உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஆம்னி பஸ்கள் நிறுத்தம் தொடர்கிறது: தமிழக முதல்வர் தலையிட கோரிக்கை

 ஆம்னி பஸ்கள் நிறுத்தம் தொடர்கிறது: தமிழக முதல்வர் தலையிட கோரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்கள், ஆறாம் நாளாக நேற்றும் இயக்கப்படவில்லை. தமிழக முதல்வர் தலையிட்டு, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்' என, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் இருந்து, கடந்த 7ம் தேதி கேரள மாநில எல்லையை அடைந்த, தமிழக ஆம்னி பஸ்களுக்கு, அம்மாநில போக்குவரத்து அதிகாரிகள், 70 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர், வெளி மாநிலங்களுக்கு ஆம்னி பஸ்களை இயக்காமல் உள்ளனர். ஆறாம் நாளாக, நேற்று ஆம்னி பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதனால், ஆம்னி பஸ்களில் 'டிக்கெட்' முன்பதிவு செய்த பயணியர், கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில், அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களுக்கு, கேரளாவில் 70 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இதேபோல், கர்நாடகா மாநிலத்தில், 60க்கும் மேற்பட்ட தமிழக ஆம்னி பஸ்களுக்கு, 1.15 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இதை கண்டித்தும், வரி முறையை முறைப்படுத்த கோரியும், வெளிமாநிலம் செல்லும் ஆம்னி பஸ்களை நிறுத்தி உள்ளோம். இதற்கு அண்டை மாநிலங்கள் கூறும் காரணம், 2021ல் மத்திய அரசு உருவாக்கிய, 'ஆல் இந்தியா டூரிஸ்ட் பர்மிட்' படி, தமிழகத்தில் இன்று வரை அண்டை மாநில பஸ்களுக்கு, சாலை வரி வசூலிக்கின்றனர், எனவே, நாங்களும் வசூலிக்கிறோம் என்கின்றனர். தற்போது, 600க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், தினமும் 2 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது. அடுத்த சில வாரங்களில் சபரிமலை சீசனும் துவங்க உள்ளதால், தமிழகத்தில் 300க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயக்க வேண்டும். எனவே, தமிழக முதல்வர் தலையிட்டு, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மக்களை பலிகடா ஆக்குவதா? தேசிய அளவிலான அனுமதி சீட்டு பெற்றுள்ள வாகனங்கள், குறித்த காலம் வரை, எந்த மாநிலங்களுக்கும் செல்லலாம். இந்நிலையில், பேராசை காரணமாக, பிற மாநிலங்களின் வாகனங்களுக்கு, தி.மு.க., அரசு கூடுதல் சாலை வரி விதிக்க துவங்கியது. இதனால் பாதிக்கப்பட்ட, கேரளா, கர்நாடகா மாநில ஆம்னி பஸ்களின் உரிமையாளர்கள், அந்தந்த மாநில அரசுகளை வலியுறுத்தி, தற்போது, பிற மாநிலங்களில் தமிழக வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. பிற மாநில முதல்வர்கள் எல்லாம், அந்தந்த மாநில மக்கள் நலனுக்காக செயல்படும் போது, தமிழக முதல்வர் ஸ்டாலின் மட்டும், தனது கூட்டணி கட்சிகளின் நலனுக்காக, தமிழக மக்களை பலிகடா ஆக்கி கொண்டிருக்கிறார். --அண்ணாமலை தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் வரி விலக்கு வேண்டும் தமிழக அரசு, பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும், பிற மாநில பதிவெண் கொண்ட பஸ்களுக்கு, வரி விதித்து வந்ததை காரணம் காட்டி, இப்போது கேரள மற்றும் கர்நாடக அரசுகள், தமிழக பதிவெண் கொண்ட பஸ்களிடம், வரி வசூலிக்க துவங்கி உள்ளன. இந்த புதிய வரி கொள்கை, தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு மிகுந்த சுமையாக மாறியுள்ளது. எனவே, தமிழக அரசு, கேரள மற்றும் கர்நாடக அரசுடன் பேசி, சாலை வரியில் விலக்கு பெற்று, அண்டை மாநிலங்களுக்கு தொடர்ந்து ஆம்னி பஸ்கள் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -வாசன் த.மா.கா., தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ram pollachi
நவ 13, 2025 15:02

