின்ற அல்லது ஒத்த கருத்துடையவர்கள் யார், யார் இருக்கிறார்களோ அவர்களை எல்லாம் சந்தித்து கொள்கை விளக்கங்களை தெரிவித்து இந்த அணியிலே சேர்க்க வேண்டும் என்பது இந்த தத்துவத்தின் முதல் பாகம்.அதோடு மட்டும் அல்லாமல் ஏதோ ஒரு 4 பேரை கேட்டேன், 3 பேர் வர்றேன், ஒருவர் வரவில்லை என்று சொல்லிவிட்டு எழுதிவிட முடியாது. மற்றவர்களை கட்சியில் சேர்க்கிற போது, அவர்களிடம் வெறும் தி.மு.க., கோட்பாடுகளை மட்டும் சொன்னால் எடுபடாது. ஆனால், தி.மு.க., வெறும் அரசியல் கட்சி அல்ல, அது ஒரு சமுதாய போராளி கட்சி. தமிழகத்தின் இனம்,மானம்,.மொழி, மரியாதை இவைகளை எல்லாம் கட்டிக்காக்கின்ற கட்சி. தமிழகம் யாருக்கும் இரண்டாம்தர மாநிலமாக போய்விடக்கூடாது என்பதில் அதிக அக்கறை உள்ள கட்சி.ஆகையினால் மற்றவர்களை சந்திக்கும் போது, மொழி, மானம் காக்கிற பணியை நாங்கள் செய்கிறோம் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும் என்பது முதல்வரின் கருத்திலே ஒன்று. ஒவ்வொரு குடும்பத்திலும் பிரசாரங்கள் இன்று மாறி போயிருக்கிறது. கொஞ்ச காலம் முன்பு ஒரு பொதுக்கூட்டம் என்று சொன்னால் ஆண்கள், பெண்கள் அடுக்கடுக்காக உட்கார்ந்து ஒரு பெருங்கூட்டத்தை 3 மணி நேரம் ரசிப்பார்கள். ஆனால் இன்றைக்கு அந்த மாதிரி டிரெண்ட் கிடையாது. எதையும் டிவியில் பார்த்துவிட்டு போய்விடலாம் என்ற நிலை இருக்கிறது. முன்பு எல்லாம் மைக் வைத்து பேசுவோம். ஆனால் இன்றெல்லாம் அப்படி அல்ல.நேரிடையாக அந்தந்த குடும்பங்களை சந்தித்து, இந்த ஆட்சியின் நிலைமை, இந்த ஆட்சி 4 ஆண்டுகாலங்களில் என்னென்ன செய்திருக்கிறது என்பதை எடுத்துச் சொல்லி, எங்களின் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பதற்காக அல்லது வருகிற தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக என்னென்ன வழிமுறைகளை எல்லாம் மாற்றுக் கட்சியினர் ஆதரிக்கின்றனர் என்பதை தனித்தனியாக எடுத்துச் சொல்ல வேண்டும்.பொதுக்கூட்டத்தில் கேட்டால் பத்தோடு பதினொன்றாக போய் விடும். தனிமனிதனிடம் 5 நிமிடம், 10 நிமிடம் பேசினால் அவர்களுக்கு இந்த கட்சியின் மீது அதிக நாட்டம் ஏற்படும். எனவே வீடு, வீடாக போக வேண்டும் என்று தெரிவிக்கிறோம்.மத்திய அரசானது, தமிழகத்திற்கு தரவேண்டிய மாநில நிதியை தராமல் அதற்கு எதிர்வினையாகவே செய்கிறது. கீழடி உங்களுக்கு தெரியும், அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. மத்திய சர்க்காருக்கு தமிழகம் மீது எவ்வளவு வெறுப்பு இருக்கிறது. இவற்றை எல்லாம் எதிர்க்க வேண்டும் என்றால் பிரிந்திருந்தால் நடக்காது,இணைந்து இருந்தால் தான் நடக்கும். அதனால் தான் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று முதல்வர் அறிவித்து இருக்கிறார். இவ்வாறு துரைமுருகன் பேசினார்.அதன் பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு துரைமுருகன் பதிலளித்தார். அவர் பேசியதாவது; தமிழகத்தை காப்போம் என்று அ.தி.மு.க.,வின் பிரசாரத்தை பற்றி நாங்கள் என்ன சொல்வது? எதிர்க்கட்சியாக இருக்கிறவன், ஆளுங்கட்சியை பார்த்து எல்லாம் பிரமாதமாக இருக்கு? நல்லா இருக்கு என்றெல்லாம் சொல்வானா? நல்லாயிருந்தால் கூட நல்லாயில்லை என்றுதான் சொல்வான்.வீடு, வீடாக சென்று மக்களை சந்திக்கும் போது அவர்கள் சொல்லும் குறைகளை கேட்போம். இவ்வாறு துரைமுருகன் பதிலளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 56 )

