உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆவணங்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய புதிய நடைமுறை: வெளிநாடு செல்வோருக்காக அரசு நடவடிக்கை

ஆவணங்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய புதிய நடைமுறை: வெளிநாடு செல்வோருக்காக அரசு நடவடிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வெளிநாடு செல்வோர் சமர்ப்பிக்கும் ஆவணங்களின் உண்மைத்தன்மையை, 'ஆன்லைன்' வழியே அறிந்து கொள்ளும் வசதியை, வெளியுறவுத் துறை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து, சென்னையில் இயங்கும் வெளியுறவுத் துறை கிளை செயலகத்தின் தலைவர் விஜயகுமார் அளித்த பேட்டி:வேலை, உயர் கல்வி, தொழில் போன்றவற்றுக்காக ஏராளமானோர் வெளிநாடு செல்கின்றனர். அவ்வாறு செல்வோர், பிறப்பு, கல்வி, திருமண சான்றிதழ் உட்பட பல்வேறு ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கு முன், அதன் உண்மை தன்மையை, வெளியுறவு அமைச்சகத்தின் வாயிலாக உறுதி செய்து சான்று பெற வேண்டும்.அவ்வாறு செய்தால் மட்டுமே, அந்த சான்றிதழ்களை வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் ஏற்று கொள்ளும். இதுவரை ஆவணங்களின் உண்மைத்தன்மையை, அரசு அங்கீகாரம் பெற்ற ஏஜன்சி வழியாக பெற வேண்டி இருந்தது.தற்போது, விண்ணப்பதாரர்கள் அலையாமல், ஆன்லைனில் விண்ணப்பித்தால், அதன் உண்மைத் தன்மையை வெளியுறவு அமைச்சகமே உறுதிப் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.எனவே, இனி வெளிநாடு செல்வோர், தங்கள் ஆவணங்களை, esanad.nic.inஎன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்தால் போதும். உண்மைத்தன்மை சான்றை எளிதாக பெறலாம்.இதை, 140 நாடுகள் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை, மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

visu
செப் 21, 2025 15:46

அப்படியே இந்த வளைகுடா நாடுகள் மலேசியா பக்கம் சுற்றுலா விசாவில் ஏமாற்றி வேலைக்கு அனுப்புவதை தடுக்கலாம்


Informed Critic, Kongunadu, Bharat, Hindustan
செப் 21, 2025 07:44

மிகவும் முக்கியமான நல்ல முடிவு. வெளிநாடு செல்வோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சட்ட சிக்கல்கள் ஏதும் ஏற்படாமல் செயலாற்ற மிகவும் உதவும். இதை செய்ய இத்தனை ஆண்டுகள் காத்திருந்தாலும், இப்பொழுதாவது செயற்பாட்டிற்கு வந்ததே என்று நினைக்கும்போது சற்று ஆறுதலாக உள்ளது. இதன் தாக்கம் வெளிநாடு செல்வோருக்கு எவ்வளவு பயனுள்ளது என்று பிரச்சினைகளில் சிக்கி


Informed Critic, Kongunadu, Bharat, Hindustan
செப் 21, 2025 10:20

இந்த வசதியின் பயன் பிரச்சினைகளில் சிக்கித் தவித்தவர்களுக்கு தெரியும்.


முக்கிய வீடியோ