உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்க நகைக்கடனுக்கான புதிய விதிகள்; நுகர்வோருக்கு பாதிப்பா, பாதுகாப்பா?

தங்க நகைக்கடனுக்கான புதிய விதிகள்; நுகர்வோருக்கு பாதிப்பா, பாதுகாப்பா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: தங்க நகைக்கடன் குறித்த ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள், நுகர்வோருக்கு நன்மை தருபவையே என, நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.தங்க நகைகளை அடகு வைப்பதற்கான, ரிசர்வ் வங்கியின் விதிகளால் மக்கள் பாதிக்கப்படுவர் என, கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. ஆனால், புதிய விதிகள் தங்கத் தொழிலில் நடக்கும் மோசடிகளை தடுக்க உதவும் என, நிபுணர்கள் கூறுகின்றனர். எம்.எம்.டி.சி., பி.ஏ.எம்.பி., அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர் கயிலைராஜன் கூறியதாவது: புதிய அறிவிப்பின் வாயிலாக, தங்க நகைக்கடன் தொழிலில், நடக்கும் மோசடிகளை தடுக்க அரசு முற்பட்டுள்ளது. புதிய விதிகளால், நுகர்வோருக்கு கிடைக்கும் பல நன்மைகள் மறைக்கப்பட்டுள்ளன. ஒன்பது விதிகளில், நிர்வாகம் சார்ந்த, ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஐந்து விதிகள் தற்போது முறைபடுத்தப்படுகின்றன.

பில் பத்திரம்

வீடு, நிலம், கார், பைக் வாங்கும் போது, உரிமை ஆவணம் வாங்குகிறோம். அதே போல், தங்க நகைக்கான ஒரே ஆதாரமான பில்லை, பத்திரப்படுத்துவது அவசியம். பில் வாங்கினால் உங்களுக்கு ஆதாரம் கிடைக்கும்; அரசுக்கு வரி கிடைக்கும். தங்க கடத்தல் நிற்கும். ஆதாரமின்றி தங்கம் விற்க முடியாத நிலையில், நகைக்கான கொலை, திருட்டுகள் குறையும். நகை திருட்டு போனால், இன்சூரன்ஸ் பெறலாம்.தற்போது, நகைகளில் ஹால்மார்க் முத்திரை உடன், வரும் எச்.யு.ஐ.டி., எண் மூலம், மத்திய அரசின் பி.ஐ.எஸ்., இணையதளத்தில் இருந்து அதற்கான சான்றை நுகர்வோர் எப்போது வேண்டுமானாலும் பெறலாம். பழைய தங்கத்துக்கு, சுய சான்று எழுதிக் கொடுத்து கடன் வாங்க சட்டம் இடம் கொடுக்கிறது.

சான்று கட்டாயம்

தற்போது மதிப்பீட்டாளர் அடகு வைக்கும் போது, நகையை பரிசோதித்த பின்னரே கடன் தருகிறார். இருப்பினும், நகையை திருப்பும் போது பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.இதற்கு தீர்வாக, புதிய விதியின் வாயிலாக, நகை அடகு வைக்கும் போது, மதிப்பீட்டாளர், தங்க நகையின் தரம், எடை, நிறம், வடிவம், கல் போன்ற அனைத்தும் அடங்கிய, புகைப்படத்துடன் கூடிய இரு தரச்சான்றுகளை தர வேண்டும்.ஒன்று உங்களிடமும், மற்றொன்று நகையுடனும் இருக்கும். திருப்பும் போது நகை, தரம் மாறாமல் இருக்கும். யார் மாறினாலும், நகை மாறாது. வங்கி, அடகு கடைகளில் உங்கள் நகையை பயன்படுத்தி செய்யும் மோசடிகளை நிறுத்த முடியும்.அடகு வைக்கும் போது, இருதரப்பும் எழுத்துப் பூர்வமான ஒப்பந்தம் செய்வதால், பணம், வட்டி, திருப்பும் காலம், அபராதம், ஏல காலம், ஏல நடைமுறைகள் ஆகியவை வெளிப்படையாக நுகர்வோருக்கு புரியும்படி இருக்கும்.