S.V.Srinivasan
ஜூலை 07, 2025 08:36

துரை சாருக்கு பயம் வந்துடுச்சு. ஆனா இவங்க இதை சாக்கா வச்சு இப்பவே வோட்டுக்கு துட்டு, டாஸ்மாக் சரக்கும் பட்டுவாடா பண்ணிடுவாங்க.


sasikumaren
ஜூலை 05, 2025 04:30

மக்களுக்கு நல்லது செய்வதாக கடைசி வரை எண்ணம் இல்லை மக்கள் உழைப்பை உருவ வேண்டும் அவ்வளவு தான்


panneer selvam
ஜூலை 02, 2025 16:38

Durai Murugan ji , Please commence the meet with every households with cover as advance payment


Yes God
ஜூலை 02, 2025 13:31

ஏண்டாப்பா நீங்க கொள்ளையடித்து நாட்டை சுரண்ட நாங்க தான் ஓட்டு போடணுமா. அதை உங்கள் சிறுபான்மைகள் வீடுகளிலும் போய் கேளுங்கள்.


Yes God
ஜூலை 02, 2025 13:25

இவனுங்க குடும்பத்துல எவனாவது சாமி பேர வச்சிருக்கானா.


Yes God
ஜூலை 02, 2025 13:22

வாக்காள மக்களே உஷாரா இருங்க. அஞ்சு ரூபா குடுத்து ஐநூறு ரூபா கொள்ளையடிப்பானுங்க. அந்த ஐநூறும் உங்க பணம் தான். பரம்பரை ஆட்சியை நிறுத்துங்க.


ராஜா
ஜூலை 01, 2025 23:17

காலில் செருப்பு இல்லாமல் போங்க பாஸ் இல்லையென்றால் உங்கள் செருப்பு ஆயுதமாக மாறும் என்று தோன்றுகிறது


Ragupathi
ஜூலை 01, 2025 21:57

எல்லோருமே ஆட்சியை கழுவி ஊற்றினால் என்ன செய்வீர்கள். வீடு வீடாக போய் பார்த்தால் தானே தெரியும் ஆனால் அதெல்லாம் உங்களுக்கு வந்து சேராது. அதற்கு முன்னரே உங்க ஆட்கள் மாற்றி விடுவார்கள்.


sankaranarayanan
ஜூலை 01, 2025 21:15

இல்லம் தேடி கல்வி மக்களை காணும் முதல்வர் அனைவருக்கும் மடிக்கணினி உங்களில் ஒருவன் ஊருக்கு ஒரு மருத்துவமனை உங்கள் அரசு என்றெல்லாம் பசப்பு வார்த்தைகள் அப்பப்போது கூறி இனி மக்களை மடையர்களாக்க வேண்டாம். முடியாது.மக்கள் முழித்துக்கொண்டுவிட்டார்கள் ஏமாற மாட்டார்கள்


rama adhavan
ஜூலை 01, 2025 21:07

எதற்கு நேரடி. லோக்கல் டீவி மூலம் நிறைய, நாள் தோறும் பேசலாமே. நேரடியாக பேசுவது என்றால் வீட்டுக்குள் போக கூடாது. பேச்சு முழுவதும் வீடியோ செய்து நேரடியாக எலெக்ஷன் அலுவலருக்கு நேரலையில் அனுப்பி பாதுகாப்பு செய்யவேண்டும். எலெக்ஷன் அலுவலர் அனுமதியும் சந்திக்க வாங்க வேண்டும். அப்போது தான் திருட்டு தனம் குறையும்.


புதிய வீடியோ