உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து: எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்பு

கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து: எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கவர்னர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்தை, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன. அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு ஆண்டும், சுதந்திரம் மற்றும் குடியரசு தினத்தன்று, கவர்னர் மாளிகை சார்பில், தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்படும். வரவேற்ற கவர்னர் நேற்று சுதந்திர தினத்தையொட்டி, தேநீர் விருந்து நடந்தது. இதில், ஐகோர்ட் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, தமிழக தலைமைச் செயலர் முருகானந்தம், டி.ஜி.பி. சங்கர் ஜிவால், தெலுங்கானா மாநில முன்னாள் கவர்னர் தமிழிசை ஆகியோர் கலந்து கொண்டனர். அ.தி.மு.க., சார்பில், ராஜ்யசபா எம்.பி. இன்பதுரை, எம்.எல்.ஏ.,க்கள் பாண்டியன், மரகதம் குமரவேல்; பா.ஜ., சார்பில் மாநிலத் தலைவர் நாகேந்திரன், மூத்த தலைவர் எச்.ராஜா, மாநிலச் செயலர் அஸ்வத்தமன்; த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன், தே.மு.தி.க., இளைஞர் அணி செயலர் விஜயபிரபாகரன் ஆகியோர் பங்கேற்றனர். பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் சிவகுமார், வெங்கடேஷ்வரன், சதாசிவம், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், மதுரை ஆதீனம் ஸ்ரீ ஞானசம்பந்த சுவாமிகள், முப்படை அதிகாரிகள், தொழில் அதிபர்கள், கல்வியாளர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அனைவரையும் கவர்னர் ரவி, அவரது மனைவி லட்சுமி ஆகியோர் வரவேற்றனர். கலைநிகழ்ச்சி விழாவில், நாட்டின் சுதந்திரத்திற்காக, ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய, ஜான்சி ராணி லட்சுமிபாய், வேலுநாச்சியார் உள்ளிட்டோரை நினைவுப்படுத்தும் வகையில், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தேநீர் விருந்தில், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான வி.சி., - ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் மற்றும் நடிகர் விஜயின் த.வெ.க. கட்சிகள் புறக்கணித்தன. முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்காத நிலையில், அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

venugopal s
ஆக 16, 2025 15:30

இதற்கு எல்லாம் ரோஷப்பட்டு ஆளுநர் பதவியை ராஜினாமாவா செய்ய முடியும் , துடைத்து விட்டுப் போய்க் கொண்டே இருப்பார்! இதென்ன புதிதா அவருக்கு?


vivek
ஆக 16, 2025 18:13

உன்னையும் பலமுறை வீணா போனவன் என்று சொன்னாலும் உனக்கு சு சோ ரெண்டும் இல்லை


Natarajan Ramanathan
ஆக 16, 2025 21:04

இதே ஆளுநரிடம் பால்டாயிலுக்கு பதவி பிரமாணம் செய்துவைக்க காலில் விழுந்து கெஞ்சியதெல்லாம் மறந்து விட்டதா?


venugopal s
ஆக 16, 2025 21:44

தெருவில் நடந்து போகும் போது தெரு நாய்கள் குரைப்பதால் வெளியே வராமலா இருக்க முடியும்?


vivek
ஆக 16, 2025 22:02

சரி அதுக்கு நீ ஏன் இப்படி குரைக்கிறாய்...


Tamilan
ஆக 16, 2025 13:13

ஒரு கோவிலில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளார்கள் . இது ஒரு tip of the iceberg தான். நாடுமுழுவதும் நேரடியாகவோ மறைமுகமாகவோ இதே கதிதான்


Natarajan Ramanathan
ஆக 17, 2025 05:23

அந்த முன்னாள் ஊழியர் சொன்னதை நம்பி அவன் சொன்ன எல்லா இடத்திலும் ஒருமாதமாக ஜேசிபி இயந்திரங்கள் வைத்து தோண்டி பார்த்தும் இதுவரை உருப்படியாக எதுவுமே கிடைக்கவில்லை. இந்த வதந்தியே மிஷனரிகளின் வேலையோ என்று இப்போது சந்தேகம் வந்துள்ளது.


Svs Yaadum oore
ஆக 16, 2025 13:10

டீ செலவுக்கு எவன் காசு கொடுத்தானாம் என்று கேள்வி ??....சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டுமரம் சிலை ...இது போல ஊரெங்கும் சிலை ....இதெல்லாம் எவன் அப்பன் வீட்டு பணமாம் ??....


Balasubramanyan
ஆக 16, 2025 12:35

The Republic Day and Independence Day celebrations are mandatory and happy occasions to patriots and not to model politicians and their followers . All govt functions of CM, DYCM and ministers are conducted by public money. Mind that. You may not like governor as Thiru Ravi. Anybody ,even donkey is performing that duty we have to obey and respect chair. Present governor is not thanjavur thalaiatti Bommai. I any body boycotts CM function will you accept that.


SJRR
ஆக 16, 2025 12:27

நடிகர் விஜய் இன்னும் முழுநேர நடிகர் தான். அரசியல்வாதியாக இருந்திருந்தால் ஆளுநர் அழைப்புக்கு மரியாதை கொடுத்து யாரையாவது அனுப்பிவைத்து இருப்பார். இவருக்கும் திமுக விற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.


Narayanan Muthu
ஆக 16, 2025 12:24

மக்களிடம் செல்லாக்காசான செல்வாக்கிழந்த எதிர்க்கட்சிகள் என்று போட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.


vivek
ஆக 16, 2025 12:57

சொத்தை முத்து என்று பலமுறை சொன்னாலும் இதுக்கு புரிய மாட்டேங்குது...


டீமாஸ்டர்
ஆக 16, 2025 09:17

யாரும் சொந்தக் காசுல டீ குடுக்கலை.


V Venkatachalam
ஆக 16, 2025 22:10

எனக்கு தெரிந்த ரகஸியம் சாராய வியாபாரி மட்டுமே சொந்த காசில டீ குடிக்கிறாரு.ஆனா அவரு ஓசி காருல போறாரு. ஓசி கார் குடுக்க ஆளுங்க இருக்கும் போது சொந்த காரில் போவது கேவலம்.சொந்த கார் வச்சிக்கிறது அதை விட கேவலம்.


ராஜ்
ஆக 16, 2025 08:50

அரசு பணத்தில் மக்கள் வரிப்பணத்தில் ஆடம்பர தேநீர் விருந்து தேவைதானா இந்த மரபை ஒழித்து கட்ட வேண்டும் பலர் ஒருவேளை உணவுக்கு அல்லல்படுகிறார்கள் பசியால் மரணம் அடைகிறார்கள் அப்படி இருக்கையில் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளை சேர்த்துக் கொண்டு ஆடம்பர தேநீர் விருந்து தேவையா.


V Venkatachalam
ஆக 16, 2025 22:20

எத்தனை வருஷத்துக்கு இந்த பஞ்ச பாட்டை பாடுவீங்க? கொரோனா காலத்தில் இருந்தே மோடி அரசு இன்று வரை ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவச அரிசி குடுக்குதே. சாராய யாவாரி தமிழ் நாடு முதன்மை மாநிலம் ன்னு சொல்றாரே அது டாஸ்மாக் குடியில் இருக்கும்போது பேசியதா?


Natarajan Ramanathan
ஆக 16, 2025 08:37

அடுத்த ஆண்டு தீயமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கண்டிப்பாக தேநீர் விருந்தில் பங்குபெறுவார்கள். காரணம் உங்களுக்கே தெரியும்.


Svs Yaadum oore
ஆக 16, 2025 07:24

விடியல் அரசு ஆட்சிக்கு வந்த பின், ஆவின் நிறுவனம் பால் பாக்கெட்டுகளில் கடந்த நான்கு ஆண்டுகளாக, சுதந்திர தினம், குடியரசு தினம், தேசிய பால்வள தினம் ஆகியவற்றுக்கு வாழ்த்து செய்தி அச்சிடுவது நிறுத்தியுள்ளதாம் ....விடியலுக்கு சுதந்திர தினம் என்பது சமூக நீதி மத சார்பின்மையில் சேர்ந்தது கிடையாதாம் ....