அபராதம்

ஏலத்தின் போது, ஏலத் தொகையில் அனைத்து செலவுகள் போக மீதித்தொகை, நுகர்வோரிடம் வழங்கப்படும். தற்போது ஏலத்துக்கு பின் நுகர்வோருக்கு ஒன்றும் கிடைக்காது. பல தனியார் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், வங்கிகள், அடகு கடைகள் நகை ஏலத்தில் தான் பெரும் லாபம் பெறுகின்றனர். ஏல மோசடி இனி இருக்காது. புதிய விதிப்படி, பணம் செலுத்திய பின், நகையை வழங்காமல், ஏழு நாட்களுக்கு மேல் தாமதப்படுத்தினால், தினமும் 5,000 ரூபாய் தர வேண்டும். இவ்வாறு கூறினார்.

குறிப்பு

எம்.எம்.டி.சி., - பி.ஏ.எம்.பி., என்பது மத்திய அரசின் இந்திய உலோகங்கள் மற்றும் கனிமங்கள் வர்த்தகக் கழகம் (எம்.எம்.டி.சி.,) மற்றும் சுவிட்சர்லாந்து எஸ்.ஏ., புரோடிட்ஸ் ஆர்டிஸ்டிக்ஸ் மெட்டாக்ஸ் பிரீசியூ (பி.ஏ.எம்.பி.,) ஆகியவை இடையேயான கூட்டு முயற்சியாக துவங்கப்பட்ட நிறுவனம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Soma Sundaram
மே 28, 2025 20:37

First of all take accounts of the jewels in the jwellery shop. How much gold they get and how much got sealed from BIS and every day sale and tax collected and remitted. Bankers must understood that how much crores of rupees were given to cheaters and how much amount unreturnable and loans were right off. The worst rules were only for public but not to the big frauds. How much amount collected from the bank officials for fraud loans. Very cheap recommendations of the RBI.


சேகர்
மே 28, 2025 08:52

RBI விதிமுறைகள் அடகுக்கடைகளை அதன் ஏல முறையை கட்டுப்படுத்துமா? அரசியல்வாதிகளை விட அரைவேக்காடு நிபுணர்கள் காமடி செய்கிறார்கள்


நிவேதா
மே 28, 2025 10:40

இவர்கள் செய்வதை பார்த்தால் கந்து வட்டி மற்றும் அடகு கடைகளுக்கு கொண்டாட்டம் தான். சாமானிய மக்கள் பாடு திண்டாட்டம் தான்


தாமரை மலர்கிறது
மே 27, 2025 20:04

புதிய விதிகள் மிகவும் அருமையானது. அவசியமானது. நகை திருட்டை தடுக்க கூடியது. கருப்பு பணத்தை கொடுத்து நகையை செய்ய முடியாது. அதற்கு வரி செலுத்த வேண்டி இருக்கும். பழைய நகைகள் வைத்திருந்தால், அதற்கான ரசீது பெற, வங்கிகள் ஐந்து சதவீதம் வரி விதிக்க வேண்டும். இதனால் நாட்டிற்கு வரி வருமானம் கூடும்.


சேகர்
மே 28, 2025 08:59

புது விதிகளுக்கும் நகை செய்வதற்கும் என்ன சம்பந்தம்? நகை செய்வது வங்கியில் அடகு வைக்க அல்ல. Forged or fake bill மூலம் நகை அடகு வைத்தாலும் அதை கண்டு பிடிக்கும் நிலையில் அனைத்து வங்கிகளும் இல்லை


Senthil kumar
மே 27, 2025 19:24

ரூ 10 லட்சம் வரை விதிகளை தளர்த்தி ஒரு நபருக்கு கடன் அளிக்கலாம். புது விதியின் மூலம் பெரும்பாலும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள்தான் பாதிப்பு அடைவார்கள் . இவ்விதி பல குடும்பத்தின் பொருளாதார சிக்கலை உருவாக்கும்.


நிவேதா
மே 27, 2025 15:35

தங்க கடன் வாங்க பில் அவசியமாம். தங்கம் வாங்கி ஆசாரி மூலம் நகை செய்தால் பில்லுக்கு எங்கே போவது.


ஆரூர் ரங்
மே 27, 2025 18:46

அதாவது பில் இல்லாம தங்கம் வாங்கி? சரிங்க. புரியுது பாய்.


