உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பயணியர் நிழற்குடை மீண்டும் அமைப்பு

பயணியர் நிழற்குடை மீண்டும் அமைப்பு

ராயபுரம் மண்டலம், சிந்தாதிரிப்பேட்டையில் அருணாச்சலம் சாலை உள்ளது. இச்சாலையில், கடந்த ஆண்டு மழைநீர் வடிகால்வாய் பணி மேற்கொள்ளப்பட்டபோது, சிந்தாதிரிப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் இருந்த நிழற்குடை அகற்றப்பட்டது.வடிகால்வாய் பணி முடிந்தும், மீண்டும் நிழற்குடை அமைப்பதற்கான நடவடிக்கையை, மாநகராட்சியினர் மேற்கொள்ளவில்லை. இதனால் வெயிலிலும், மழையிலும் நின்று, பயணியர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.இதுகுறித்து நம் நாளிதழில் புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதையடுத்து, அகற்றப்பட்ட இடத்திலேயே மீண்டும் நிழற்குடையை, மாநகராட்சி ஊழியர்கள் அமைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஜூன் 26, 2025 12:24

அங்கேயும் அண்ணாரின், சாரி, அப்பாவின் விளம்பரம். மக்கள் வரிப்பணத்திலிருந்து அமைந்த நிழற்குடைக்குள் அண்ணாரின், சாரி, அப்பாவின் படம் எதற்கு? நாட்டுக்காக உயிர் துறந்த தியாகிகளின் படத்தை போடுங்கள், அல்லது பஹல்காம் போன்ற தாக்குதலில் வீர மரணம் அடைந்த நமது ராணுவ வீரர்களின் படத்தை போடுங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை