உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருத்துவ படிப்புக்கு விண்ணப்பம் நீட்டிக்க பெற்றோர் கோரிக்கை

மருத்துவ படிப்புக்கு விண்ணப்பம் நீட்டிக்க பெற்றோர் கோரிக்கை

சென்னை:'மாநில ஒதுக்கீட்டு மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க, கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும்' என, பெற்றோர் மற்றும் மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், 9,200 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இவற்றில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 496 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.அதேபோல், 1,900 பி.டி.எஸ்., இடங்களில், 126 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. மொத்தம் 11,200 மருத்துவ இடங்களுக்கு, மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு, ஜூன் 6ம் தேதி துவங்கி, 29ம் தேதி முடிவடைந்தது. இதில், 72,943 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், எய்ம்ஸ், மத்திய நிறுவன கல்வி நிறுவனங்கள், 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களுக்கு விண்ணப்பிக்க, மத்திய மருத்துவ கவுன்சிலிங் இன்றும் அறிவிப்பு வெளியிடவில்லை.இதற்கான நடைமுறை துவங்கி, முதற்கட்ட கவுன்சிலிங் முடிவடைந்த பிறகு தான், மாநில அளவிலான சேர்க்கை நடக்கும். ஆனால், அகில இந்திய ஒதுக்கீட்டு கவுன்சிலிங் விண்ணப்பம் துவங்காத நிலையில், மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான விண்ணப்ப பதிவு துவக்கப்பட்டு முடிவடைந்துஉள்ளது.இது, மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, 'மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான சேர்க்கை விண்ணப்பத்திற்கு, மேலும் அவகாசம் வழங்க வேண்டும்' என, பெற்றோர் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