நிவேதா
மே 28, 2025 10:34

அறிவாளியே. 24 காரட் தங்கத்துக்கான பில் இருக்கும். ஆசாரி மூலம் செய்யும் போது 18-22 காரட் நகைக்கான பில் இருக்காது. இன்னும் இந்தியாவில் பரம்பரை ஆசாரியிடம் கொடுத்து நகை செய்யும் பழக்கம் உள்ளது. Is RBI promoting Corporate Jewellery Shops?


நிவேதா
மே 27, 2025 15:15

கேவலமான விதிமுறை. சில ஆண்கள் நகையை அவர்கள் பேரில் வாங்குவதில்லை. தன் குடும்ப பெண்களின் பேரில் வாங்குவார்கள். இந்த புது விதிப்படி கணவன் அடகு வைக்கும் நகை தன் மனைவி பேரில் இருந்தால் பேங்க் சென்று விசாரிக்குமா அவர்கள் இருவரும் இப்போது கணவன் மனைவியா இல்லையா என்று? வங்கியின் வேலை கொண்டுவந்த நகைக்கு ஈடாக கடன் கொடுப்பதே அன்றி அது பினாமியா இல்லையா என விசாரிப்பது அன்று. பேசாமல் நகை கடன் கொடுக்கும் வேலையை செய்ய சிபிஐ போன்று ஒரு அமைப்பை உருவாக்கலாம். இதில் இன்னும் ஒரு கேவலமான விஷயம் என்னவென்றால் நகை கடன் புதுப்பித்தல். ஆதாவது இன்று ரொக்கம் நாளை கடன் பாலிசி. இந்த காமெடி தனத்தால் நாள் வட்டிக்கு கடன் வாங்கவேண்டி உள்ளது. RBI க்கு இப்போது உள்ள பிரச்சனை என்னவென்றால் எதிர்கால தங்க விலையை அவர்களால் கணிக்கமுடியவில்லை. இன்றைய மதிப்புப்படி கடன் கொடுத்து விட்டு நாளை விலை குறைந்தால் என்ன செய்வது என்ற பயத்தால் இப்படி மக்களை அலைக்கழிக்கிறார்கள்.


ஆரூர் ரங்
மே 27, 2025 16:15

அப்போ திருட்டு நகைக்கு கூட கடன் கொடுக்கணும்னு வலியுறுத்துறீங்க. அப்போ கடத்தல் தங்கத்துக்கு? பாராட்டுக்கள்.


ஆரூர் ரங்
மே 27, 2025 14:24

குடியிருப்பு மனைகளை ரியல் எஸ்டேட் முதலீடாக கருதுவதால் நிஜமாகவே சொந்தவீடு கட்டும் எண்ணத்திலுள்ள நடுத்தர மக்கள் இடம் வாங்க முடியவில்லை. மேலும் விற்பனையாகும் தங்கத்தில் முக்கால்வாசி கடத்தல், ஹவாலா மூலம் வருவதுதான். இதனால் பயங்கரவாதிகளே பயனடைகின்றனர். ஆக நிலம் மற்றும் தங்கம் முதலீடுகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் அவசியமே. பான்கார்டு விவரங்கள் இல்லாமல் நகைக்கடன் பெறத் தடைவிதிக்க வேண்டும்.


Varadarajan Nagarajan
மே 27, 2025 14:01

புதிய விதிமுறைகள் மிகவும் வரவேற்கவேண்டியவை. தங்கத்திலும் அதன் வியாபாரத்திலும்தான் அதிக லாபம், வரி ஏய்ப்பு மற்றும் கறுப்புப்பணம் புழங்குகிறது. எந்த நகைக்கடையிலாவது பில் தருகிறார்களா? எல்லாமே எஸ்டிமேட்த்தான். நுகர்வோருக்கு சிறியளவில் வரிகட்டாமல் பலன் என்றால் விற்பனைசெய்வோருக்கு கணக்கிலவராத பணப்புழக்கம். மக்களுக்கும் நாட்டிற்கும் நன்மைபயக்கும் என்றால் அரசியல்வியாதிகள் எதிர்ப்பதுதான் வழக்கம்.


Suppan
மே 27, 2025 13:54

சுய சான்று கொடுத்து கடன் பெறலாம் .


Anantharaman Srinivasan
மே 27, 2025 13:45

புதிய விதிகளை அரசு திரும்ப பெற வேண்டும். மக்கள் பாதிக்கப்படுவரென்று அறிக்கை விட்ட பாமக ராம்தாஸ் இந்த செய்தியை படிக்க வேண்டும்


புதிய வீடியோ