உளுந்தூர்பேட்டையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக ஒரு பேருந்து நிலையம் அமைத்து பக்காவாக நிர்வகித்து வருகிறார்கள் ஆனால் தேனீர் விலை எல்லாம் அதிகம், கழிவறை சுத்தமாக உள்ளது. தமிழக அரசு இதுவரை எத்தனை கோடி ரூபாய் வரிவசூல் செய்தது பற்றிய விபரம் தரவில்லை.


தமிழ்வேள்
நவ 13, 2025 09:13

ஆம்னி பஸ் ங்கரதே ஒரு ஃபிராடு சட்ட விரோத போக்குவரத்து முறை.. டூரீஸ்ட் பெர்மிட் உள்ளது மட்டுமே... டிக்கெட் போட்டு டிரிப் அடித்தல் சட்ட விரோதம்.. அவர்களுக்கு முட்டு கொடுக்கும் மக்கள், பொங்கல் தீபாவளிக்கு கட்டண கொள்ளை அடிக்கிறார்கள் என்று புலம்புவது செம காமெடி.ஆக்ஸிடென்ட் ஆனால் கிளெய்ம் கிடைக்காது... ஆனால் அரசு நிவாரணம் தர வேண்டுமாம்....ஹி..ஹி...ஹி


kjpkh
நவ 13, 2025 09:42

ஆம்னி பஸ் கட்டண கொள்ளையை யார் தடுக்க வேண்டும். அரசு கட்டணத்தை நிர்ணயித்தால் மட்டும் போதாது. அதை கண்காணிக்க யார் இருக்கிறார்கள். சும்மா தொடர்பு ஏன் கொடுத்தால் மட்டும் போதுமா.


VENKATASUBRAMANIAN
நவ 13, 2025 08:18

இதுதான் திராவிட மாடல் அரசு. திருடுவது எப்படி என்று ரூம் போட்டு யோசிப்பார்கள்.


அப்பாவி
நவ 13, 2025 06:29

நாம ஒரு ஆம்னி.பஸ் இயக்கினா அதே ரூட்டில் 100 ஆம்னி பஸ் அடுத்த மாநிலக்காரன் இயக்குறான். பெங்களூர் டு கேரளா பஸ்களின் ஊர்கோலத்தை தினமும் பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி அருகே பார்க்கலாம். எல்லாம் கேரளா பஸ்ஸுங்க.


vivek
நவ 13, 2025 07:24

நீயும் பிழைக்காதே, மற்றவர்களும் பிழைக்க விடாதே


Gajageswari
நவ 13, 2025 06:05

One india one rule and one act, one Govt. India GDP will double


சாமானியன்
நவ 13, 2025 05:56

ஆம்னி பஸ் உரிமையாளர்கள் பாவப்பட்ட ஜன்மங்கள். அரசாங்க ஆதரவும் இல்லை. பொதுமக்கள் ஆதரவும் இல்லை. மீடியாக்கள் கண்டபடி எழுதுகின்றன. வரி வசூலா ? மாமூல் வசூலா ! எத்தனை பேருக்குத் தான் லஞ்சம் கொடுப்பான் ? ஈ.எம்.ஐ கட்டக் கூட பணம் தேராது.


naranam
நவ 13, 2025 05:03

திராவிடர்கள் அனைவரும் தமிழக அரசின் போக்குவரத்துத் துறையின் தங்கமான பேருந்துகளில் செல்லலாமே!


சமீபத்திய செய்தி